செவ்வாய், 1 டிசம்பர், 2009

மே 16-க்குள் நடத்தப்படும் பிளஸ்1 மாணவர் சேர்க்கை செல்லாது: மெட்ரிக் பள்ளி இயக்குநர் உத்தரவு



சென்னை, ​ நவ. 30:​ மெட்​ரிக் பள்​ளி​க​ளில் 11}ம் வகுப்​பில் மே 16}க்கு முன்​னர் நடை​பெ​றும் மாண​வர் சேர்க்கை செல்​லாது என்று மெட்​ரிக் கல்வி இயக்​கு​நர் மணி உத்​த​ர​விட்​டுள்​ளார்.
÷பல்​வேறு இடங்​க​ளில் உள்ள மெட்​ரிக் பள்​ளி​க​ளில் நவம்​பர்,​ டிசம்​பர் மாதங்​க​ளில் இருந்தே மாண​வர் சேர்க்கை நடை​முறை தொடங்​கப்​பட்டு,​ மாண​வர்​க​ளி​டம் அதிக அள​வில் பணம் வசூ​லிக்​கப்​ப​டு​வ​தாக புகார் வந்​த​தை​ய​டுத்து இந்த உத்​த​ரவு பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.
இது தொடர்​பாக மெட்​ரிக் பள்ளி இயக்​கு​நர் தனது உத்​த​ர​வில் கூறி​யி​ருப்​பது:​
÷பி ​ளஸ் 1 மாண​வர் சேர்க்கை மே மற்​றும் ஜூ​னுக்கு இடையே நடை​பெ​று​வ​து​தான் வழக்​கம். ஆனால் பல பள்​ளி​க​ளில் மாண​வர்​க​ளின் 10}ம் வகுப்பு அரை​யாண்​டுத் தேர்வு மதிப்​பெண்ணை வைத்து,​ மார்ச் மாதத்​துக்கு முன்​ன​தா​கவே மாண​வர் சேர்க்​கையை முடித்​து​வி​டு​கின்​ற​னர்.
÷இன்​ னும் சில பள்​ளி​கள் வரும் ஜன​வ​ரிக்​குள் மாண​வர் சேர்க்​கையை முடிக்​க​வும் திட்​ட​மிட்​டுள்​ள​தா​க​வும் இயக்​கு​நர் அலு​வ​ல​கத்​துக்கு புகார்​கள் வந்​துள்​ளன.
÷எ​னவே,​ அந்​தந்த மாவட்ட முதன்மை கல்வி அலு​வ​லர்​கள் தங்​கள் பகு​தி​க​ளில் உள்ள மெட்​ரிக் பள்​ளி​க​ளின் மாண​வர் சேர்க்​கையை முழு​மை​யா​கக் கண்​கா​ணிக்க வேண்​டும்.
÷த ​விர,​ பிளஸ் 1 மாண​வர் சேர்க்​கையை 10}ம் வகுப்​புத் தேர்வு முடிவு வெளி​யாகி ​ 15 நாள்​க​ளுக்​குள் ​(மே 16 முதல் மே 30}க்குள்)​ முடிக்க வேண்​டும். மே 16}ம் தேதிக்கு முன்​னர் நடை​பெ​றும் மாண​வர் சேர்க்கை செல்​லாது.
÷மா​ண​வர் சேர்க்​கைக்​கான விண்​ணப்​பங்​கள் ஒவ்​வொரு மாண​வ​ருக்​கும் வழங்​கப்​பட வேண்​டும். தவிர,​ மாண​வர் சேர்க்கை தொடர்​பாக மாண​வர்,​ பெற்​றோ​ரி​டம் நேர்​கா​ணல் எதை​யும் நடத்​தக் கூடாது.
÷10}ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாண​வர்​க​ளை​யும் 11}ம் வகுப்​பில் சேர்த்​துக் கொள்ள வேண்​டும்.
÷அ ​னைத்து வகை​யான மாண​வர் சேர்க்​கை​க​ளும் முடிந்​த​வு​டன் அது குறித்த விவ​ரங்​களை இயக்​கு​நர் அலு​வ​ல​கங்​க​ளுக்கு சம்​பந்​தப்​பட்ட பள்​ளி​கள் அனுப்பி வைக்க வேண்​டும். மா​ண​வர் சேர்க்கை தொடர்​பான வழி​காட்டி நெறி​மு​றை​கள் விரை​வில் எல்லா பள்​ளி​க​ளுக்​கும் வழங்​கப்​ப​ட​வுள்​ளன.

கருத்துக்கள்

நல்ல நடவடிக்கை. சரியாகப் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர்கள் முட்டி மோதிக் கொண்டும் பணத்தைக் கொட்டிக் கொடுத்துக் கொண்டும் மறைவாகச் சேர்க்கை பெற முயலக் கூடாது. விழித்துக் கொண்டுள்ள பள்ளிக் கல்வித் துறைக்கும் பதின்நி‌லைப்பள்ளி இயக்குநருக்கும் பாராட்டுகள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/1/2009 3:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக