ஞாயிறு, 26 டிசம்பர், 2010

cong.will be defeated in the d.m.k.alliance: திமுக கூட்டணியில் போட்டியிட்டால் காங்கிரசு தோற்கும்: ஈவிகேஎசு .இளங்கோவன்

உண்மைதான். தி.மு.க.கூட்டணியில் போட்டியிட்டால் காங். தோற்கும். ஆனால் வேறு கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டால் படுதோல்வி அடையும். தனித்துப் போட்டியிட்டால் அல்லது தனி அணியில் போட்டியிட்டால் மண்ணைக் கவ்வும். எது வசதி என்று காங். முடிவெடுத்துக் கொள்ளட்டும். ஆனால் எவ்வாறு போட்டியிட்டாலும் கோவன் தொலைந்து போவது உறுதி. அதனைக் கோவன் மனத்தில் கொண்டு அமைதி காக்கட்டு்ம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

திமுக கூட்டணியில் போட்டியிட்டால் காங்கிரஸ் தோற்கும்: 
ஈவிகேஎஸ் இளங்கோவன்

மதுரை, டிச.25: திமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டால் காங்கிரஸ் தோற்றுவிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.அண்மையில் தமிழகம் வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியிடம் திமுக கூட்டணி பற்றி இளைஞர் காங்கிரஸார் புகார் கூறினர். அதேபோல், திமுக ஆட்சி சரியில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறிவருகிறார். இவை பற்றி இன்று மதுரை வந்த ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "திமுக கூட்டணியில் மீண்டும் போட்டியிட்டால் காங்கிரஸ் தோற்கும். தை பிறந்தால் வலி பிறக்கும். பொறுத்திருந்து பாருங்கள்" என்று கூறினார். அதற்கு வலி நிவாரணி ஏதேனும் உண்டா என்று செய்தியாளர் கேட்டதற்கு, " நிவாரணி எல்லாம் இல்லை நேரடியாக அறுவைச் சிகிச்சைதான்" என்று சூசகமாகப் பதிலளித்தார் இளங்கோவன்.
கருத்துகள்

ஸ்பெக்ட்ரம் கூட்டு கொள்ளையில் உங்க பங்க பிரிச்சிகிட்டு இப்ப கழட்டி விட்டா என்ன நியாயம்.... already நீ தோத்து போய்ட்ட ...இனி காங்கிரஸ் தமிழ் நாட்டில் வர முடியாது....
By udaya
12/25/2010 9:12:00 PM
அப்பாடா தமிழகத்திற்கு விடிவு காலம் வரப்போகிறது.சிறைக்கு போகப்போகிறது நாற்பது ஆண்டுகால கொள்ளை கூட்டம்.கோடீஸ்வரர்கள் கம்பி எண்ண போகிறார்கள். ஆகா நல்ல நேரம் வந்தாச்சு.
By rama
12/25/2010 9:11:00 PM
"தை பிறந்தால் வலி பிறக்கும்.". இளங்கோவன் ஒத்துகொண்டார். காங்கிரஸ்சுக்கு தமிழகத்தில் வழி பிறக்காது. வலிதான் பிறக்கும் என்பதை தெரிந்துகொண்ட இளங்கோவன் அவர்களே தமிழனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க முதலில் கற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் எத்தனை ராகுல்கள் வந்தாலும் தமிழனின் இதயத்தில் ராஜீவ், சோனியா, ராகுல் ஆகியோர்கள் ஏற்படுத்தி உள்ள வடுக்களை மாற்றமுடியாது. தனித்து நின்றால் காங்கிரசுக்கு ஜாமீன் தொகை கூட கிடைக்காது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
By தமிழன்.K
12/25/2010 9:11:00 PM
அதிமுக கூட்டணி வருமா காங்கிரஸ் ....
By மோகன்
12/25/2010 8:51:00 PM
எப்படியும் இளங்கோவனுக்கு வோட்டு விழப்போவதில்லை. வேட்டுதான். அறுவை சிகிச்சை எப்படியிருந்தாலும் நோயாளி இளங்கோவை காப்பாற்ற முடியாது. அருள்மொழி
By அருள்மொழி
12/25/2010 8:46:00 PM
ஈ வீ கே எஸ் அவர்களே நீங்க செஞ்ச துரோகத்துக்கு அடுத்தவன குறை சொல்லாதீர்கள்
By நாதன்
12/25/2010 8:42:00 PM
எந்த கூட்டணியில் போட்டியிட்டாலும் காங்கிரஸ் தோற்கும்
By mohan
12/25/2010 8:01:00 PM
அனுபவம் உள்ள இவர் சொல்வதில் உண்மை இருக்கலாம்.
By M.தமிழரசன்
12/25/2010 7:59:00 PM
உன்னை பற்றியும் தெரியும் காங்கிரஸ் பற்றியும் தெரியும்.சீமான் பெரியாரின் பேரன் என்று சொன்னால் அதற்க்கு எவர் என்ன சொன்னார் தெர்யும ?என் தாதா அப்படி எப்படி என்று இருப்பார் என்று கேவலமாக கூறியவன் தான் நீ .....
By பண்டரிநாதன் மயில்சாமி
12/25/2010 7:44:00 PM
தி.மு.க. கூட்டணியில் போட்டி இடாவிட்டால் தி.மு.க.தோற்குமே!
By Bala
12/25/2010 7:27:00 PM
எந்த கூட்டணியில் போட்டியிட்டாலும் காங்கிரஸ் தோற்கும்நிலையில் திமுக அதிமுகன்னு சும்மா பொலம்பாதே காங்கிராஸ் காரனைவிட பொதுமக்களுக்கு உன்னைபற்றி நன்றாகவே தெரியும்
By ரிஜி.கரியப்பட்டினம்
12/25/2010 6:37:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக