வெள்ளி, 7 ஜனவரி, 2011

Insult to Abdul kalam? : உணவு தருவதில் காலத்தாழ்ச்சி- அப்துல் கலாமுக்கு அவமதிப்பு?!

மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் சமையல் கிடையாது. அருகில் உள்ள உணவகங்களில் காலை 7.௦௦ மணிக்கு உணவு ஆயத்தமாக  இராது. இதனை முன்னரே அவரிடம்  தெரிவித்திருக்க வேண்டும். அல்லது தொலைவில் இருந்துவாங்கித் தந்திருக்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க  மேதகு அப்துல்கலாம் போன்றவர்களை அழைப்பவர்கள் பொறுப்பேற்காவிட்டாலும் வரவேற்பு வட்டாட்சியர் ஓர் உதவியாளரை அவரைக் கவனிக்கும பொறுப்பில் ஏற்பாடு செய்ய வேண்டும். இத்தகைய சிறு நிகழ்வுகளை அவர்  பொருட்படுத்தாவிட்டாலும் மதுரை நிருவாகத்திற்கும் தமிழக அரசிற்கும் அவப் பெயர் என்பதை உணர வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

உணவு தருவதில் தாமதம் - அப்துல் கலாமுக்கு அவமதிப்பு?!

மதுரை: இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு காலை உணவு வழங்குவதில் தாமதம் செய்ததால், அவருடைய பயண நிகழ்ச்சி ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது. மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமுக்கு, காலை 7 மணிக்கு உணவு தரப்பட வேண்டும் என்று உதவியாளர்கள் நேற்றிரவே சொல்லியிருந்தனர். அதன்படி, இன்று காலை 7 மணிக்கு உணவுண்ணச் சென்றார் அப்துல்கலாம். ஆனால் உணவு தரப்படவில்லை. சிறிதுநேர இடைவெளியில் மூன்று முறை சென்று அமர்ந்திருக்கிறார். ஆனாலும் உணவு பரிமாறப்படவில்லை. சுமார் ஒரு மணி நேர தாமதத்தில் 7.50க்கு மேல்தான் காலை உணவு தரபட்டுள்ளது.அதனால் அவருடைய அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரு மணி நேரம் தாமதம் ஆகியுள்ளது. ஒரு மணிநேர தாமதத்துக்குப் பிறகு அவர் ராமேஸ்வரம் புறப்பட்டார். மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் நடந்த சம்பவம் என்பதால், இந்த விவகாரம் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது.
கருத்துகள்

IT IS VERY INCIDENCE.
By rajasekar
1/7/2011 6:09:00 PM
Will this happen to Italy Dancekari?
By verathiveran
1/7/2011 5:44:00 PM
Karunanidhi has made most of the people in Tamilnadu drunkards ( kudi karankal) and laggards ( soamperikal). Tamilnadu is going into comotose. Within another five years, if this situation continues, Tamilnadu would be almost dead.
By annakan
1/7/2011 5:43:00 PM
டாக்டர் அப்துல் கலாம் இந்தியாவிற்கு கிடைத்த ஒரு அறிய பொக்கிஷம்! கருணாநிதியின் கேவலமான ஆட்சியில் இந்த மாபெரும் மனிதருக்கு கூட மரியாதை கிடைக்கபெராது!
By ஸ்ரீனி ம
1/7/2011 5:40:00 PM
இதே ஒரு தி.மு.க எம்.எல்.எ க்கு ஏற்பட்டு இருந்தால் நடப்பதே வேறு.என்ன செய்வது இவர் வெறும் முன்னாள் ஜனாதிபதி மட்டுமே..
By கண்ணன்
1/7/2011 5:05:00 PM
இதுவே கருணாநிதி தங்குவதாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
By Senthilkumar
1/7/2011 4:30:00 PM
இந்திய அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் அரசாங்க- இராணுவ குழுவையும்,பாகிஸ்தான் அணுஆயுதந்க்களை கட்டுப்படுத்தும் குழுவையும்( எஸ். சி.டி),அமெரிக்க - ஐரோப்பிய(ஜெர்மானிய) சக்திகளும்,அமெரிக்க- இஸ்ரேலிய- சீன,சக்திகளும் கட்டுப்படுத்த முயல்கின்றன!.திரு.அப்துல்கலாம் அவர்கள் இதுநாள் வரை ஒரு "இந்தியராகவே" செயல்பட்டுவந்தார்,பல எதிர்ப்புகளை சந்தித்து.ஆனால் நேரு -கேபி எஸ் மேனன் - எம் கே நாராயணன் - தினமலர்?,ஆகியோரின் பாதுகாப்பு கொள்கைகள் "சோவியத் சிந்தனையில்(ஊழல்)" ஊறியவை.கலாச்சாரத்தையும்,வரலாற்றையும் மறந்து பணத்தின் பின்னால் திரிந்தால் ஆப்கானிஸ்தான் நிலையே (பனானா ரிபப்ளிக்(ரத்தன் டாட்டா கூறியபடி)),இந்தியாவிலும் ஏற்படும்!.
By மோகன்
1/7/2011 3:44:00 PM
இதே மாதிரி அழகிரிக்கு நடந்திருக்குமா? அப்துல் கலாம் நல்லவர் என்பதால் பெரிது பண்ணாமல் விட்டுவிட்டார். இனியும் இந்த மாதிரி நடக்காமல் பார்த்துக்கொண்டால் நல்லது.
By ரமேஷ் K ர
1/7/2011 3:40:00 PM
என்ன கொடுமை சார் இது !!!!
By எ.Baskaran
1/7/2011 3:30:00 PM
nallavanurukku kaalam ille....
By ram,malaysia.
1/7/2011 3:17:00 PM
ஒரு முன்னாள் ஜனாதிபதி ,ஒரு சிறந்த விஞ்ஞானி ,மிகவும் எளிமையானவர் ,அவரை தமிழக அரசும் செம் மொழி மாநாட்டில் அழைப்பு விடுக்காமல் அவமான படுத்தினர் ,அதிகாரிகளும் இன்று சாப்பாட்டிற்கு அவரை காக்க வைத்து அவமானபடுத்தி விட்டார்கள் இதற்க்கு மு க பதில் சொல்லியை ஆகவேண்டும்
By Bulletmani
1/7/2011 3:16:00 PM
RIGHT THE PERSON TO AVOID IRRESPONSIBILITY MAINTENANCE.
By PARANJOTHI
1/7/2011 3:13:00 PM
ஒரு அறிவியல் அறிஞர் முன்னால் குடியரசுத்தலைவர் அவர்களுக்கு செம்மொழி மாநாட்டிற்கு அழைப்பிதழ் அனுப்பபடவில்லை தற்போது உரிய முறையில் விருந்தோம்பல் செய்யப்பட வில்லை கற்றோரை கற்றோரரே காமுறுவர்
By அ.அருமை நாதன்
1/7/2011 2:42:00 PM
குறித்த நேரத்திற்கு உணவு தராத பணியாளர் மேலாளர் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
By சுப்பன்
1/7/2011 2:32:00 PM
முன்னால் ப்ரெசிடென்ட் க சோதனை சாதாரண மனிதனின் நிலைமை யோசிக்கணும்
By babu
1/7/2011 2:28:00 PM
Any job done by all Government employees (centre and state) will be like that only. Irony is, in this case, the affected party himself is/was a Government Servant at the top most rank.
By Subramanian
1/7/2011 2:26:00 PM
good man
By gk
1/7/2011 2:23:00 PM
இந்த நிகழ்ச்சி எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது, திரு கலாம் நம் இந்திய நாட்டின் பொக்கிஷம். தமிழக ஆட்சியாளர்கள் இதை உணரவில்லை என்றால் உணரவைக்கபடுவர்கள் சீக்கிரம்.
By Dravidan
1/7/2011 2:14:00 PM
நாங்கெல்லாம் கருணாநிதி, அழகிரி, ஜெயா மற்றும் சசிகல இவங்கலக்குதான் பயப்படுவோம்..
By இந்தியன்
1/7/2011 2:10:00 PM
எனக்கு தெரிந்து இந்திய-வில் இருந்த ப்ரெசிடென்ட்-லேயே இவர் ஒருவர் சாகிரடை அரசியல் வாசனை கிட்ட போகாமல் இருந்தவர், இவரை மாதிரி ஒரு நல்ல மனிதனை பார்க்க முடியாது இந்திய-வில், அண்ணல் இந்த முறை சோனியா என்கிற நாதரை அவர் மீண்டும் பத்வைவ்யில் இருந்தால் நாம கொள்ளை அடிக்க முடியாது அண்ட் ராணுவ ரகசியம் எல்லாம் இத்தாலி-கு விற்க முடியாது என்று அவள் அவளை மாதிரி ஈமற்றுகிற ஒரு திருட்டு நாதரி லேடி-இ ப்ரெசிடென்ட் போஸ்ட்-கு நிற்க வைத்து இருக்கிறாள் அந்த ஓடு காலி சோனியா நாதரை, பார்த்து கொண்டே இருங்கள் இந்த சோனி-வும் அண்ட் ராவுல் வின்ஷி என்கிற ராகுல் -உம இந்திய-வி விற்று விற்று பொய் விடுவார்கள் kandippaga
By ramachandran
1/7/2011 2:00:00 PM
என்ன சொல்வது . நமது கடவுள் போன்றவருக்கு நேர்ந்த அவமரியாதை . சம்பந்தப்பட்ட நபர் தன்னையே ஏமாற்றியது போல்தான் இது . இந்த நாடு எப்போதுதான் திருந்துமோ . இது எல்லாம் திமுகா வாழ் வந்த வினை
By கிட்டுசாமி
1/7/2011 1:53:00 PM
If you are good and honest person , this is what you will receive in the current society. CM will be more happy. Because thats what he expect from every lazy Tamilian after eating his free food.
By siva
1/7/2011 1:34:00 PM
Its difficult to find such a great man in our country, this all should reflect in coming election,,
By ramesh
1/7/2011 1:09:00 PM
வாழ்வில் பல துன்பம் மற்றும் கஷ்டங்கள் கண்டவர் / கடந்தவர் , இது எல்லாம் அவருக்கு பிரச்சனை இல்லை சார் !!! இந்நிகழ்வு மதுரை வீரர்களுக்கு தான் இது களங்கம் தரும்.
By சையத் நாசிருதின்
1/7/2011 12:36:00 PM
இது அரசியல் சூழ்ச்சியா? அல்லது அதிகாரிகளின் கவனக்குறைவா? தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். வெட்கம் வெட்கம் வருத்தத்துடன்.
By தஞ்சை ராஜு
1/7/2011 12:17:00 PM
இது முதன்முறையல்லவே. இதுபோல் பல இடங்களில் பல முறை ஆளும்வர்க்கம் அவரை அவமானப் படுத்தியுள்ளது. ஏனென்றால், அவரது நேர்மையும், தேசப் பற்றும் இவர்களை உறுத்துகிறது. அவர் கொள்ளையர்களுக்கு துணை போவதில்லை என்பது இவர்களால் சகித்துக் கொள்ள முடியாத ஒன்று. இன்னும் என்னென்ன கேவலங்களை அரங்கேற்றப் போகிறார்களோ?
By Murugadoss
1/7/2011 12:01:00 PM
அவர் இதனை எல்லாம் பெரிதுபடுத்த மாட்டார். ஆனாலும் இது போன்ற தவறுகள் மீண்டும் ஏற்படாதவாறு கவனமுடன் செயல்படவேண்டும்
By deena
1/7/2011 11:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக