ஈழத்தமிழர்களை அழிப்பதில் இந்தியா அதிகாரப பகிர்வு பெற்றுத் தன் படை வீரர்கள் மூலமும் படைக்கருவிகள் மூலமும் எரிகுண்டுகள் மூலமும் கொத்துக் குண்டுகள் மூலமும் சுடுகாட்டு அமைதியை ஏற்படுத்தி விட்டது. எஞ்சியவர்களையும் அழிக்க அதிகாரப் பகிர்வு கேட்கிறதா? ஈழத்தமிழர்களுக்குத் தேவை அதிகாரப் பகிர்வு அல்ல. அவர்கள் மண்ணில் உரிமையுடன் வாழவும் ஆளவும் தமிழ்ஈழ அரசே உடனடித் தேவை. 300 ஆண்டுக்காலப் போராட்டதில் இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுபட்டு இருக்கும் பொழுது ஈழத்தமிழர்களின் குறுங்காலப் போராட்டம்
தோல்வி அடைந்துள்ளதாகக் கருதுவது தவறு. காலம் ஒருநாள் மாறும். ஈழம் நன்கு மலரும். ஞாலம் அதனால் மகிழும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தோல்வி அடைந்துள்ளதாகக் கருதுவது தவறு. காலம் ஒருநாள் மாறும். ஈழம் நன்கு மலரும். ஞாலம் அதனால் மகிழும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 26 Nov 2010 05:05:26 AM IST
Last Updated : 26 Nov 2010 05:33:12 AM IST

கொழும்பு, நவ. 25: அதிகாரப்பகிர்வே இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். ÷4 நாள் அரசு முறைப் பயணமாக எஸ்.எம். கிருஷ்ணா, இலங்கைக்கு வியாழக்கிழமை பயணம் மேற்கொண்டார். கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியது: ÷இலங்கையில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் முக்கியமாக தமிழர்கள் பயன் பெறும் வகையில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ள தனது அரசு உறுதிபூண்டுள்ளதாக இலங்கை அதிபர் ராஜபட்ச கூறியுள்ளார். ÷இலங்கையில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஆயுதப் போராட்டம் முடிந்து அமைதி திரும்பியுள்ளது. இனி நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் வகையில் அர்த்தமுள்ள பேச்சுகள் மூலம் அதிகாரப்பகிர்வு மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை இந்தியாவுக்கு உள்ளது. எனது இந்தப் பயணம் அதிகாரப்பகிர்வு பேச்சுகளுக்கு தொடக்கமாக அமையும். ÷கடந்த ஜூன் மாதம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன், ராஜபட்ச பேசினார். அப்போது அதிகாரப்பகிர்வு குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். ÷போரினால் இடம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் இந்த ஆண்டு முடிவதற்குள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள் என்றும் இலங்கை இந்தியாவிடம் உறுதியளித்துள்ளது. இலங்கையில் போர் முடிந்த காலகட்டத்தில் 3 லட்சம் தமிழர்கள் பல்வேறு முகாம்களில் தங்கியிருந்தனர். இப்போது 17 ஆயிரம் முதல் 20 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில் உள்ளதாகத் தெரிகிறது. இவர்களையும் விரைவில் சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் என்றார் எஸ்.எம். கிருஷ்ணா. ÷இலங்கை அதிபர் ராஜபட்ச உள்பட அந்நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகள் பலரை கிருஷ்ணா சந்தித்துப் பேசவுள்ளார். இலங்கைத் தமிழ் தலைவர்களையும் அவர் சந்திக்கிறார். ÷இலங்கையின் தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்துக்கும் கிருஷ்ணா செல்ல இருக்கிறார். முன்னதாக 1989-ல் இந்திய வெளியுறவு அமைச்சராக இருந்த கே.நட்வர் சிங், யாழ்ப்பாணம் சென்றார். அதற்குப் பின் இப்போது கிருஷ்ணா அங்கு செல்கிறார்.
கருத்துகள்


By நாடோடி
11/26/2010 11:05:00 PM
11/26/2010 11:05:00 PM


By தஞ்சை ராஜு
11/26/2010 12:52:00 PM
11/26/2010 12:52:00 PM


By தஞ்சை ராஜு
11/26/2010 12:47:00 PM
11/26/2010 12:47:00 PM


By tamilan
11/26/2010 11:24:00 AM
11/26/2010 11:24:00 AM


By Karumurugan
11/26/2010 10:44:00 AM
11/26/2010 10:44:00 AM


By Tamilan In Qatar
11/26/2010 8:36:00 AM
11/26/2010 8:36:00 AM


By Elango
11/26/2010 8:30:00 AM
11/26/2010 8:30:00 AM


By Nallan
11/26/2010 8:09:00 AM
11/26/2010 8:09:00 AM


By Ram
11/26/2010 8:09:00 AM
11/26/2010 8:09:00 AM


By pachaithamizhan
11/26/2010 6:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
11/26/2010 6:34:00 AM