வியாழன், 12 ஆகஸ்ட், 2010

மூதறிஞர்  இராசாசி சுதந்திராக் கட்சியைத் தோற்றுவி்த்து அதன் தலைவரான பின்பு காங்கிரசு தலைவர்களுள் ஒருவர் எனக் குறிப்பது தவறு. கலைஞர் மு.கருணாநிதி எனக் குறிப்பிட்டு விட்டு அண்ணாதுரை என்று குறிப்பதும் தவறு. அறிஞர் அண்ணா என்றே குறிப்பிட வேண்டும். வெவ்வேறு கட்டுரைகளில் இருந்து எடுக்கப்பட்ட கோவையாகத் தெரிகிறது. கலைவாணர், நடிகவேள் என்றெல்லாம் உரிய பட்டங்களுடன் முன்னோடிக் கலைஞர்களைக் குறிப்பதே நாம்  அவர்களுக்குச் செலுத்தும் மரியாதையாகும். ஒரிருவரை மட்டும் அடைமொழி அல்லது பட்டத்துடன் குறிப்பிட்டு விட்டுப் பிறரை அவ்வாறின்றிக் குறிப்பது ஊடக அறமாகாது. மணா இதில் கருத்து செலுத்த வேண்டுகின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக