வியாழன், 12 ஆகஸ்ட், 2010

கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய எஸ்.எம். கிருஷ்ணா மறுப்பு


புதுதில்லி, ஆக.11- கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து மறுபரிசீலனை செய்ய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மறுத்துள்ளார்.
மாநிலங்களவையில் இதுதொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளிக்கையில் அவர் பேசியதாவது:
இலங்கையுடன் எப்போது பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதில் மீனவர் பிரச்னையும் இடம்பெற்று வருகிறது. இதுகுறித்து அவர்களுடன் மீண்டும் பேசுகிறேன்.
இலங்கை கடற்பகுதிக்குள் நமது மீனவர்கள் நுழையாதவாறு பார்த்துக்கொள்ளப்பட வேண்டும். விதிமுறைகளை பின்பற்றும் மீனவர்கள் பாதுகாப்பாகவே இருப்பார்கள்.
எனினும், கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து நாம் தன்னிச்சையாக மறுபரிசீலனை செய்ய இயலாது. சர்வதேச கடல் எல்லை விதிமுறைகள்படி தான் நாம் நடவடிக்கை எடுக்க முடியும்.
அடுத்த முறை இலங்கை செல்லும்போது, மீனவர் பிரச்னை குறித்து நிச்சயமாக ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.
கருத்துக்கள்

விதிமுறைகளை பின்பற்றும் மீனவர்கள் பாதுகாப்பாகவே இருப்பார்கள் என்னும் பொய்யைப் பாராளுமன்றத்தில் சொன்னதற்காக இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காங். ஆட்சியில் தொடர்ந்தால் தமிழ்நாட்டைக்கூடச் சிங்களனுக்குத் தாரை வார்ப்பார்கள். தமிழன் தமிழனாக வாழத் தமிழ்நல உணர்வுகள் மக்களுக்குத் தேவை. அவ்வுணர்வு பெருகாதவரை இந்தியப் போர்வையில் தமிழன் அழிக்கப்படுவான். 
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக