ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி அமைய வாய்ப்பு: ராமதாஸ்


மதுரை, ஆக. 7: தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அல்லாத, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைய வாய்ப்புள்ளது என்று பா.ம.க. நிறுவனர் எஸ்.ராமதாஸ் தெரிவித்தார்.மதுரையில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:1967-ம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு 43 ஆண்டுகளாகியும் காங்கிரஸ் ஆட்சியமைக்க முடியவில்லை. ஒவ்வொரு முறை தேர்தல் வந்தபோதும் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்தே காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டது. 1989-ம் ஆண்டு மட்டும் தனித்துப் போட்டியிட்டது. இப்போதைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் தலைமையில் திராவிடக் கட்சிகள் அல்லாத கூட்டணி அமைய வாய்ப்புள்ளது.1991-தேர்தலிலும், 1996-தேர்தலிலும் சமூக நீதிக் கூட்டணியை பாமக அமைத்தது. கடந்த 91-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாமக ஒரு இடத்திலும், திமுக ஒரு இடத்திலும் வென்றது. 96-ம் ஆண்டு தேர்தலில் பாமகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைத்தன. வரும் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டாலும் 20 இடங்களில் வெல்லும் நிலையில் உள்ளது. மீண்டும் அதுபோன்ற சமூக நீதி கூட்டணி உருவாகவும் வாய்ப்பு உள்ளது.முன்பு அதிமுக கூட்டணியிலிருந்து பாமக தானாக வெளியேறியது. திமுக கூட்டணியில் இருந்தபோது பாமகவை திமுக வெளியேற்றியது. குரு பேசிய பேச்சின் விளைவாகவே இது நடந்தது. பின்னர் திமுக பொதுக்குழு கூடி பாமகவை மீண்டும் சேர்த்துக்கொள்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பாமக தலைவர் கோ.க.மணி தலைமையில் ஐவர் குழு திமுக தலைமையுடன் பேச்சு நடத்தியது. ஆனால், அதன்பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை. மீண்டும் பேச்சுக்கு அழைத்தால் செல்வோம்.தேமுதிக இடம்பெறும் அரசியல் கூட்டணியில் பாமக இடம்பெறுமா என்றும் திமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முன்பு எதிரணியிலிருந்து அழைத்தால் பேசுவீர்களா என்றும் கேட்கிறீர்கள். அதுபற்றி இப்போது நான் ஒன்றும் கூறமுடியாது. அரசியலில் எதுவும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தரப் பகைவர்களும் இல்லை. இப்போதைய அரசியல் சூழ்நிலையில் பாமக எந்தக் கூட்டணியிலும் இல்லை என்பதுதான் உண்மை என்றார் ராமதாஸ்.
கருத்துக்கள்

தேர்தல் தோல்வியைத் தாங்கும் மனப்பக்குவம் இன்றிச் சாதிக் கொடியைக் கையில் தூக்கிய இராமதாசு அதுவும் பயனளிக்காது என எண்ணிப் படுகொலைக்காரனின் காலடியில் தவம் கிடந்து தாங்க எண்ணுவது வெட்கக்கேடான செயல் என்பதை உணர வேண்டும்.ஊடகங்களின் வாயிலாகத் தமிழினப் பற்றை ஊட்டும் அவர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
8/8/2010 5:30:00 AM
காங்கிரசிற்கு அப்படிப்பட்ட எண்ணம் இருப்பது உண்மைதான். 67இல் ஓட ஓட விரட்டப்பட்ட காங்.ஐ மக்கள் இன்னும் ஏற்க ஆயத்தமாகவில்லை. கடந்த முறை தி.மு.க.வில் இருந்தமையால் அதற்குரிய பழைய நற்பெயரால் ஓரளவே பிழைத்தது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் தமிழின உணர்வாளர்கள் அங்கிருப்பினும் தலைமையின் மீதான தமிழினப்பகைக் கருத்தின் அடிப்படையில் அக்கூட்டணி மண்ணையே கவ்வியிருக்கும். இரண்டிலுமல்லாத வேறு கூட்டணியில் இருந்தால் அல்லது அமைத்தால் துடைத்தெறியப்பட நல்வாய்ப்பாக அமையும்.தமழினப் படுகொலை புரிந்த மொழியழிப்பு இனஅழிப்பு வேலையில் தொடர்ந்து ஈடுபடும் காங். தலைமையில் பா.ம.க. இணைந்தால் அதன் தமிழ் சார் கொள்கையாவும் பதவி ஆசைக்கான முகமூடியே என்றாகும். அதற்கு அக்கட்சி காங்.கிலேயே தன்னை இணைத்துக் கொள்வது நன்று. தேர்தல் தோல்வியைத் தாங்கும் மனப்பக்குவம் இன்றிச் சாதிக் கொடியை க் கையில் தூக்கிய இராமதாசு அதுவும் பயனளிக்காது என எண்ணிப் படுகொலைக்காரனின் காலடியில் தவம் கிடந்து தாங்க எண்ணுவது வெட்கக்கடோன செயல் என்பதை உணர வேண்டும்.ஊடகங்களின் வாயிலாகத் தமிழினப் பற்றை ஊட்டும் அவர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
8/8/2010 5:29:00 AM
என்னத்த சொல்லி என்னத்த செய்ய ? இதெல்லாம் அப்படித்தான், எழர நாட்டு சனி, முக்கா மூளை,அர வேட்காடு... ஒக்க மக்க நீ எபோடா மண்டைய போடுவே, மரவெட்டி தேவிடியா மொவனே.
By sivaji
8/8/2010 5:16:00 AM
1,காங்கிரசுடன் உறவாடிக் கொள்ளவும் தகுதியானவர்.யாருடன் கூட்டணி வைத்தால் என்ன! மகனுக்கு பதவி கிடைத்தால் போதும். 2,மக்களுக்கு காங்கிரசை ஓரம் கட்டத்தெரியும், உங்களையும் ஓரம் கட்டத் தயாராக உள்ளார்கள் Good & Real Command This Mr.அண்ணாத்தம்பி I Follow your Command
By Tamilan In Qatar
8/8/2010 2:30:00 AM
ramadas needs somebody to accept him as alliance partner. If it is possible for him to contest alone without any alliance and according to him he may get 20 MLAs is unimaginable..Then why he is waiting and continuously knocking the door of DMK ?
By rangaraj
8/8/2010 2:20:00 AM
யோ!உமக்கு வெக்கம் மாணம் சூடு சொரனை இருக்கா? இரமதாசை உம்மைத்தான்?உமது கட்சையும் உம்மையும் மக்கள் அடியோடு வெருக்கின்றனர் அது மட்டு அல்ல தமிழக தேர்தல் ஆனையம் மானில கட்சியில்யிருந்து பா ம க, மா தி மு க ஆகிய இருகட்சியும் நீக்க உள்ளனர்?ஆஆஆஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ...................................................................
By syed masood பேட்டை கடையநல்லூர்
8/8/2010 2:13:00 AM
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் உறவாடி விட்டு விட்டு வந்த நீர் தான் காங்கிரசுடன் உறவாடிக் கொள்ளவும் தகுதியானவர். யாருடன் கூட்டணி வைத்தால் என்ன! மகனுக்கு பதவி கிடைத்தால் போதும். மக்களுக்கு காங்கிரசை ஓரம் கட்டத்தெரியும். உமது மகன் மத்திய மந்திரியாக இருந்தபோது மருத்துவத்துறையே ஊழல் மயமாக இருந்ததும் அனைவருக்கும் தெரியும். எனவே உங்களையும் ஓரம் கட்டத் தயாராக உள்ளார்கள்.
By அண்ணாத்தம்பி
8/8/2010 1:20:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக