திங்கள், 20 செப்டம்பர், 2010

ஜாதிவாரி கணக்கெடுப்பு: கருணாநிதியை சந்திக்கிறார் ராமதாஸ்


ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துச் சமுதாய சங்கத் தலைவர்கள்
சென்னை, செப். 19: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து பேசவுள்ளார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். ஜாதிவாரி கணக்கெடுப்பு பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக அனைத்து சமுதாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் யாதவ மகா சபை, கொங்கு நாடு முன்னேற்ற சங்கம், அகில இந்திய தேவர் பேரவை, தமிழ்நாடு நாடார் பேரவை,  நாயுடு மக்கள் சக்தி இயக்கம், செங்குந்தர் மகாஜன சங்கம், முத்தரையர் சங்கம் உள்பட 40-க்கும் மேற்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: ஒரு மாநிலத்தில் இட ஒதுக்கீட்டு சலுகை பெற தகுதி படைத்த சமூகங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப, இட ஒதுக்கீட்டின் அளவை முடிவு செய்து கொள்ளும் அதிகாரம் மாநிலங்களுக்கு வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. கடந்த ஜூலை மாதம் உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பு மூலம் இந்த உரிமை மாநில அரசுகளுக்குக் கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டு அளவைத் தீர்மானிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்தத் தீர்ப்பின்படி, தேவைப்பட்டால் இடஒதுக்கீட்டு அளவை அதிகரித்துக் கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பை தமிழக அரசு தவறவிட்டுவிடக் கூடாது. எனவே, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள காலக்கெடுவுக்குள் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இதற்கிடையில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்க இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல், தனியாக நடத்துவது என்ற  முடிவை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும். சமூக, பொருளாதார அந்தஸ்து குறித்த புள்ளி விவரங்களோடு கணக்கெடுப்பு நடத்தினால்தான் உரிய பலன் கிடைக்கும்.  எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும். மத்திய அரசுக்காக காத்திராமல்,  அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் முழு விவரங்களோடு கூடிய ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட மாநில அரசு முன்வர வேண்டும். இதற்கான அறிவிப்பை காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-க்குள் தமிழக அரசு வெளியிட வேண்டும். இல்லையெனில், டாக்டர் ராமதாஸ் தலைமையில் அனைத்து சமுதாய சங்கங்களின் பிரதிநிதிகள் அக்டோபர் 11-ம் தேதி முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து,  ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு வலியுறுத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக கூட்டத்தில் ராமதாஸ் பேசியது: பிப்ரவரியில் தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இல்லாமல், ஜூன் மாதத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தனியாக நடத்தப்படும் என்று மத்திய அரசு கூறுவதில் சூழ்ச்சி உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது எந்தெந்த ஜாதியில் எத்தனை பேர் உள்ளனர் என்று வெறும் தலைகளை மட்டும் எண்ணும் கணக்கெடுப்பு அல்ல. அவ்வாறு நடத்துவதால் எந்தப் பலனும் ஏற்படாது. ஒவ்வொருவரின் சமூக, பொருளாதார நிலை குறித்த விவரங்களுடன் கூடிய ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றார். கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, மத்திய முன்னாள் இணையமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்

அப்பாடா! எப்படியோ கூட்டணி பற்றிப் பேசக் கலை ஞரைச சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்து விட்டது.ஆடு மேய்யத்த மாதிரியும் இருக்கும்; அண்ணனுக்குப் பெண் பார்த்த மாதிரியும் இருக்கும் என்பார்கள். அத்ற்கான வாய்ப்பு கிடைத்து விட்டது. இப்பொழுதாவது கூடுதல் இடம் வேண்டும் ; அதை முதலிலேயே அறிவிக்க வேண்டும் என்று இல்லாமல் கொடுக்கும் எண்ணிக்கையைப் பெற்றுக் கொள்ளுங்கள். வெற்றி பெற்று உங்களின் தமிழ்நலப் பணிகளைத் தொடருங்கள். 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/20/2010 2:56:00 AM
jaathi vaariyaaka kanakku yeduththaal than arasiyal katchikalukkana therthal ida odhukkeettai sariyaka seiyya mudium yenpathai nam thalaivarkalukku solli kodhuththathe thiravida katchikal than.
By thangaraj
9/20/2010 2:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தமிழில் கூடப் பெயர் குறிப்பிடாத தமிழ்நலவிரும்பியாகக் காட்டிக் கொள்ளும் நண்பரே! தவறாகக் குறிக்கப் பெறாதது குறித்துச் சினம் கொள்வானேன்? தமிழ்நலப் பணியைத் தொடருமாறு வாழ்த்துவது தவறா? கடந்த காலப் பட்டறிவில் இருந்து - முதலிலேயே கூட்டணிஒப்பந்தம் என்பது - கூட்டணித் தோழர்களுடன் ஏற்படும் பிணக்கை உணர்ந்து அதைச் சுட்டிக் காட்டுவது தவறா? அ.இ.அ.தி.மு.க சீண்டாததால் அதற்கேற்ப மக்கள் எண்ணுவதை எதிரொலிப்பது தவறா? சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே என்னும் வரிகளுக்கிணங்க அவரது தமிழ்நலப்பணிகள் சாதிப்பற்றால் பின்னுக்குத் தள்ளப்படக்கூடாது எனக்கருதுவது தவறா? சாதிப்பற்று வந்தாலே உறவினர் பற்றும் குடும்பத்தினர் பற்றும் மேலோங்கும் என்பதை மறக்க வேணடா. உங்களைப் போல் பிறரையும் எண்ணும் உங்கள் பரந்த எண்ணத்திற்குப் பாராட்டுகள். சாதிஇல்லாச் சமத்துவ நாடு அமைய வேண்டும் அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/20/2010 2:52:00 PM
தலைவா சரியாய் சொன்னார்கள் அப்போதே. "இட ஒதுக்கீட்டு சலுகை பெற தகுதி படைத்த சமூகங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப" முட்டாள்களுக்கு புரியவா போகிறது? தொடரட்டும் உங்கள் வெற்றிநடை. பன்னாடைகளை புறம் தள்ளுவோம். வாழ்க டாக்டர் ராமதாஸ். வளர்க பாட்டாளி மக்கள் கட்சி. தொடரட்டும் நம் கட்சியின் வெற்றி நடை. மக்களுக்காக ஒரு மக்கள் தொலைக்காட்சி. தமிழுக்காக தங்கள் சேவை தொடரட்டும். தலைவா வாழ்க நீர் பல்லாண்டு.சிங்கபூரிலிருந்து செல்வா
By சிங்கபூரிலிருந்து செல்வா
9/20/2010 12:32:00 PM
அடடா! என்ன ஒரு கருத்து, ஐயா. ராமதாஸ் - மகனிடம்: அய்யோ! அய்யோ! இன்னுமாடா இந்த ஜனங்கள் நம்மை நம்பறாங்க? மக்களிடம்: உங்களை எல்லாம் பார்த்தா பாவமாய் இருக்கு. இன்னைக்கு இது போதும். நாளைக்கு வரேன்.
By வன்னியன்!
9/20/2010 12:23:00 PM
அன்பர் இலக்குவனாரே அவர்களே, இப்போதுதான் தெரிகிறது நீரும் ஒரு செல்லா காசு என்று. தயவு கூர்ந்து உம்பெயரை மற்றிகொள்ளும். உயர்திரு வள்ளுவ பெருந்தகை பெயரை வைத்து கொண்டு கீழ்த்தரமான எண்ணங்களுடன் செயல்படாதீர். மக்களுக்கு நன்மை செய்ய சாதி ஒரு போதும் முட்டுகட்டையாக இருக்காது. இன்று புரிந்தாகிவிட்டது நீரும் என் தமிழ் இனத்தை அழிக்க உதவிய ஈனா கூட்டத்தில் ஒருவன் என்று.
By KSRM
9/20/2010 11:32:00 AM
இறைவா தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகளை கொலையாளிகளிடமிருந்து காப்பாற்று ! நண்பா “அன்பன்”, நீங்கள் தங்கராஜை குறை சொல்வதை விடுத்து தமிழ் தட்டச்சு செய்ய கற்று கொடுங்கள்.
By தமிழன் நலன் விரும்பி
9/20/2010 11:02:00 AM
ஏய் கொலையாளி ரங்கராஜனே ! கேரளாவிலும் ஆட்சி மாற்றம் உறுதி ! கம்யூனிஸ்ட்டை வீட்டுக்கு அனுப்ப கேரள மாநிலத்தில் முடிவு செய்து விட்டார்கள். அங்கே போய் உன் பிரச்சாரத்தை செய்து கம்யூனிஸ்ட்டைக் காப்பாற்ற முயற்சி செய். என்னது ”முல்லைப்பெரியாறு அணை பிரச்னையை அரசியலாக்கக் கூடாது. மத்திய அரசின் துணையோடு இரு மாநில அரசுகளும் பேசி தீர்வு காண வேண்டும்”. அரசியல் ஆக்கினால் கேரளாவுக்கு பாதிப்பாகும் என்பதால், காய்கறிகள் தமிழ்நாட்டில் இருந்து போகாது என்பதால் அதனை அரசியல் ஆக்கக் கூடாதா? மத்திய அரசின் துணையோடு தீர்க்கனுமா? மத்திய அரசுக்கு ஆதரவு வேணும் அவ்வளவு தான் அது கேரளாவுக்குத் தான் துணை போகும் என்பது தெரியாதா? டில்லியில் உள்ளவர்களுக்கு மல்லு மாமிகளைத்தான் பிடிக்குமாம். அப்படித்தானே டில்லியை பிடிக்குள் வைத்து ஆட்டிப் படைக்கிறீர்கள். கம்யூனிஸ்டுகளின் செக்ஸ் மீறல்களைத் தான் உங்கள் கட்சிகாரர்களே மேடையில் கிழிக்கிறார்களே ! இந்த கேவலமான அரசியல் செய்து பிழைப்பதற்கு பதில் கேரளாவுக்கு சென்று நார் உரித்து பிழைக்கலாம். வாழ்க கொலையாளிகளின் புறம்போக்கு கொள்கை! இறைவா தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகளை கொலையாளிகளிடமிருந்து கா
By தமிழன் நலன் விரும்பி
9/20/2010 10:57:00 AM
Dr.Ramadoss is trying for the past 25 years for the above policy of communitywise census for equitable distribution of benefits to all communties based on the social and educational backwardness. Forward and Minority communities are enjoying 50% open reservation and more than thier share in balance reservation respectively who are opposing Dr.Ramadoss as a communal leader without seeing his role for reservation for all like EVR Periyar who fought for reservation despite he is from Telegu Speaking community and Forward Community like V.P.Singh did at Centre. No Political party headed by Telegu and Kanada Origin leaders of Jayalalitha, Karunanithi,Vaiko,Vijakanth, Thangabalu, EVK Elagovan Etc are supporting the above demand to fool public for their selfish agenda.
By Swaminathan
9/20/2010 10:37:00 AM
shameful person............
By ram
9/20/2010 9:44:00 AM
please retire from politics. shameless person!howmany times will you change the alliance?
By ram
9/20/2010 9:42:00 AM
to talk about alliance........u r a very bad politician
By ram
9/20/2010 9:29:00 AM
இது கூட்டணிக்கு அச்சாரம். அப்பா கேப்டன் அதிமுக கூட்டணியில் சேர்வது உறுதி.
By pannadai pandian
9/20/2010 8:11:00 AM
// தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டு அளவைத் தீர்மானிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்தத் தீர்ப்பின்படி, தேவைப்பட்டால் இடஒதுக்கீட்டு அளவை அதிகரித்துக் கொள்ளலாம் // "கரும்பு தின்ன கூலி தான்" ஆட்டுப் புலுக்கை நிறைய வந்து கெடக்குது. வந்துகிட்டே இருக்கு. உவ்வே.... !!!
By சிவப்பு முக்கோணம்
9/20/2010 6:35:00 AM
நண்பரே தங்கராசு! உங்கள மாதிரி தமிழை இங்கிலீஷ்ல டைப்பண்ணி கருத்து எழுதினா யாருக்கும் படிக்கும் பொறுமை இருக்காது. ஒங்க கருத்து வேஸ்டாயிடும். ஒண்ணு இங்கிலீஷ்லேயே டைப் செய்யுங்க. இல்ல தமிழ்ல டைப் செய்யக் கத்துக்கங்க. தமிழ்ல டைப் செய்றது ரொம்ப சுலபம். முதல்ல கொஞ்சம் முயற்சி வேணும் அவ்வளவுதான்.
By அன்பன்
9/20/2010 4:26:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக