இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளிட்ட 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் சிங்கள இனத்தவர் குடியமர்த்தப்பட்டு வருவதாக அந்நாட்டு தமிழ் இணைய தளச் செய்திகள் தெரிவிக்கின்றன.இதுதொடர்பாக அந்த இணையதளங்களில் வெளியாகியுள்ள செய்தியின் விவரம்:விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்த பின்னரும், தமிழர்கள் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழர் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதாக இலங்கை அரசு கூறி வந்தாலும் அவ்வாறு செய்யாமல் தாமதப்படுத்தி வருகிறது.மாறாக தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் தொடர்ந்து குடியேற்றப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தற்போது திருகோணமலை மாவட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அங்கு சிங்களவர்களை குடியமர்த்தும் பணி தொடங்கியுள்ளது.இந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் ஏராளமான விவசாய நிலமும் அடங்கும். இவ்வாறு அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

அதிகாரிகளையும் ஊடகத்தினரையும் அனுப்பி வைக்கலாம். அவர்கள் கனவு நனவாவதை நேரடியாகப் பாரக்கும் வாய்ப்பு கிட்டும் அல்லவா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/9/2010 3:09:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *8/9/2010 3:09:00 PM