திங்கள், 9 ஆகஸ்ட், 2010

திமுக பேச்சாளரை நீக்கியது போல் கலைஞரைக் குறை சொல்லும் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்ல வாய்ப்பாக இந்நிகழ்வைக் கருதலாம். ஆனால், உண்மையில் குதியாட்டம் போடும் குரங்கிற்குக் கள்ளையும் ஊற்றிக் கொடுப்பதுபோல்தான் இந்நிகழ்வு அமையும். கோவன் ஒவ்வொருவராக நீக்கச் சொன்னால் இவர்கள் நீக்கிக் கொண்டே இருப்பாரகளா? கோவனின் கும்மாளம் பெருகுவதுடன் மேலும் பலர் குதியாட்டம் போட்டு ஆட்சியையும் தலைவர்களையும் தாக்கத் தொடங்க வாய்ப்பு ஏற்படுத்துவதாகத்தான் அமையும். ஊடகங்கள் முதன்மை கொடுப்பது தவிர பொது மக்களால் ஒதுக்கப்பட்ட கோவனைக் கண்டு தி.மு.க. அஞ்சுவது ஏன்? இதற்கு மாற்றாகத் தி.மு.க.வின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் பதவியைக் கோவனுக்கு அளிக்கலாம். பாயில் இருந்து மூட்டைப்பூச்சி தொந்தரவு கொடுத்தால் பாயை எரிப்பார்களா? மக்களால் புறக்கணிக்கப்பட்ட யாரையும் பெரிய ஆளாக ஆக்க வேண்டா. வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/9/2010 3:01:00 PM
நோண்டி நு(நொ)ங்கு எடுக்கப் போவது கோவனா? கலைஞரா? 2) காமராசர் தானே விரும்பி (மூத்த தலைவர்கள் பதவியைவிட்டு விலகிக் கட்சிப்பணியை முடுக்கிவிடும் திட்டம் ஒன்றை அறிவித்து அதன்படி) முதலமைச்சர் பதவியை விட்டு விலகியவர். அப்படியிருக்க காங்.ஆட்சியைத் தங்க வைக்க அவர் எப்படி இலவய வானொலியைத் தந்திருக்க முடியும்? 3.)காமராசரே காமராசர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்ட பிறகு, காங். விட்டு விலகிய பிறகு காமராசரை மதிக்காத காங்கிரசு எப்படி காமராசர் ஆட்சி என்று பேச முடியும்? 4.) காங்.தலைவர் த.பாலு, தன் பேச்சைக் கேட்காத கோவன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்கள். 5.) ஒருவேளை கட்சியை உடைக்க கோவனும் அதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம் என்றும் மக்கள் எண்ணுகிறார்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/9/2010 2:51:00 PM 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக