திங்கள், 30 நவம்பர், 2009

இந்​தி​யா​வு​டன் நல்​லு​றவு:​ பொன்​சேகா உறுதி



கொ ​ழும்பு,​ நவ. 29: அதி​ப​ரா​கத் தேர்ந்​தெ​டுக்​கப்​பட்​டால் இந்​தி​யா​வு​டன் நல்​லு​றவை தொட​ரு​வேன் என சரத் பொன்​சேகா கூறி​னார்.கொ​ழும்​பில் செய்​தி​யா​ளர்​க​ளி​டம் ஞாயிற்​றுக்​கி​ழமை அவர் கூறி​ய​தா​வது:​இந்த மண்​ட​லத்​தில் இந்​தி​யா​தான் நமக்கு அரு​கில் உள்ள வலி​மை​யான அண்டை நாடு. ​சீ ​னா​வு​ட​னும்,​ பாகிஸ்​தா​னு​ட​னும் இணைந்து பணி​யாற்​றி​னேன் என​ யா​ரா​வது கூறி​னால்,​ அது போரில் புலி​க​ளைத் தோற்​க​டிக்க ஆயு​தங்​கள் பெறு​வ​தற்​கா​கத்​தான் என்​ப​தைப் புரிந்து கொள்ள வேண்​டும்.பு​லி​ க​ளு​ட​னான போருக்​காக அந்த நாடு​கள் ஆயு​தங்​களை வழங்​கின. இந்​தியா நமக்கு அர​சி​யல்​ரீ​தி​யா​க​வும்,​ தார்​மி​க​ரீ​தி​யா​க​வும் உத​வி​க​ளைச் செய்​தது.இந்​தி​யா​வு​ட​னான உறவு எப்​போ​தும் உயர்ந்த நிலை​யி​லேயே உள்​ளது. எதிர்​கா​லத்​தி​லும் அதே​போன்று இருக்​கவே விரும்​பு​கி​றேன்.இந் ​திய கலா​சா​ரத்​தை​யும்,​ மக்​க​ளை​யும் மிக​வும் நேசிக்​கி​றேன். நான் ராணுவ அதி​கா​ரி​யாக பணி​யாற்​றத் தொடங்​கி​ய​போ​தில் இருந்தே இந்​தி​யா​வு​டன் எனக்கு நல்​லு​றவு உள்​ளது.இந்​தி​யா​வில் 4 முறை பயிற்சி மேற்​கொண்​டுள்​ளேன். இந்​திய ராணு​வம் குறித்து உயர்ந்​த​பட்ச மதிப்பு வைத்​துள்​ளேன் என்​றார்.​ ஆயுத கொள்​முத​லில் மரு​ம​க​னுக்​குத் தொடர்​பில்லை:​​ போருக்​குத் தேவை​யான ஆயு​தங்​களை வாங்​கி​ய​தில் எனது மரு​ம​க​னுக்கு எந்​த​வித தொடர்​பும் இல்லை.அ​து​போன்று செயல்​பட்​டி​ருந்​தால் உல​கத்​தி​லேயே இன்று நான்​தான் பெரும் பணக்​கா​ர​னாக இருந்​தி​ருப்​பேன்.ஆ​யு​தக் கொள்​மு​தல் அனைத்​தும் பாது​காப்​புச் செய​லர் கோத்​த​பய ராஜ​பட்​ச​வின் நேரடி மேற்​பார்​வை​யில்​தான் செய்​யப்​பட்​டன.ரா​ணு​வத் தள​பதி என்ற முறை​யில் ஆயு​தங்​க​ளின் தொழில்​நுட்ப விஷ​யங்​க​ளில் மட்​டுமே எனது கவ​னம் இருந்​தது.எ​னது மகன் தற்​போது அமெ​ரிக்​கா​வில் படித்து வரு​கி​றார். அவ​ருக்​கும் ஆயுத கொள்​மு​த​லுக்​கும் தொடர்​பில்லை. ​எ ​னது குடும்​பத்​தி​னர் மீது புழு​தி​வாரி தூற்​றும் செய​லில் சிலர் ஈடு​பட்​டுள்​ள​னர். அவர்​கள்​தான் இத்​த​கைய பிர​சா​ரத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​ற​னர் என்​றார் பொன்​சேகா.
கருத்துக்கள்

இந்தியாவைப் பாராட்டுவதாக எண்ணிக் கொண்டு அதன் வஞ்சகச் செயல்கைளத் தோலுரித்துக் காட்டும் உன்னை எப்படி இந்தியா ஆதரிக்கும். ஒரு வேளை நீ வெற்றி பெற்றால் இந்தியா தமிழர்களை அழிக்க உன்னைக் கைக்குள் போட்டுக் கொள்ளும். எனவே, நீ செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டு ஒப்புநர்(அப்ரூவர்) ஆக மாறிப் பாவ மன்னிப்பு கேள்! ஏமாளித் தமிழர்கள் இரக்கப்பட்டாலும் படலாம். உங்கள் இருவரின் மோதலால் வஞ்சகர்களின் முகமூடி கிழிக்கப்பட்டால் உலக மனித நேயர்கள் மகிழ்வார்கள. இரு தரப்புக் கொலையாளிகளையும் அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/30/2009 4:07:00 AM

Yennada Kabothi Ellala, Yenge un 420 website vilambaram? Thirunthivittaya?

By tamizhan
11/30/2009 4:03:00 AM

இப்போதே இரண்டு நாக்கு .ஜேவீ பீ கேட்டால் உனக்கு சப்போர்ட் இல்லை .இந்திய விரோத கட்சி உன் கழுத்தை பிடிக்கும் என்பது மறந்து போச்சா .அப்புறம் சீன மாமாவுக்கு என்ன சொல்லபோகிறாய் .பாகிஸான் மச்சானை எப்படி அசமளிக்க போகிறாய் கோதாபய சுடு தமிழனை என்றதும் கொன்று தலிவிடயே பாவி. நீ எல்லாம் மனிதனா.

By Ellalan
11/30/2009 1:23:00 AM

YOU CAN GO TO LTTE TEAM

By ponsegha
11/30/2009 12:58:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக