சனி, 1 ஜனவரி, 2011

new year greetings by P.M.: தலைமை யமைச்சரின் புத்தாண்டு வாழ்த்து

விலைவாசி உயர்வு, ஆட்சியதிகாரத்தில் தூய்மை, தேசியப் பாதுகாப்பு,எளிய மக்களுக்கு பாடுபடுதல் ஆகியவற்றில் இப்போது எதிர்மறைச் செயலபாடுகள் அல்லவா உள்ளன! இதை  இரட்டிப்பாக்கப் போகிறாரா!  ௨௦௧௧ ஆம் ஆண்டிலாவது மனித நேயம் கொண்டு நம் நாட்டு மக்களையும் நம் அரசால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களில் எஞ்சியவர்களையும்  வாழவிடும் ஆட்சியைத் தரட்டும்! நல் வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்


பிரதமர் புத்தாண்டு வாழ்த்து

First Published : 01 Jan 2011 12:00:46 AM IST


புது தில்லி, டிச. 31: நாட்டு மக்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.நம்பிக்கையற்ற, மனச்சோர்வு நிலையை நீக்கி இந்த ஆண்டில் புதிதாகத் தொடங்குவோம். விலைவாசி உயர்வு, ஆட்சியதிகாரத்தில் தூய்மை, தேசியப் பாதுகாப்பு, சாதாரண மக்களுக்கு பாடுபடுதல் ஆகியவற்றில் நமது முயற்சிகளை இரட்டிப்பாக்குவோம் என தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக