புதன், 2 டிசம்பர், 2009

உல​கம் முழு​வதும் வாழும் ஈழத்​த​மி​ழர்​கள் யாழ்ப்​பா​ணத்​தில் ஜன​வரி 12-ல் சந்​திப்பு



கொழும்பு, ​ டிச.1:​ உல​கம் முழு​வ​தும் வாழும் இலங்​கைத் தமி​ழர்​கள்,​ யாழ்ப்​பா​ணத்​தில் அடுத்த ஆண்டு ஜன​வரி 12-ம் தேதி சந்​திக்​க​வுள்​ள ​னர்.​ இந்த சந்​திப்​பின் போது,​ போரி​னால் பாதிக்​கப்​பட்ட இலங்​கை​யின் வடக்​குப் பகு​தி​யில் மறு​வாழ்​வுப் பணியை மேற்​கொள்​ளு​தல் குறித்து ஆலோ​சித்து திட்​டம் தீட்​ட​வுள்​ள​னர்.​ யாழ்ப்​பாண பல்​க​லைக்​க​ழ​கத்​தில் நடை​பெ​ற​வுள்ள இந்த சந்​திப்​பில் உல​கம் முழு​வ​தும் வசிக்​கும் பல்​வேறு துறை​க​ளைச் சார்ந்த ஈழத்​த​மி​ழர்​கள் பங்​கேற்​க​வுள்​ள​னர்.​ இலங்​கை​யில் ராணு​வத்​துக்​கும்,​ தமி​ழீழ விடு​த​லைப் புலி​க​ளுக்​கும் இடையே நடந்து வந்த 30 ஆண்​டு​கால போர் முடி​வுக்கு வந்​துள்​ளது.​ போரி​னால் பாதிக்​கப்​பட்ட வடக்​குப் பகு​தி​யில் மறு​வாழ்​வுப் பணி நடந்து வரு​கி​றது.​ இந்​நி​லை​யில் இந்த மறு​வாழ்​வுப் பணி​யில் பங்​கேற்க உல​கம் முழு​வ​தும் வாழும் இலங்​கைத் தமி​ழர்​க​ளுக்கு அந்​நாட்டு சமூக நலத்​துறை அமைச்​சர் டக்​ளஸ் தேவா​னந்தா சமீ​பத்​தில் அழைப்பு விடுத்​தார்.​ இந்த அழைப்​பின் பேரில்,​ ஈழத்​த​மி​ழர்​கள் தற்​போது சந்​தித்து மறு​வாழ்வு திட்​டத்தை தீட்​ட​வுள்​ள​னர்.
கருத்துக்கள்

உலக ஈழத் தமிழர்கள் சந்திப்பது மகிழ்ச்சி. ஆனால். டக்ளசு அழைப்பின் பேரில் சந்திப்பவர்கள் இனப் பற்றாளர்களாக இருக்க இயலா‌தே!

ஐய வினாவுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/2/2009 4:34:00 AM

இதற்கு யார் வருவார்கள்? கருணா, டக்ளஸ் இவர்களது ஆதரவாளர்கள் மட்டும்தானே அங்கு வரமுடியும். இது இலங்கையரசின் திட்டமிடப்பட்ட காய்நகர்த்தலே!

By Ganesh
12/2/2009 4:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக