சனி, 4 டிசம்பர், 2010

இலங்கை மனித உரிமை மீறல்கள்: விசாரணைக்குப் பிரிட்டன் வலியுறுத்தல்

குற்றங்கள் வேறு யாராலும் நிகழ்ந்திருந்தால் அரசிடம் உசாவுதலுக்கு வலியுறுத்தலாம். ஆனால் சிங்கள அரசே வன்கொடும் பேரழிவுகளையும் இன அழிப்புகளையும் செய்திருக்ககையில் அதனிடம் பன்னாட்டு உசாவல் குறித்து வலியுறுத்தி என்ன பயன்? தன் நண்பன் இந்தியா மூலம் தன் தடைகளை உடைத்தெறியும் வல்லமை மிக்கதாக அது விளங்குகிறது. மனித நேயம் மிக்க ஆன்றோர்களும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான அரசுகளும் தாமே ஒரு குழுவை நியமித்து இன அழிப்பு பற்றிய உசாவுதல்களை
மேற் கொள்ள வேண்டும். அதற்கும் தண்டிக்கும் அதிகாரம் இல்லாவிட்டாலும் அக் குழு அறியும் உண்மைகள் தண்டிக்கும் அதிகாரம் உள்ள அமைப்பிடம் அதனை அளித்துத் தண்டனை வாங்கித் தர இயலும். ஆனால், எல்லா  வல்லரசுகளும் ஏதோ ஒரு வகையில்  அதற்கு உதவியதால்  அவை முட்டுக்கட்டை போடும். அத்தகைய அரசுகளையும் தூக்கி எறியும் வல்லமை அந்தந்த நாட்டு மக்களுக்கு வேண்டும். எனினும் இங்கிலாந்து நாட்டு மக்களுக்கும் அரசிற்கும் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கை மனித உரிமை மீறல்கள்: விசாரணைக்கு பிரிட்டன் வலியுறுத்தல்

First Published : 03 Dec 2010 03:22:28 PM IST

Last Updated : 03 Dec 2010 05:05:21 PM IST

கொழும்பு, டிச.3- இலங்கையில் போர்க்காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அளவில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏற்கெனவே நேரில் வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் ராஜபட்சவும் அவரது சகோதரர்களும் போர்க்குற்றவாளிகள் என்று "விக்கிலீக்ஸ்" இணையதளம் அம்பலப்படுத்தியுள்ள நிலையில், இவ்வாறு பிரிட்டன் தரப்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கருத்துகள்

What Pranab Mugargee says about war crime inquary? Is India support the human disater or support the inquary?
By Singam
12/3/2010 9:23:00 PM
தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழ் நாட்டை ஏமாற்றும் கருணாநிதி குடும்பம் ஆட்சியில் இருக்கும் வரையில் தமிழனுக்கு பாதுகாப்பு, மரியாதை இந்திய அரசிடமிருந்து கிடைப்பது நடக்காது. கருணாநிதி குடும்பத்தின் வீழ்ச்சி தமிழனின் எழுச்சி. அதே நேரம், ஜெயலலிதா ஆட்சியும் தமிழன் வாழ்வுக்கு உதவாது. தேசிய கட்சிகள் தமிழனை எழுவதை விரும்பாது. தேவை தமிழனுக்காக ஒரு புதிய எழுச்சி, புதிய கட்சி, சொல்கிறது இந்த பட்சி.
By பட்சி
12/3/2010 9:09:00 PM
மனித நேயமற்ற காட்டுமிராண்டி இராஜபக் க்ஷேவிற்கு ஆதரவு கொடுத்துவரும் முசோலினியின் வாரிசுகள் காந்தி தேசத்தை ஆட்சி செய்வதா ? தமிழினமே சிந்திப்பாயாக.
By திராவிடன்
12/3/2010 8:57:00 PM
lankasri com or மனிதன்.com parunkal
By vava
12/3/2010 5:27:00 PM
போர்க்குற்றவாளிகளுக்கு உதவி செய்தவர்கள்?
By sbala
12/3/2010 4:33:00 PM
உலகில் எங்கு சென்றாலும் அங்கு தமிழன் இருப்பான் அரக்கன் ராஜபக்ஷவை ஓட ஓட விரட்டுவான்..கேடுகெட்ட இந்தியாவில்தான் இவனுக்கு பட்டு கம்பளம் ஏனென்றால் கழுகுகளுக்கு பிணம்தான் பிடிக்கும்.. வேறு எங்கு சென்றாலும் துடப்பம்தான் .. விதைத்ததை யாராக இருந்தாலும் அறுவடை செய்தாக வேண்டும்.. .
By tamilwin
12/3/2010 4:21:00 PM
RAJABHASHEY AND HIS FAMILY MEMBERS ARE UTTER CRIMINALS. THEY SHOULD BE PUNISHED AS PER THE LAW.
By PERUNCHITRANAR, PERAIYUR
12/3/2010 4:11:00 PM
இலங்கையின் நெருன்கியநண்பன் இந்தியா வையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
By Ran
12/3/2010 3:49:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக