சனி, 20 நவம்பர், 2010

சாய் பாபா பிறந்த நாள் கொண்டாட்டம்: குடியரசுத் தலைவர் பங்கேற்பு

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமென்று தெரியவில்லை. சமயத்தலைவர்கள் நிகழ்ச்சியில் நாட்டடின் முதல் குடிமகன் அலலது குடிமகள் பங்கேற்பது தடுக்கப்பட வேண்டும். இவர்கள் அவர்கள் காலடியில் வீழ்வதும் இருக்கைகள் தாழ்வாக இடப்படுவதும்  சமயத்தலைவர்களே மிக உயர்ந்த நிலையில்  உள்ளதாக நடததப்படும் நிகழ்வுகளு்ம் முதல்  குடிமகனை  அல்ல அவர் வழியில் நம்நாட்டை இழிவு படுத்துவதாக்கும். அனைத்துச சமயச் சார்பு நாடாகத் திகழும் நம் நாடு  உண்மையிலேயே சமயச் சார்பற்ற நாடாகத திகழ வேண்டும். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்.
சாய் பாபா பிறந்த நாள் கொண்டாட்டம்: 
குடியரசுத் தலைவர் பங்கேற்பு


சாய் பாபாவின் 85-வது பிறந்தநாளை முன்னிட்டு புட்டபர்த்தியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டத்தின்போது சாய் பாபாவுடன் பேசுகிறார் குடி
புட்டபர்த்தி, நவ. 19: ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 85-வது பிறந்த நாளையொட்டி புட்டபர்த்தியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கலந்து கொண்டார்.ஒவ்வொருவரும் சுய அறிவு, தன்னம்பிக்கை ஆகியவற்றைப் பெற ஸ்ரீ சத்ய சாய் பாபா மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டுகிறேன் என இந்நிகழ்ச்சியில் பேசுகையில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் குறிப்பிட்டார்.சாய் பாபாவின் 85-வது பிறந்த நாள் நவம்பர் 23-ல் கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி மகளிர் தினம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமென்று தெரியவில்லை. சமயத்தலைவர்கள் நிகழ்ச்சியில் நாட்டடின் முதல் குடிமகன் அலலது குடிமகள் பங்கேற்பது தடுக்கப்பட வேண்டும். இவர்கள் அவர்கள் காலடியில் வீழ்வதும் இருக்கைகள் தாழ்வாக இடப்படுவதும்  சமயத்தலைவர்களே மிக உயர்ந்த நிலையில்  உள்ளதாக நடததப்படும் நிகழ்வுகளு்ம் முதல்  குடிமகனை  அல்ல அவர் வழியில் நம்நாட்டை இழிவு படுத்துவதாக்கும். அனைத்துச சமயச் சார்பு நாடாகத் திகழும் நம் நாடு  உண்மையிலேயே சமயச் சார்பற்ற நாடாகத திகழ வேண்டும். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன். (வைகறைக்கு முன்பே முதலாகப் பதி்ந்தும் முதலாகப் பதிவு இல்லை என்கிறீர்களே ! வாசகர் கருத்தை மதியுங்கள். சமயங்களுக்கு 
அப்பாற்பட்டவராகக் குடியரசுத் தலைவர் வி ளங்க வேண்டும்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக