வெள்ளி, 4 டிசம்பர், 2009

ஸ்டா​லின் தலை​மை​யில் சென்னை நதி​நீர் ஆணை​யம்: தமி​ழக அரசு



கூவம் ஆற்​றைச் சீர​மைத்​தல்,​ வானூர்தி தொழிற்​பூங்கா மற்​றும் நிதி நக​ரம் அமைத்​தல் ஆகிய திட்​டங்​கள் தொடர்​பாக சிங்​கப்​பூர் சென்று அந்​நாட்டு அமைச்​
சென்னை, ​ டிச.3: கூவம் உள்​ளிட்ட நதி​க​ளின் சீர​மைப்​புத் திட்​டங்​க​ளைச் செயல்​ப​டுத்த சென்னை நதி​நீர் ஆணை​யம் என்ற தனி அமைப்பு ஏற்​ப​டுத்​தப்​ப​டும் என தமி​ழக அரசு அறி​வித்​துள்​ளது.​ இந்த ஆணை​யத்​துக்கு துணை முதல்​வர் மு.க.ஸ்டா​லின் தலை​வ​ராக இருப்​பார்.கூவம் ஆற்​றைச் சீர​மைத்​தல்,​ வானூர்தி தொழிற்​பூங்கா மற்​றும் நிதி​ந​க​ரம் ஏற்​ப​டுத்​து​தல் ஆகிய திட்​டங்​கள் தொடர்​பாக துணை முதல்​வர் மு.க.ஸ்டா​லின் தலை​மை​யி​லான குழு சிங்​கப்​பூர் சென்​றது. அங்கு,​ அமைச்​சர்​கள் மற்​றும் அதி​கா​ரி​க​ளைச் சந்​தித்து பல்​வேறு ஆலோ​ச​னை​களை நடத்​தி​யது அந்​தக் குழு.​ இந்த நிலை​யில்,​ தங்​க​ளது பய​ணம் குறித்து முதல்​வர் கரு​ணா​நி​தி​யி​டம் தலை​மைச் செய​ல​கத்​தில் வியா​ழக்​கி​ழமை விளக்​கி​னார் துணை முதல்​வர் மு.க.ஸ்டா​லின்.இது​கு​றித்து,​ அரசு வெளி​யிட்ட செய்தி:​ கூவம் நதி​யின் இன்​றைய நிலைக்​குக் கார​ண​மாக உள்ள பல்​வேறு சுற்​றுச்​சூ​ழல் பிரச்​னை​கள்,​ அவற்​றைக் களை​வது,​ சிங்​கப்​பூர் நதி​யைப் போலவே கூவத்​தை​யும் மாற்​றி​ய​மைத்​திட தேவை​யான நட​வ​டிக்​கை​கள் பற்றி துணை முதல்​வர் மு.க.ஸ்டா​லின் விளக்​கி​னார்.​ 65 கி.மீ., தூரத்​துக்கு:​ கூவம் உற்​பத்​தி​யா​கும் இட​மான திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் உள்ள கூவம் ஏரி​யில் இருந்து அது கட​லில் கலக்​கும் இடம் வரை மொத்​தம் 65 கி.மீ., தூரம் உள்​ளது.​ இந்த தூரத்​துக்கு செயல்​ப​டுத்​தப்​பட வேண்​டிய திட்​டங்​கள் பற்​றி​யும் முதல்​வ​ருக்கு விளக்​கப்​பட்​ட​தாக அர​சின் செய்​தி​யில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது. ​​ சென்னை நதி​நீர் ஆணை​யம்:​ கூவம் மற்​றும் சென்​னை​யில் உள்ள மற்ற நதி​க​ளின் சீர​மைப்​புத் திட்​டங்​க​ளைச் செயல்​ப​டுத்த முதல்​கட்​ட​மாக சென்னை நதி​நீர் ஆணை​யம்' என்ற தனி அமைப்பு ஏற்​ப​டுத்​தப்​பட்​டுள்​ளது. துணை முதல்​வர் மு.க.ஸ்டா​லின் இந்த அமைப்​பின் தலை​வ​ராக இருப்​பார். இதில்,​ குடிசை மாற்று வாரிய அமைச்​சர்,​ சுற்​றுச்​சூ​ழல் துறை அமைச்​சர்,​ தலை​மைச் செய​லா​ளர் மற்​றும் சம்​பந்​தப்​பட்ட துறை​க​ளின் செய​லா​ளர்​கள் உறுப்​பி​னர்​க​ளாக இருப்​பார்​கள் என்று அரசு தெரி​வித்​துள்​ளது.​ அதி​கா​ரி​கள் ஆய்வு:​அர​சின் இந்த அறி​விப்​பைத் தொடர்ந்து,​ கூவத்​தைத் தூய்​மைப்​ப​டுத்​தும் திட்​டத்​துக்​கான பூர்​வாங்​கப் பணி​களை பொதுப்​ப​ணித் துறை அதி​கா​ரி​கள் தொடங்​கி​யுள்​ள​னர். கூவம் ஆற்​றுப் பகு​தி​களை வியா​ழக்​கி​ழமை மாலை ஆய்வு செய்​த​னர்.​ இது​கு​றித்து,​ பொதுப்​ப​ணித் துறை அதி​கா​ரி​க​ளி​டம் கேட்ட போது,​ ""65 கி.மீ. நீள​முள்ள கூவம் நதி​யைத் தூய்​மைப்​ப​டுத்​தும் பணி பல்​வேறு கட்​டங்​க​ளாக மேற்​கொள்​ளப்​ப​டும். முதல்​கட்​ட​மாக,​ தொழில்​நுட்ப ரீதி​யாக ஆய்வு செய்​யும் பூர்​வாங்​கப் பணி​கள் நடை​பெ​று​கின்​றன'' என்று தெரி​வித்​த​னர்.
கருத்துக்கள்

கூவம் மணக்கிறது போல் இல்லாமல் சிறப்பாகச் செயல்படுத்த வாழ்த்துகள்! சுற்றுச் சூழல், நல வாழ்வு, சுற்றுலா முதலிய பிற நோக்கிலும் இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும். எனவே, சென்னையில் கழிவு நீரும் குப்பைக்கூளங்களும் தொழிற் குப்பைகளும் கூவத்தில் சேராமல் இருக்கவும் நிலையான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/4/2009 6:12:00 AM

Stalin, please implement the learning from Singapore to Chennai. Best wishes.

By Bala
12/4/2009 5:44:00 AM

Are they planning to introduce boat services in koovam? (As they did in the past?)

By anvarsha
12/4/2009 5:36:00 AM

Good news! Hope this gets implemented successfully soon.

By manidhan
12/4/2009 3:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக