சனி, 20 மார்ச், 2010

வாஞ்சிநாதன் உள்ளிட்ட மூன்று தலைவர்களுக்கு மணிமண்டபம்: தமிழக அரசு



சென்னை, மார்ச் 19: ""வாஞ்சிநாதன், கோபால் நாயக்கர், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் ஆகிய மூவருக்கும் மணிமண்டபம் அமைக்கப்படும்'' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.""சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவர் பெயரில் மணிமண்டபம் கட்டுவதற்கு கடந்த 1957}ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை மண்டபப் பணி தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தியாகி வாஞ்சிநாதன் பிறந்த செங்கோட்டையில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்படும். தென்னிந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டவர் கோபால் நாயக்கர். நாட்டு விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த கோபால் நாயக்கரின் நினைவாக விருப்பாட்சியில் மணிமண்டபம் நிறுவப்படும்.1947}ம் ஆண்டில் இருந்து 1949 வரை தமிழகத்தின் முதல்வராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இருந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில், அவரது சொந்த ஊரான ஓமந்தூரில் மணிமண்டபம் அமைக்கப்படும்.ஒண்டிவீரனுக்கு:அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு அவரது நினைவைப் போற்றும் வகையில் தக்கதோர் நினைவுச் சின்னம் நெல்லையில் எழுப்பப்படும்.தியாகராஜ பாகவதருக்கு...தமிழ்த் திரையுலகின் அரும்பெரும் சாதனையாளரான எம்.கே.தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது'' என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
கருத்துக்கள்

தமிழரல்லாதவர்களுக்குத் தமிழர்கள் வரிப்பணத்தில் நினைவு மண்டபங்கள் எழுப்பப்டுகின்றன. இருப்பினும் தமிழ் நாட்டவர் என்னும் பெருந்தன்மையுடன் தமிழர்கள் இவற்றை ஏற்கின்றனர். தமிழினத்தலைவர்களையும் சிறப்பு செய்ய வேண்டும். 2.) சாதிப்பற்றின் காரணமாக (பிராமணர் தெருவில் இறுதி ஊர்வலத்திற்கு இசைவு அளித்த) ஆட்சியாளர் ஆசு என்பாரைச் சுட்டுக் கொன்றவரை ஆரியர் என்பதால் நாம் விடுதலை வீரராக ஏற்கிறோம். ஆனால், எண்ணற்ற படுகொலைகளைப் புரிவோரை எதிர்க்கும் போராளிகளை அவர்கள் தமிழர்கள் என்பதற்காக நாம அழிக்கிறோம். என்னே முரண்பாடு! என்று திருந்தும் இந்த நாடு! நம் நாட்டுப் போரளிகளை மதிக்கும் நாம் அயல்நாட்டுப் போராளிகளையும் மதிப்போமாக! நம் நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் அயலவரை எதிர்க்கும் நாம் அயலநாட்டில் ஆதிக்கம் செலுத்த எண்ணும் நம் நாட்டு ஆட்சியாளரையும் எதிர்ப்போமாக! உலகம் உய்வதற்காகத் தம்மையே இழக்கும் போராளிகள் வெல்க! போராளிகளுக்கு வேலையின்றி உரிமையும் மனித நேயமும் இலங்கும் மன்பதை உருவாகுவதாக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/20/2010 3:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக