வியாழன், 18 நவம்பர், 2010

மேல் அடுக்கில் சுழற்சி

சென்னை, நவ. 18-
வளி மண்டலத்தின் மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தென் தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறினார். வங்க கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு அரபிக்கடல் பகுதிக்கு சென்று விட்ட நிலையில் தமிழ்நாட்டில் ஆங்காங்கே லேசாக மழை பெய்து வருகிறது. ஈரப்பத காற்று காரணமாக இந்த மழை பெய்கிறது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:-
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடல் பகுதிக்கு சென்ற நிலையில் வட தமிழ்நாட்டில் வளி மண்டல சுழற்சியால் மழை குறைந்துள்ளது.
ஆனால் இலங்கை பகுதியில்வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேல் அடுக்கில் சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
நெல்லை, கன்னியாகுமரி, மாவட்டங்களில் இனறும் நாளையும் கன மழை பெய்யும்.
இவ்வாறு ரமணன் கூறினார்.
நேற்று அதிக பட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 9 செ.மீ. மழையும், சாத்தாங்காட்டில் 8 செ.மீ. மழையும் பொள்ளாச்சியில் 6 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
கருத்து

Thursday, November 18,2010 05:28 PM, Ilakkuvanar Thiruvalluvan said:
செய்தியில் வளி (காற்று) மண்டலம் எனச் சரியாகக் குறிப்பிட்டுள்ளது. தலைப்பில் வழி எனத்தவறாகக் குறிக்கப் பெற்றுள்ளது. உடனே திருத்த வேண்டுகின்றேன். அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்
Thursday, November 18,2010 04:51 PM, தமிழன் said:
எனக்கு தெரிஞ்சி மழை இன்னும் வரல வந்தா நல்லா இருக்கும்
Thursday, November 18,2010 04:44 PM, fred said:
சில இடங்களில் வரலாம். வராமலும் இருக்கலாம். இப்படி ஒரு வானிலை மையம் நம்ம தமிழ் நாட்டில். கஷ்டம். ரமணன்
Thursday, November 18,2010 04:40 PM, முல்லை மைந்தன் said:
அப்போ மேல் அடுக்கில் குடியிருப்பவர்கள் எல்லாம் கீழ் அடுக்கில் குடிபெயருங்கள். ஒன்னும் ஆகாது.
Thursday, November 18,2010 04:34 PM, Vijay said:
அப்ப சத்தியமா மழை வராது.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Friday, November 19,2010 03:24 AM, Ilakkuvanar Thiruvalluvan said:
வழி எனத்தவறாகக் குறித்ததை வளி எனத் திருத்திக் கொண்டமைக்கு நன்றி. ஆனால், திருத்தியதை இழிவாக எண்ண வேண்டா. கவனக் குறைவாகத்தவறு நேர்ந்துள்ளது. படிப்பவர் சுட்டிக் காட்டியதும் திருத்திக் கொண்டீர்கள். இது பாராட்டிற்குரிய செயல்தானே. திருத்துமாறு சொன்ன குறிப்பும் இப்பாராட்டுக் குறிப்பும் இருந்தால்தானே உங்கள் பணிக்குச் சிறப்பு. பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Thursday, November 18,2010 04:51 PM, தமிழன் said:
எனக்கு தெரிஞ்சி மழை இன்னும் வரல வந்தா நல்லா இருக்கும்
On Thursday, November 18,2010 06:23 PM, மழை வேண்டி said :
திருநெல்வேலியில் இன்று மழை இல்லை எப்போது மழை வரும்? என்று கூறுங்கள் mr .ரமணன் .
On Thursday, November 18,2010 09:27 PM, முல்லை மைந்தன் said :
தலைவா மழை வேண்டி.. நாளை திருநெல்வேலியில் கணமழை பெய்யும்.பாருங்கோ. அப்புறம் எனக்கு நன்றி கூறுங்கோ.
Thursday, November 18,2010 04:44 PM, fred said:
சில இடங்களில் வரலாம். வராமலும் இருக்கலாம். இப்படி ஒரு வானிலை மையம் நம்ம தமிழ் நாட்டில். கஷ்டம். ரமணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக