வெள்ளி, 26 நவம்பர், 2010

கலிபோர்னியா மாநிலத் தலைமை வழக்குரைஞராகிறார் தமிழ் மரபுப்பெண்

அமெரிக்க அரசின்  தலைமை வழக்குரைஞராகப் பொறுபபேற்றுள்ள கமலா ஆரிசு அவர்களுக்குப் பாராட்டுகள். உண்மைக்குக் குரல் கொடுத்தும்   தமிழர்க்குக் குரல் கொடுத்தும் சிறப்பாகப் பணியாற்ற வாழ்த்துகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவனஅமெரிக்க அரசின்  தலைமை வழக்குரைஞராகப் பொறுபபேற்றுள்ள கமலா ஆரிசு அவர்களுக்குப் பாராட்டுகள். தமிழ்  நலனில் கருத்து செலு்த்தி  தமிழர்க்குக் குரல் கொடுத்துச் சிறப்பாகப் பணியாற்ற வாழ்த்துகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கலிபோர்னியா மாகாண அட்டார்னி ஜெனரலாகிறார் தமிழ் வம்சாவளிப் பெண்

First Published : 26 Nov 2010 04:29:12 AM IST


வாஷிங்டன், நவ. 25: அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாண அட்டார்னி ஜெனரலாக (அரசு தலைமை வழக்கறிஞர்) தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன் சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவர். சியாமளா, அமெரிக்காவில் குடியேறி அங்கு வசிக்கும் ஆப்பிரிக்கர் ஒருவரை மணந்து கொண்டார். இந்த, தம்பதிகளின் கமலா ஹாரிஸ் இப்போது கலிபோர்னியா மாகாண அட்டார்னி ஜெனரலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் அந்த மாகாணத்தில் இப்பதவிக்கு வரும் முதல் பெண் என்ற பெருமையையும் முதல் வெள்ளையர் அல்லாதவர் என்ற பெருமையையும் கமலா பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் இந்து, கிறிஸ்தவ வழிபாட்டு முறைகள் இரண்டையுமே கடைபிடித்து வருகிறார். இரு மதப் பண்டிகைகளையும் கொண்டாடுவது அவரது வழக்கமாக உள்ளது.கடந்த 3 வாரங்களாக அட்டார்னி ஜெனரலை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா போட்டியிட்டார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் ஸ்டீவ் கூலி போட்டியிட்டார். இதில் கமலா அமோக வெற்றி பெற்று அட்டார்னி ஜெனரலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக