செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

கடிதம் எழுதுவதை நிறுத்திவிடு.


Maniblog

Monday, August 9, 2010

கடிதம் எழுதுவதை நிறுத்திவிடு.

கடிதம் எழுதும் கதாநாயகரே,
எழுதி, எழுதி எங்கள் தமிழரை
ஈழத்தில் எழச்செய்வாய் என
எண்ணினோம். ஆனால் நீங்கள்
எழுதியது என்ன என்று எங்களுக்கு
தெரிவதற்கு முன்பே எங்கள் இனம்
அங்கே அழிக்கப்பட்டதே. அதற்கா
அப்படி எழுதி தள்ளினாய்?
அய்யா கடிதம் எழுதியுள்ளார் என்று
எங்கள் சொந்தங்களிடம் சொன்னோம்.
யாரும் உங்கள் கடிதத்தின் மூலம்
ஈர்க்கப்படவில்லையே?
உங்களை ஈழத்தமிழர் நம்ப
மறுக்கிறார்களே? ஏன் தலைவா?
அவர்களுக்கு புரிந்துவிட்டதா?
எங்களுக்கு புரியாதது  அவர்களுக்கு?
உங்களை நாங்கள் மட்டும்தான்
இந்த தமிழ் கூறும் நல்லுலகத்தில்
நம்பிக்கொண்டு இருக்கிறோமா?
உலகத்தமிழர்கள் எங்களை
பரிகாசம் செய்கிறார்களே?
உன்னை நம்புவதால் ஏன் இந்த
பரிகாசம் தலைவரே?
எங்களுக்கு தமிழ்நாட்டில் வேறு யார்
இப்படி தினந்தோறும் தமிழ், தமிழர்
என பேசுகிறார்கள்? அதற்காகத்தானே
நாங்கள் நம்புகிறோம்? எங்களையும்
நடுத்தெருவில் இழுத்துவிடத்தான்
உன் கடிதங்கள் உதவுமா தலைவா?
நீ இப்போது நமது மீனவர்களுக்காக
கடிதம் எழுதுகிறாயே தலைவா
வேண்டாம் நிறுத்திவிடு.
உன் கடிதங்கள் எங்கள் மீனவரை
முழுமையாக அழிப்பதற்குள்
கடிதம் எழுதுவதை நிறுத்திவிடு.
--
நான்மேற் கொள்ளும் உறுதிமொழியாவது தமிழனாகிய நான் உலகின் எத்திசையில் வாழ்ந்தாலும் தமிழீழமே எனது இலட்சியம்! இந்த இலட்சியத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்பதுடன் சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழ தனியரசான எனது வரலாற்று மண்ணின் மீட்சிக்காக அயராது உழைப்பேன் என இந்நாளில்உறுதி மொழி எடுத்துக்கொள்கிறேன்!
'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

இன்னலும் துன்பமும் புலிகளுக்கு வருவது இயற்கை. அதை அவர்கள் வெல்வதும் இயற்கை!
வெட்ட வெட்ட தழைப்போம்! பிடுங்க பிடுங்க நடுவோம்!! அடிக்க அடிக்க அடிப்போம்!!! அடைக்க அடைக்க உடைப்போம்!!!! அழிக்க அழிக்க எழுதுவோம்!!!! விழ விழ எளுவோம்!!!!.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக