வியாழன், 12 ஆகஸ்ட், 2010

இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு புதிய வரைபடங்கள்


கொழும்பு, ஆக.11- இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்ளுக்கு புதிய வரைபடங்கள் தயாரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகவலை இலங்கை நில அளவைத்துறையின் ஆணையர் எஸ்.எம்.டபிள்யூ. பெரேரா கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் நிலங்கள், சுற்றுலா தலங்கள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட தகவல்கள் இந்த வரைபடத்தில் இடம்பெறும் என்றும், மேம்பாட்டுப் பணிகளுக்கு இந்த வரைபடங்கள் உதவியாக இருக்கும் என்றும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

புதிய வரைபடங்களில் எத்தனைத் தமிழ்ப்பகுதிகள் சிங்களப் பகுதிகளாகக் காட்டப்பட்டிருக்கும் எனத் தெரியவில்லை. இலங்கை முழுமைக்கும் 1900 ஆம் ஆண்டில் இருந்தவாறான வரைபடம் உருவாக்கி அதற்கிணங்கத் தமிழ்ப் பகுதிகள் தமிழ் ஈழமாகவும் பிற பகுதிகள் இலங்கையாகவும் அறிவிக்கப்படும் நாளே நன்னாள்! பொன்னாள்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/12/2010 3:44:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக