செவ்வாய், 30 அக்டோபர், 2012

நடுவானில் பறந்த விமானத்தில் தூங்கிய பிரிட்டன் வலவர்கள்(பைலட்டுகள்)

நடுவானில் பறந்த விமானத்தில் தூங்கிய பிரிட்டன்  வலவர்கள்(பைலட்டுகள்)
ிர்
இலண்டன்,: "பிரிட்டன் ஏர்லைன்ஸ்' விமானத்தின் இரண்டு பைலட்டுகள், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போதே, தூங்கிக் கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.பிரிட்டன் ஏர்லைன்ஸ் விமானத்தில், பைலட்டுகள் அடிக்கடி தூங்குவதாக புகார் வந்தன. இந்நிலையில், விமானத்தின் முதன்மை பைலட், கழிப்பறைக்கு செல்வதற்காக, சக பைலட்டுகளிடம், விமானத்தை ஓட்டும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். சில நிமிடங்கள் கழித்து, முதன்மை பைலட், விமானிகள் அறைக்கு தொடர்பு கொண்ட போது, பதில் ஏதும் வரவில்லை. மீண்டும் தொடர்பு கொண்டு, மற்றொரு பைலட்டிடம் பேச முயன்றார். அவரிடமிருந்தும், பதில் வரவில்லை. மூன்றாவது பைலட்டை தொடர்பு கொண்ட போதும், பதில் கிடைக்கவில்லை.
நிலைமையை உணர்ந்து கொண்ட கேப்டன், விமானிகள் அறைக்கு சென்று பார்த்தபோது, விமானிகள், தூங்கிக் கொண்டிருந்தனர். அதுவரை, நடுவானில் விமானம் பறந்து கொண்டே தான் இருந்தது. கேப்டன் எழுப்பியதும், உரிய இடத்தில் விமானம் தரையிறங்கியது. அப்போதும், மூன்றாவது பைலட் தூங்கி கொண்டே தான் இருந்தார்.
இவர்களது பெயரை, பிரிட்டன் விமானத்துறை வெளியிட மறுத்து விட்டது.இது குறித்து, பைலட்டுகள் சங்க நிர்வாகிகள் குறிப்பிடுகையில், "விமானம் பறக்கும் போது, அசதி காரணமாக விமானிகள் தூங்குவது சகஜம் தான்' என்றனர்.விமானிகளின் இந்த பாதுகாப்பற்ற செயல் குறித்து, விமான அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது 

2 கருத்துகள்:

  1. விமானம் பறக்கும் பொது உரிய உயரத்தை, வழியை அடைந்தவுடன் விமானிகள் auto pilot நிலையில் (விமானத்தை தானாகவே செலுத்தும் வகையில்) வைத்துவிட்டு தூங்குவது இயல்புதான். ஏதேனும் சிக்கல் என்றாலோ அல்லது இறங்கவேண்டிய இடம் வந்ததும் எச்சரிக்கை மணி ஒலிக்கும் போதோ விழித்தெழுவது அவசியம்.

    ஆறு இளங்கோவன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். ஆனால், வானூர்தித்தலைமை வலவரே முறையிட்டுள்ளதால் முழுமையான செய்தி வெளிவரவில்லை என எண்ண வேண்டும்.

      நீக்கு