ஞாயிறு, 12 டிசம்பர், 2010

India support to ban ki-muun : பான் கீ மூனுக்கு மீண்டும் ஆதரவு தர இந்தியா முடிவு

உண்மையைச் சொல்லிப் போர்க்குற்றங்களைத் தடுக்க எண்ணினாலும் இந்தியத்திற்கும் சிங்களததிற்கும் அடிபணிந்து வாய்மூடி இருந்தவர். இப்பொழுது ஓய்வு பெறச் செய்தால் ஓய்வடைந்தவர்கள் உண்மைகளைத் தெரிவிப்பது போல் ஏதும் உண்மைகளை வெளியிட்டு விடுவார். பதவிநலத்திலேயே மூழ்கச் செய்து விட்டால் தொடர்ந்து அடிமையாகவே இருப்பார். இந்திய, சிங்களப் போர்க்குற்றங்களை மறைக்கும் கேடயமாகவே விளங்குவார். எனவே, சரியான முடிவு! என்றாலும் காலம் விரைவில் மாறும்.  உண்மையாவும் வெளியாகும. ஆட்சி அதிகாரங்கள் போகும்!
தீய எண்ணங்கள் சாகும்! அதனை விரைவில் காண்போம்! தமிழ் ஈழம் உலகநாடுகளால் ஏற்கப்படும் நற்காலத்தையும் காணபோம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

பான் கீ மூனுக்கு மீண்டும் ஆதரவு தர இந்தியா முடிவு

First Published : 11 Dec 2010 05:45:55 PM IST

Last Updated : 11 Dec 2010 05:48:02 PM IST

வாஷிங்டன், டிச.11- ஐநா பொதுச்செயலர் பதவிக்கு பான் கீ மூன் மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு தர இந்தியா முடிவு செய்துள்ளது.இத்தகவலை ஐநாவுக்கான இந்திய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது."ஐநாவின் முன்னாள் இணைச் செயலரும் இந்திய எம்.பி.,யுமான சசி தரூர் மீண்டும் ஐநா பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிடுவாரா?" என்று இந்திய அதிகாரியிடம் கேட்டபோது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.கடந்த தேர்தலில், தென் கொரியாவைச் சேர்ந்த பான் கீ மூனிடம்தான் சசி தரூர் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.2011 டிசம்பரில் பான் கீ மூனின் பதவிக் காலம் முடிவடைகிறது.
கருத்துகள்

This 'gentleman' had kept quiet when srilanka was massacring tamils. Of course India will vote for him. He played to the wishes of Indian govt.
By Karthik
12/11/2010 5:53:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக