செவ்வாய், 1 டிசம்பர், 2009

திரு​ம​ணம் கட்​டா​யப் பதிவு எப்​படி? பதி​வுத்​துறை விளக்​கம்



சென்னை, ​ நவ.30: தமி​ழ​கத்​தில் நவம்​பர் 24}ம் தேதிக்​குப் பிறகு நடை​பெ​றும் அனைத்து திரு​ம​ணங்​க​ளும் கட்​டா​ய​மா​கப் பதிவு செய்ய வேண்​டும் என்ற சட்​டம் அம​லுக்கு வந்​துள்​ளது.
​ இது​கு​றித்து,​ திரு​ம​ணங்​க​ளின் தலை​மைப் பதி​வா​ளர் மற்​றும் பதி​வுத் துறை தலை​வர் அளித்​துள்ள விளக்​கம்:​
​ தமி​ழ​கத்​தில் நவம்​பர் 24}ம் தேதி முதல் நடை​பெ​றும் அனைத்து மதங்​க​ளைச் சார்ந்த திரு​ம​ணங்​க​ளை​யும் கட்​டா​ய​மா​கப் பதிவு செய்ய வேண்​டும் என்​பது சட்​ட​மாக்​கப்​பட்டு உள்​ளது.
​ இந்து திரு​ம​ணச் சட்​டம்,​ இந்​திய கிறிஸ்​துவ திரு​ம​ணச் சட்​டம்,​ சிறப்​புத் திரு​ம​ணச் சட்​டம்,​ முகம்​ம​தி​யர்​கள் ஷரி​யத் திரு​ம​ணச் சட்​டம் மற்​றும் வேறு எந்த தனிப்​பட்ட சட்​டங்​க​ளின் கீழ் திரு​ம​ணம் பதிவு செய்​தி​ருந்​தா​லும் அதை கட்​டா​ய​மா​கப் பதிவு செய்ய வேண்​டும்.
​ இந்​தச் சட்​டப்​படி,​ சார் பதி​வா​ளர்​கள் அனை​வ​ரும் திரு​ம​ணப் பதி​வா​ளர்​க​ளாக நிய​மிக்​கப்​பட்​டுள்​ள​னர். இதற்​கான படி​வங்​கள் அனைத்து பதிவு அலு​வ​ல​கங்​க​ளி​லும் வழங்​கப்​ப​டும்.
​ திரு​ம​ணம் நடை​பெற்ற 90 நாள்​க​ளுக்​குள் ரூ.100 கட்​ட​ணத்​து​டன் திரு​ம​ணம் நடை​பெற்ற இடம் அமைந்​துள்ள எல்​லைக்கு உட்​பட்ட திரு​ம​ணப் பதி​வா​ள​ரி​டம் பதிவு செய்ய வேண்​டும். திரு​ம​ணத்​துக்​கான சாட்​சி​க​ளின் முக​வரி மற்​றும் அடை​யாள சான்று நகல்​களை இணைக்க வேண்​டும்.
​ திரு​ம​ணப் பதிவு மறுக்​கப்​பட்​டால்,​ அதன் மீது 30 நாள்​க​ளுக்​குள் மாவட்​டப் பதி​வா​ள​ரி​டம் மேல் முறை​யீடு செய்​ய​லாம். அதில்,​ திருப்தி இல்​லா​விட்​டால் அடுத்த 30 நாள்​க​ளுக்​குள் பதி​வுத் துறை தலை​வ​ரி​டம் மேல்​மு​றை​யீடு செய்​ய​லாம். அவ​ரது உத்​த​ரவே இறு​தி​யா​னது.
​ வழக்​கும்...அப​ரா​த​மும்...: நவம்​பர் 24}ம் தேதி முதல் நடை​பெ​றும் அனைத்து திரு​ம​ணங்​க​ளும் அவை எந்த சாதி மற்​றும் மத​மாக இருப்​பி​னும் உரிய நாளில் பதிவு செய்ய வேண்​டும்.
​ அவ்​வாறு பதிவு செய்​யா​வி​டில் அல்​லது தவ​றான தக​வல் அளிக்​கப்​பட்​ட​தாக அறி​யப்​பட்​டால் அல்​லது விதி மீறல் இருந்​தால் சம்​பந்​தப்​பட்ட நபர்​கள் மீது குற்ற வழக்கு தொட​ரப்​பட்டு நிரூ​பிக்​கப்​பட்​டால் அப​ரா​தம் விதிக்​கப்​ப​டும் என்று பதி​வுத் துறை தலை​வர் எச்​ச​ரித்​துள்​ளார்.
​ மேலும் விவ​ரங்​க​ளுக்கு

tnreginet.net என்ற இணை​ய​த​ளத்​தில் தெரிந்து கொள்​ள​லாம்.​

கருத்துக்கள்

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே திருமணப் பதிவு தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளது. அவ்வாறு பதிந்தவர்கள்தான் கரணம்/கருணம் எனப்படும் கணக்கப்பிள்ளைகள்.பின்னர் இவர்கள் சிற்றுர் ஆட்சி தொடர்பான பிற பணிகளையும் பார்த்தனர். வழி வழியாக வந்த இப்பணி முறையைத்தான் மக்கள் திலகம் ஒழித்து விட்டு சிற்றூர் ஆட்சி அலுவலர் பதவிகளை உருவாக்கினார். திருமணப் பதிவைக் கட்டாயமாக ஆக்கி நடைமுறைப்படுத்தும் பதிவுத் துறைக்கும் அரசிற்கும் பாராட்டுகள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
12/1/2009 3:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக