வியாழன், 16 டிசம்பர், 2010

condemn to ilangai: national anthem in singhalam only.

மீண்டும் என் பெயரைப் பயன்படுத்தும் கோழை வந்துவிட்டார்.  பகல் ௧.௩௫ மணிக்கு என் பெயரில் பதிந்த நண்பரே! உங்கள் கருததை அச்சமின்றி உங்கள் பெயரிலேயே தெரிவியுங்கள். அச்சம் இரு்நதது எனில் புனை பெயர் வைத்துக் கொள்ளுங்கள். தேவையில்லாமல் உங்கள் வீட்டிற்கு ஏன் காவல்துறை வர வேண்டும் என விரும்புகிறீர்கள்? 
எச்சரிக்கையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கைக்கு கருணாநிதி கண்டனம்

First Published : 14 Dec 2010 12:00:00 AM IST

Last Updated : 14 Dec 2010 05:24:31 AM IST

சென்னை, டிச. 13: இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  இலங்கையில் தமிழ் மக்களும், சிங்களர்களும் வசிப்பதால், அந்த நாட்டு தேசிய கீதம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இதுவரை பாடப்பட்டு வந்தது.  இந்த நடைமுறையை இலங்கை அதிபர் ராஜபட்ச மாற்றியுள்ளார் என்றும், இனிமேல் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்றும், தமிழில் தேசிய கீதம் பாடுவதை ரத்து செய்து விட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இதுதொடர்பான தீர்மானம் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் செய்தி வந்துள்ளது.  அந்தச் செய்தி உண்மையானால் அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. புண்பட்டு இருக்கின்ற ஈழத் தமிழர்களின் உள்ளத்தை மேலும் புண்படுத்தக் கூடியது. எனவே, இந்தச் செயலை கண்டிக்கின்றேன் என்று தனது அறிக்கையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.அரசியல் தலைவர்கள் கண்டனம்: தமிழில் தேசிய கீதம் பாட இலங்கை அரசு தடை விதித்துள்ளதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்:  ராஜபட்ச தலைமையிலான இலங்கை இனவாத அரசு, இலங்கையின் தேசிய கீதத்தை இனி சிங்கள மொழியில் மட்டுமே பாட வேண்டும் என்றும், தமிழில் பாடக் கூடாது என்றும் அறிவித்துள்ளது. இது சிங்கள, தமிழ் மக்களிடையேயான நல்லிணக்கத்தை மேலும் பாதிக்கும் வகையில் உள்ளது.   ராஜபட்ச அரசின் ஜனநாயக விரோத செயல்களை கண்டித்து அனைத்து தரப்பினரும் ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும்.மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:  இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் இசைக்க தடை விதிப்பது என்ற இலங்கை அரசின் முடிவு கவலை அளிக்கிறது. இலங்கையில் போர் முடிந்து ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. இலங்கை அரசு, தமிழர் அமைப்புகளுடன் பேச்சு நடத்தி, தமிழர்கள் வாழும் பகுதிக்கு மாநில சுயாட்சி அளிக்க வேண்டும் என்றும், மொழி, கலாசாரம், வாழ்வாதாரம் போன்ற அம்சங்களில் சம அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், தமிழில் தேசிய கீதம் பாட தடை என்ற முடிவு, இலங்கைத் தமிழர்கள் மத்தியில் அவநம்பிக்கையை உருவாக்கும். இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று இலங்கை அரசை இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டும்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்: ஒரு நாட்டில் இரு தேசிய கீதங்களா என்று ராஜபட்ச கேள்வி எழுப்பியுள்ளார். ஒரே நாட்டில் இரு தேசிய இனங்கள் வாழும் வரலாற்று உண்மையை ராஜபட்ச மூடி மறைக்க முயல்கிறார். தமிழர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோவதைத் தடுக்கவும் இந்திய அரசு உள்ளிட்ட சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும்.நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான்: இலங்கையில் தமிழர்கள் என்ற உரிமையுடனும், உணர்வுடனும் இனி எவரும் வாழ முடியாது என்பதை இலங்கை அரசு தொடர்ந்து உலகுக்கு நிருபித்து வந்துள்ளது. அதன் ஒரு பகுதிதான் இலங்கையின் தேசிய கீதத்தைத் தமிழில் பாட விதிக்கப்பட்டுள்ள தடையாகும்.  ஏற்கெனவே தமிழர்களின் மண்ணை தமிழர்களிடம் இருந்து பறித்து, அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றிய சிங்களர்கள், இனி தமிழர்களை அங்கு வாழக் கூட அனுமதிக்கப் போவதில்லை என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு.புதிய தமிழக கட்சித் தலைவர் க.கிருஷ்ணசாமி: "சிங்கள மொழிக்கும், சிங்களர்களுக்கும் தமிழ் மொழியும், தமிழர்களும் நிகரானவர்கள்' என்ற அந்தஸ்தில் இருந்து தமிழ் மொழியினுடைய எல்லா விதமான அடையாளங்களையும் அழிக்கும் வகையில் இப்போது சிங்கள மொழி மட்டுமே தேசியகீத மொழியாக அறிவித்திருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கருத்துகள்

Karuna, first keep your house clean before issuing condemnation to Srilankan government. How many of us know the meaning of jana gana mana? Can you replace jana gana mana with நீராடும் as National Anthem for Tamil Nadu? That song has all the status to be the National Anthem for Tamil Nadu. It clearly refers India as a continent and “Dravida Naadu” a country within it (like European Union and the countries within it). I am sure you would have arrested Sundaram Pillai, if he was alive today for singing against Indian sovereignty to please your ally congress. It is shame on us that a party (Naam Thamilar) is needed to tell who we are. We lost our identity and let us not decimate our Tamil culture and language any further. We all have the responsibility to promote and protect it for our progeny. On the point, there exists a clear line of separation between Tamil Nation and Sinhala Nation. Tamils always recognized the existence of Sinhala Nation but it is the Sinhala Chauvinism that all the
By Raja
12/14/2010 7:52:00 PM
சிங்களப் பாடலை ஈழத் தமிழர்கள் பாட வேண்டியாது இல்லை. ஈழத் தமிழர்கள், ஈழத் தேசியப் பாடலைத் தான் பாட வேண்டும்.
By ரவி
12/14/2010 1:39:00 PM
என்ன தாத்தா - திடீர் கரிசனம் ? கொத்து கொத்தா மக்களை கொன்னப்போ எங்க போன ? ஓ ! எலக்சன் வருதுல்ல !
By இலக்குவனார் திருவள்ளுவன்
12/14/2010 1:35:00 PM
என் அருமை தமிழ் மக்கள்.... ஏன் எப்ப பார்த்தாலும் அடுத்த நாடு பிரசினில் தலை இடுகிரிகள்.... உங்களுக்கு தமிழில் இந்திய தேசிய கிததை பட முடியுமா? முதலில் உங்கள் நாட்டில் தமிழில் பட ட்ரை பண்ணுகள்... பெஸ்ட் ஒப் லக்.
By ஸ்ரீதரன் - ஸ்ரீ லங்கா
12/14/2010 12:02:00 PM
ஏன்பா கோபப்படுறீங்க? நான்தான் அப்பவே சொன்னேன்ல... நம்ம முதல்வர் ரொம்ப நல்லவர்... அவருக்கு தமிழர்கள் மீது பற்றும் பாசமும் இருக்கிறதென்று... இப்ப பார்த்தீங்களா? தனது உற்ற நண்பர் ராஜபக்சே கோபப்படுவார் என்று தெரிந்தும் துணிச்சலாக கண்டனம் தெரிவித்து இருக்கிறாரே!! இது உண்மையான உணர்வுதாங்க... தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருப்பதால் இதுவும் ஒரு நாடகம் என்று நீங்கள் கருதினால் நான் என்ன செய்ய முடியும்??
By Abdul Rahman - Dubai
12/14/2010 10:48:00 AM
என் தமிழன்னையே,தமிழே ..உன்னை அழிக்கத்தான் உலகில் இந்த ராஜபக்சேவையும் சேர்த்து எத்தனை பேர் பிறந்தார்கள்..அவர்கள் அழிந்தார்கள். ராஜபக்சே அழிவதும் உறுதி..ஆனால் நீ அழிவாயோ..நீடு தமிழே!..மண்ணும் விண்ணும் ,உடுக்களும் ,பொங்கு கடலும் உள்ளவரை வாழ்வாய்..
By சிபிகுமாரன்
12/14/2010 10:36:00 AM
என்ன ஒரு ஆச்சர்யம்!!!!!, இன்றுதான் இந்த முதியவன்னுக்கு தெரிந்த்ததோ தமிழர்களின் இதயம் புண்பட்டிருப்பது. பதவியின் ஆசையினால் என் இனம் அழிவதற்கு உறுதுணையாக இருந்தவன் எம்மொழி பற்றி பேச தகுதியில்லாதவன் இந்த கொடியவன். தானும் தன் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் இவனது முழுநேர சிந்தனையும். தமிழ்நாட்டை தாரைவார்த்து விடுவான் இவனுக்கு பிரதமர் பதவி கிடைத்தால். எம்மக்கள் உயிர்க்கு போராடிய பொழுதிலல்லவா தமிழ் மாநாடு அமைத்து தமிழ் உணர்வாளர்களை கொச்சை படுத்தியவன் இன்று தமிழர்களை பற்றி கருத்து கூறுவதா? ஏய் மக்கா இதுவரை பொறுத்தது போதும் இனியும் காத்திருக்க வேண்டாம்... வெற்றி நமக்கே என்ற வீர வெற்றி முழக்கத்துடன் தமிழ்வாசகன்
By தமிழ்வாசகன்
12/14/2010 9:20:00 AM
முதல்வரின் இந்த பொய் தமிழ் உணர்வை எந்த தமிழனும் நம்ப மாட்டான்..ஈழப்போர் உக்கிரமான கட்டத்தில் வெறும் கடிதங்க எழுதி நாடகம் நடத்தியவர் தானே நீர் ...
By vijay
12/14/2010 8:23:00 AM
இந்த உணர்வு மக்களை கொன்று குவித்தபோது எங்கு போனது முதல்வர் அவர்களே. எல்லாத்தையும் தான் கொன்னு போட்டாச்சே, இனி யாருக்காக அங்க தமிழ் தேசிய கீதம்? புதைத்த பிணங்களுக்கா? தயவு செய்து உங்களுடைய உணர்வுகளை உங்களுக்குள்ளே வைத்துக் கொள்ளுங்கள். இந்த வயதிலும் ஏன் இப்படி நடிக்கிறீங்க? கொஞ்சம் கூட நா கூசல இப்படி அறிக்கை விடறதுக்கு? இன்னும் என்னன்னவோ வருது. ஆனா உங்க வயசு கருதி அதெல்லாம் எழுதாம இத்தோட நிறுத்திக்கிறேன். தயவு செய்து இது போல் அறிக்கை கொடுத்து உங்க வயசுக்கு உண்டான மரியாதையை கெடுத்துக்காதீங்க. ஏன்னா என்ன மாதிரியே எல்லாரும் இருப்பாங்கன்னு சொல்ல முடியாது பாருங்க....
By முஹம்மது
12/14/2010 7:55:00 AM
இலங்கை என்ன இந்திய மாநிலமா? சீனாவின் செல்லப்பிள்ளை
By Raj
12/14/2010 7:37:00 AM
ராஜபக்‌ஷேயின் அரசு மட்டுமல்ல இதற்கு முன்னரும் கடந்த அறுபது ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்கள் சிங்கள அரசியல்வாதிகளாலும் அவர்களது அரசுகளாலும் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளார்கள். தந்தை செல்வா காலத்திலிருந்து ஆரம்பித்த இவ்வகையான பேரினவாதப் புறக்கணிப்பின் பிறிதொரு அடையாளமே இப்போது ராஜபக்‌ஷே அரசு இலங்கையின் தேசிய கீதத்தினைத் தமிழிலும் பாடவேண்டியதில்லை என்பதாகும். இலங்கைத் தமிழர்கள் இந்தச் சிங்கள அரசுகளைப் புரிந்து கொண்டதால்தான் 1977ல் தந்தை செல்வாவின் ஆசியுடன் தமிழ் ஈழக் கோரிக்கை உருவானது.இதனைத் தமிழக அரசியல்வாதிகள் அன்றே புரிந்துகொண்டு அதற்கான தீர்வினை மத்திய அரசின் உதவியோடு எட்ட முனைந்திருக்கலாம். முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் உயிர்களை இரக்கமின்றிக் கொன்ற அரசிடம் நீதியையும், நியாயத்தையும் எதிர்பார்பதும் அதற்காக அறிக்கைகளை வெளியிடுவதும் காலங்கடந்த செயல் என்றே படுகிறது. இதனைத் தமிழகச் சகோதரர்களின் மனக் குமுறலின் ஓர் அடையாளமாகக் கொள்ளலாமேயன்றி விளையப்போவது ஏதுமில்லை. [www.sarvachitthan.wordpress.com]]
By ’சர்வசித்தன்’
12/14/2010 7:13:00 AM
இலங்கை என்ன இந்திய மாநிலமா? இவர்களின் கண்டனத்தை ஏற்க சீனாவின் செல்லப்பிள்ளை. இந்தியாவை எட்டி உதைக்கப்பூகும் குட்டிக்கடுவன்
By Raj
12/14/2010 6:41:00 AM
மொழித்திணிப்பிற்கு இந்தியம் வழிகாட்டுகிறது என்பதற்கு இதுவொரு சான்று. ஈழம் தமிழர்களுக்கு மட்டுமே உரிய நாடு. அங்கே தமிழில் மட்டுமே நாட்டு வணக்கப்பாடல் இருக்கும். இலங்கை தமிழர்களுக்கும் உரிய நாடு. எனவே, அங்கே தமிழிலும் நாட்டுவணக்கப்பாடல் இருக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
12/14/2010 5:29:00 AM
மொழித்திணிப்பிற்கு இந்தியம் வழிகாட்டுகிறது என்பதற்கு இதுவொரு சான்று. ஈழம் தமிழர்களுக்கு மட்டுமே உரிய நாடு. அங்கே தமிழில் மட்டுமே நாட்டுவணக்கப் பாடல் இருக்கும். இலங்கை தமிழர்களுக்கும் உரிய நாடு. எனவே, அங்கே தமிழிலும் நாட்டு வணக்கப்பாடல் இருக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
12/14/2010 5:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *v

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக