பாராட்டப்பட வேண்டிய நல்ல முயற்சி. பல நாடுகளிலும் இது போல் கருத்தரங்கங்கள் நடத்திப் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்தி அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். ஈழ மலர்ச்சிக்கும் இது வழி வகுக்க வேண்டும். தமிழ் ஈழம் வெல்க! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 26 Nov 2010 03:40:34 PM IST
கொழும்பு, நவ.26- பிரிட்டனில் உள்ள ரோகம்டன் பல்கலைக்கழகத்தில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்த ஆய்வரங்கம் நடைபெறவுள்ளதாக நாடுகடந்த தமிழ் ஈழ அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து அதன் தகவல்துறை அமைச்சர் சாம் சங்கரசிவம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போராளிகள் போன்றோருக்கு அவசியமான உதவிகளை செய்வதற்கு தனி நிதியமைப்பு உருவாக்க அமைச்சரவையால் முடிவெடுக்கப்பட்டது. இந்த நிதி பரிமாற்றங்களை மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போராளிகள் நலன் பேணல் அமைச்சர் மேற்பார்வை செய்வார். நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் ஆதரவில் பிரிட்டனில் உள்ள ரோகம்டன் பல்கலைக்கழகத்தில், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆய்வரங்கம் நிகழ்த்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இனஒழிப்பு, போர்க்குற்ற விசாரணைகளுக்கும் தடுப்புக்குமான அமைச்சர் மேற்கொள்வார். இதில், குயின்மேரி பல்கலைக்கழகம், மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மாணவர் சங்கங்களும் இணைந்து செயற்படவுள்ளார்கள். மேலும், நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் ஒவ்வொரு அமைச்சகங்களும் வெளிநாடுகளில் தமது அலுவலர்களை நியமிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்


By வாணி குமார்
11/26/2010 11:19:00 PM
11/26/2010 11:19:00 PM


By வாணி KUMAR
11/26/2010 11:17:00 PM
11/26/2010 11:17:00 PM


By ராபர்ட் லூயிஸ்
11/26/2010 9:30:00 PM
11/26/2010 9:30:00 PM


By maaraththamizhan
11/26/2010 5:23:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *11/26/2010 5:23:00 PM