செவ்வாய், 21 செப்டம்பர், 2010

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை:​ இளங்கோவன்


திருநெல்வேலி, ​​ செப்.​ 20:​ தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என முன்னாள் மத்திய ​ அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.​ இளங்கோவன் கூறினார்.​ திருநெல்வேலியில் திங்கள்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:​ தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை.​ காவல்துறையினரின் செயல்பாட்டில் அரசியல் தலையீடு இருக்கிறது.​ அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.​ ​ ​ தீவிரவாதம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல,​​ உலகம் முழுவதும் உள்ளது.​ தமிழக ​ காவல்துறை ஒழுங்காக செயல்பட்டால் இங்கு தீவிரவாதம் பரவாமல் தடுக்கலாம்.திமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து சட்டப் பேரவைத் தேர்தலில் ​ மக்கள் வாக்களித்து தீர்மானம் செய்வார்கள்.​ திமுக ஆட்சியில் அதிகமான ​ நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும்,​​ இன்னும் அதிகமான திட்டங்களை நிறைவேற்றி இருக்கலாம்.​ இலவச டி.வி.க்கு பதிலாக இலவச மின்சாரம் வழங்கலாம்.​ ​ இலவச திட்டங்களில் சிலர் கமிஷன் பெறாமல் தடுக்க அரசு கண்காணிக்க வேண்டும்.​ ​ மத்திய அரசின் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்வோருக்கு ​ போக்குவரத்துச் செலவும்,​​ |100-ம் வழங்க வேண்டும்.​ ஆனால் சில இடங்களில் |60 ​ மட்டுமே வழங்கப்படுகிறது.​ இதுகுறித்து கடந்த 4 மாதங்களாக குரல் கொடுத்து வருகிறோம்.​ அரசு இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.​ தேமுதிக தலைவர் விஜயகாந்தை நான் சந்தித்தது மரியாதை நிமித்தமானது.​ அவர் ​ எனது நண்பர்.​ அந்த சந்திப்புக்கும்,​​ அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை.​ தமிழ்நாட்டில் தனித்து ஆட்சி அமைப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நோக்கம்.​ ​ அதற்கான சாத்தியம் இல்லை என்றால் கூட்டணி ஆட்சி குறித்து எங்கள் கட்சியின் ​ மேலிடத்தில் வலியுறுத்துவோம்.​ அவர்கள் தீர்மானிப்பார்கள்.​ எங்கள் கட்சி ​ மேலிடத்தில் நாங்கள் வலியுறுத்திய விஷயங்கள் குறித்து இங்கே வெளியிட முடியாது.​ ​ மூன்றாவது அணி அமைப்பது குறித்து உரிய நேரத்தில் சொல்வோம்.​ தமிழக சட்ட ​ மேலவையில் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதித்துவம் குறித்து முதல்வர் கருணாநிதியிடம்தான் கேட்க வேண்டும்.​ ராதாபுரம் பஸ்நிலையத்தில் காமராஜர்,​​ கக்கன் சிலைகளை வைக்க வேண்டும் என ​ தொடர்ந்து வலியுறுத்துவோம்.​ அங்கு வைக்கப்பட்டுள்ள முதல்வர் கருணாநிதியின் ​ பெற்றோர் சிலையை அகற்ற வேண்டும் என நாங்கள் கூறவில்லை என்றார் இளங்கோவன்.
கருத்துக்கள்

உண்மைதான்.தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. அதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்னவென்றால் இனப்பகைவர்களும் கோவன்களும் நாட்டில் உலவிக் கொண்டிருப்பதுதான்.எனவே,இவர்களைப் பிடித்துப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வாழ்நாள் தண்டனை கொடுத்தால் சட்டம் ஒழுங்கு சரியாகி விடும் என்று பொதுமக்கள் பேசிக் கொள்வது பேச்சாளருக்குத் தெரியுமா? 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/21/2010 8:35:00 PM
IT IS ONLY DUE TO THE PRESENCE OF THE 'BIG MOUTH' Mr. ELANGOVAN IN TAMIL NADU.HE MAY GO TO JAMMU AND KASHMIR IF HE FEELS IT A VERY PEACEFUL STATE.
By sam
9/21/2010 7:55:00 PM
சட்ட ஒழுங்கு சரியாக இல்லை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். இந்த நாதாரி இளங்கோவன் போன்ற மானங்கெட்ட உயிர்களை சிறையில் போடாமல் இருப்பதைக் கண்கூடாகக் காணும்போது சட்ட ஒழுங்கு சரியில்லை என்பது உறுதியாகிறது. இந்த ஆளை அள்ளிக் கொண்டுபோய் நன்றாகத் துவைத்து எடுத்தால் சட்ட ஒழுங்கு நன்றாக இருப்பதாகக் கூறலாம். இந்த ஆளை அள்ளிக்கொண்டு போவதற்கு நிறைய உண்மையான காரணங்கள் இருக்கின்றன. இதைக் காவல்துரைக்காரன் என்ற முறையில் சொல்கிறேன்.
By காவலா காவாலா
9/21/2010 6:40:00 PM
vettipayal illangova unaku vera veliilaya why are you barking
By DS
9/21/2010 4:56:00 PM
vettipayal illangova unaku vera veliilaya why are you barking
By DS
9/21/2010 4:56:00 PM
லேட்டஸ்ட் தகவல் . ஈரோடு அருகில் அம்மாபேட்டை அதை சுற்றி உள்ள கிராமங்களில் இளங்கோவனுக்காக நூற்றி ஐம்பது ஏக்கர் நிலம் பிடித்து தர சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட நில ப்ரோக்கர்கள் அலைந்து கொண்டிருகிறார்கள் . இவர் ஒரு மக்கள் தலைவர்.காமராஜர் ஆட்சி அமைக்க போகிறவரும் இவரே .அவர் பிடித்துள்ள இடங்களின் படங்களையும் ,ப்ரோக்கேர்களையும் வேண்டுமானால் தினமணியில் வெளியிடுகிறோம் .
By parthiban
9/21/2010 3:38:00 PM
ஆமா மம்மா , ஜெயலலிதா மாதிரி சட்டம் ஒழுங்கு வச்சிருந்தால் உன்னை மாதிரி ஆளுங்களை உள்ள வச்சி கோட்டை எடுத்திருக்கலாம் . தாத்தா ரொம்ப ப்ரீய உட்டுட்டாரு அதாண்டா ஆளாளுக்கு பெரிய பருப்பு மாதிரி பேசுறீங்க .தேமு தீ க ,மா தி மு க எவனை வேணுமுன்னாலும் போய் பாரு உங்களாலே ஒன்னும் புடுங்க முடியாது.உங்களை நம்பி நாங்க ஒட்டு போட தயாரில்லை
By parthiban
9/21/2010 3:23:00 PM
காமராஜ மவராசன் ஊருக்கு ஊர் பள்ளிக்கூடம் கட்டி கொடுத்தார். மதிய உணவும் கொடுத்தார். ஆனா பிறகு வந்தவர்கள் அவரை பின்பட்ட்ருவாத சொல்லி இலவசங்களை அள்ளி வீசி மக்களை அடிமைகளாக்கி விட்டார்கள். என்று தணியும் இந்த இலவச மோகம். என்று முன்னேறும் இந்த நாடு. ஆண்டவா உனக்கே வெளிச்சம்!
By mumbaivaashi
9/21/2010 2:21:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக