புதன், 11 ஆகஸ்ட், 2010

டாஸ்மாக்' கடைகள் திறந்திருக்கும்: தமிழக அரசு

First Published : 11 Aug 2010 03:20:22 AM IST


சென்னை, ஆக. 9: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளை திறந்து வைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  எட்டு மணி நேர வேலை, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, "டாஸ்மாக்' ஊழியர்கள் புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.  இந்த நிலையில், கடைகளை திறந்து வைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. காவல் துறையினரின் உதவியுடன் இந்தப் பணி மேற்கொள்ளப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, தலைமைச் செயலக அதிகாரிகள் கூறியது: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 700 மதுபானக் கடைகள் உள்ளன. பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து கடைகளுக்கு வராமல் இருந்தால், அந்தக் கடைகளை இயக்குவதில் அரசுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆள் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் மாற்றுத் துறைகளில் உள்ள பணியாளர்களையும் ஈடுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவித்தனர்.  எனவே, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் புதன்கிழமை திறந்திருக்கும் எனத் தெரிகிறது. முன்னதாக, மது விற்பனை இருக்காது என்ற எண்ணத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு டாஸ்மாக் கடைகளில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் நிரம்பி வழிந்தது.
கருத்துக்கள்

குறளோவியம் எழுதிய கலைஞர்அவர்கள் இப்படியாவது மதுக்கடைகளைத் திறந்துவைக்க வேண்டுமா என்ன? இதை வாய்ய்பாகக் கொண்டு படிப்படியாக மதுக்கடைகளை மூடலாமே! சாதனை மன்னரின் கணக்கில் இதுவும் ஒரு சாதனையாகச் சேரட்டுமே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/11/2010 4:36:00 AM
புரட்சித் தலைவி ஆட்சியோடு ஒப்பிட்டுப் பேசுவதற்கு உமக்கு அருகதை இருப்பதாக நான் கருதவில்லை ! தொடக்கத்தில் இந்த துறையால் மது எவ்வளவு விற்பனை செய்யமுடியும் அரசுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று தெரியாத நிலையில் நியமிக்கப் படும் ஊழியர்களுக்கு சரியான ஊதியத்தையோ அல்லது உரிமைகளையோ கொடுத்துவிட முடியாது என்பதனை அனைவரும் அறிவர் ! மது விற்பனை மூலம் அரசுக்கு கோடி கோடியாக பணம் கொட்டும் போது அந்த தொழிலாளர்களுக்கும் உரிய உரிமையினை வழங்க வேண்டியது அரசின் கடமை தானே ! அவர்களும் வாழப் பிறந்தவர்களே ! அவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் கனவுகள் இருக்கும் அல்லவா ? எழுந்து உட்கார முடியாமல் மல்லாக்கவே படுத்துக் கிடக்கும் உனக்கு எவ்வளவு ஆசைகள் ! தூக்க எடுக்க கொட்டையை தாங்க என்று எத்தனை எடுபிடிகளை வைத்துக் கொண்டு மக்கள் பணத்தை சூரையாடுகிறாய் ! மக்கள் விவரம் புரிந்தவர்கள் ! இனி உன் கப்சா எடுபடாது ! புரட்சித் தலைவியின் பொன்னான ஆட்சியோடு ஒப்பிட்டு உன் மரியாதையை கெடுத்துக் கொள்ளாமல் அனைவரையும் அரசு ஊழியர்களாக அங்கீகரி ! அதற்கான உரிமைகளை கொடு ! சுமையாக இராமல் நேரத்தோடு ஓய்வு எடு ! தமிழினத்தை வாழ விடு ! நன்றி பெர
By rajasji
8/11/2010 4:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக