ஞாயிறு, 28 ஜூன், 2009

கப்பலில் உள்ள நிவாரணப் பொருள்களை
இலங்கைத் தமிழர்களுக்கு வழங்க நடவடிக்கை:
ஜி.கே. வாசன்
தினமணி


சென்னை, ஜூன் 27: "வணங்கா மண்' என்ற கப்பலில் உள்ள நிவாரணப் பொருள்களை இலங்கை தமிழர்களுக்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது; இதுகுறித்து விரைவில் சாதகமான முடிவு வரும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
-----------------------------------------------------------------------------------------------
உதவ வந்தவர்கள் உதவியின்றி 50 நாள்களுக்கும் மேலாக அல்லல்பட்டுக் கொண்டு இருக்கின்றனரே! அதற்கு முதலில் முடிவு கட்ட வேண்டாவா? தமிழ் ஈழத்தில் உள்ள காட்டுப் பகுதிகளை அழித்து அங்குள்ள விடுதலைப் படையினரையும் மக்களையும் கூட்டம் கூட்டமாக அழித்து மற்றொரு பேரவலத்தை நடத்த இந்தியாவின் ஒத்துழைப்பிற்குத்தான் சிங்கள ஓநாய்கள் வந்தனர் என்றும் அதை மறைப்பதற்காக வணங்கா மண் கப்பலில் உள்ள பொருள்களைத் தமிழ் மக்களுக்கு வழங்க ஒப்புக் கொண்ட நாடகம் நிறைவேறியது என்றும் இணையச் செய்திகள் கூறுகின்றனவே! அதற்கேற்றாற் போல் வணங்காமண் கப்பல் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருக்கின்றதே! பேரினப் படுகொலைகளுக்கும் போர்க்குற்றங்களுக்கும் கருவாயும் உருவாயும் இருந்த காங். அரசும் மலையாள ஆரிய அதிகாரிகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இன்னும் என்னவெல்லாம் சொல்லி நம்மை ஏமாற்றப் போகிறார்கள்?

நல்ல தீர்வை வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/28/2009 2:15:00 AM



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக