ஞாயிறு, 14 நவம்பர், 2010

தங்கபாலுவுக்கு மதிமுக கண்டனம்

தங்கபாலுவுக்கு மதிமுக கண்டனம்

சென்னை, நவ.13- தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு கண்டனம் தெரிவித்து மதிமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் மாசிலாமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஜனநாயக மீட்புக்காக மிசாவில், இலங்கைத் தமிழர் நலனுக்காக கருத்துரிமை காத்திட தடா, பொடா என்றும், தமிழகத்தின் வாழ்வு ஆதாரங்களை காக்கும் போராட்டங்கள் பலவற்றிலும் மக்கள் நலனுக்காக பலமுறை கைது செய்யப்பட்டு நீண்ட நாள் சிறைவாசம் செய்தவர் வைகோ. அது மட்டுமல்ல, சிங்கள் வெறியர்களால் தாக்கப்பட்டு கை, கால்கள் ஊனமாகி வந்த தமிழர்களுக்கு மருத்துவ சிகிச்சையளித்த மனிதநேய செயலுக்காக வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் தடாவில் இருந்ததும் நாட்டு மக்கள் அறிவார்கள்.இந்திய வரலாற்றில் இத்தகைய பெருமை நேருவிற்குப் பிறகு அரசியல் காரணங்களுக்காக அதிக நாள் சிறைவாசம் செய்தவர் என்கிற வரலாற்றுப் பெருமை வைகோவுக்கு மட்டுமே உண்டு.சமீபத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கக் கோரி தீர்ப்பாயத்தின் முன்பு வழக்கறிஞராக வாதாடி உலகத் தமிழர்களின் முன்பு தலைநிமிர்ந்து நிற்கும் உண்மைத் தமிழன் வைகோ என்பதை நாடறியும், உலகத் தமிழர்கள் அறிவார்கள்.மக்களையும் சந்திக்காமல், மக்கள் நலனுக்காகப் போராடாமல் குளுகுளு அறையில் அமர்ந்து கொண்டு குறுக்கு வழியில் பதவி நாற்காலியில் தங்கபாலு போன்றவர்கள் கசங்காத கதர் சட்டையுடன் காலத்தைக் கழிக்கின்ற நபர்களுக்கு வைகோ என்ற பெயரைக் கூட உச்சரிக்கும் தகுதி கிடையாது.தங்கபாலுவுக்கு வேண்டுமானால் வரலாற்றின் சங்கதிகள் மறந்து இருக்கலாம். இப்போது அவர் பதவி நாற்காலியில் எப்படி உட்கார்ந்திருக்கிறார் என்பதை அவரது கட்சியினரே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கடலூரில் தொடங்கி திண்டிவனத்தில் முடிந்த இவரது ஜாமீன் கதை பற்றி அதே கட்சியின் தலைவர்களில் ஒருவரான இளங்கோவனே பேசுகிறார்.பதவியைப் பற்றிக் கவலைப்படாத வைகோ விரும்பியிருந்தால் வாஜ்பாய் அரசில் நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் என்று பெரிய பதவியையே வகித்திருப்பார். வைகோவின் தகுதி பற்றி தமிழகத்தில் அனைவரும் அறிவார்கள். இதனை தங்கபாலு போன்ற பதவிப் பிரியர்களின் கூட்டம் தெரிந்திருக்க முடியாது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

பெருந்தலைவர் காமராசர் கட்சி நலனுக்காக முதல்வர் பதவியைத் துறந்தது தமிழ்நாட்டு நலனுக்குக கேடாக முடிந்தது. அதுபோல் பதவி ஆசை இல்லை எனத் தனக்கு வர இருந்த அமைச்சுப் பதவியை மறுத்ததால் தமிழர் பெற்றிருக்க வேண்டிய நலன்கள் புறக்கணிக்கப்பட்டன; ஈழத் தமிழர்களும் அயலகத் தமிழர்களும் அடைந்திருக்க வேண்டிய உரிமைகள் இல்லாது போயின. இனியேனும் வைக்கோ அவர்கள் தனக்குப் பதவி தேடி வந்தால் மக்கள் நலன் கருதி ஏற்க வேண்டும். மாறாகப் பதவி ஆசை இல்லை என அதைத் துறப்பதாயின் அவர் அரசியலை விட்டே துறக்கலாம். எந்த மக்களின் நலனுக்காக அவர் போராடுகிறாரோ அந்த மக்களின் நலனை அடையும் கருவியாகத்தான் அவர் பதவிளைக் கருத வேண்டும். ( தகர பாலு என்ன சொன்னார்?) வாழ்க வைக்கோ! வெல்க அவர் தொண்டு! 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2010 3:24:00 AM
தமிழக பெரிய கட்சிகளிடமும் தேசிய கட்சிகளிடமும் எதற்காகவோ பெரும்பாலான ஏமாளிகள் மயங்கி ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்துவிட்ட பிறகு, உண்மையாக மக்கள் தேவை அறிந்து குரல் எழுப்பும் வைகோ போன்றவர்களை பெரிய அறிவாளிகள் போல் விமர்சிக்கும் அரை வேக்காடுகளால் கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்காமல் தான் போகும்.
By நல்லரசு
11/13/2010 11:28:00 PM
சொந்த கட்சிக்காரர்களால் சென்ற இடமெல்லாம் சிறப்பு(சிராய்ப்பு)(செய்யப்படுபவர்தான் இந்த "கைப்புள்ள" தஙகபாலு. ஆனால் தமிழகத்தில் பிறந்த நாள் கொண்டாடாத ஒரே தலைவர் வைகோ தான்.
By Narumugai, Aaliyur
11/13/2010 10:20:00 PM
சொந்த கட்சிக்காரர்களால் சென்ற இடமெல்லாம் சிறப்பு செய்யப்படுபவர்தான் இந்த "கைப்புள்ள" தஙகபாலு.ஆனால் தமிழகத்தில் பிறந்த நாள் கொண்டாடாத ஒரே தலைவர் வைகோ தான்.
By Narumugai, Aaliyur
11/13/2010 10:16:00 PM
தங்க பாலு காங்கிரஸின் " செம காமெடி பீஸ்" . வழ வழ கொழ கொழ கோமாளி. உங்கள் அறிக்கைக்குப் பிறகு இந்தக் கோமாளி நாற வாயைத் திறக்க மாட்டான்
By tamilan
11/13/2010 9:07:00 PM
Well, I do agree with some readers’ position that LTTE leader, Prabakaran is a terrorist, that is after the assassination of Rajiv Gandhi in 1991. That is, he can be assumed to be an illegal terrorist! What about the tens and thousands of innocent civilians killed during Indian Army occupation of Jaffna Peninsula immediately after signing with SL the Indo-SL Pact 1987. Can we called this legal terrorism of the Congress-led Indian Government then! Some 1400 Indian soldiers also died – countless number of others wounded. In other words, Indian army was also presumably involved in war crimes. A clear violation of UN Geneva Convention. Any action taken against those involved in war crimes then. Until today, no one has answered for what purpose Rajiv dispatched Indian army to SL .Whether the Indian Government dispatched army to SL as peace-keeping force? If so,why so many deaths of innocent civilians and Indian soldiers. Why was Rajiv summoned to White House then? Is this the right act
By Palanisamy T
11/13/2010 8:58:00 PM
தமிழ் நாட்டில் செல்வாக்கு இல்லாதவர்கள் வைகோவும் நெடுமாறனும். எந்த தொகுதியில் நின்றாலும் தனிப்பட்ட முறையில் வெற்றிபெர முடியாது. இந்த சூழ்னிலையில் இவர்கள் எப்படி தமிழர்களின் தலைவர்களகமுடியும்.தங்களுக்குத்தாங்களே உலகதமிழர்களின் ஒருங்கிணைப்பாளர் என்ற பட்டத்தை கொடுத்துக்கொண்டார்கள். ஒரு வார்டு உறுப்பினராக கூட தனிப்பட்ட முறையில் நின்று இவர்களால் வெற்றிபெர முடியாது. அதற்க்காக தங்கபாலு கூறியது ஏற்புடையதல்ல. தன்க்கு என்று தனி கொள்கை இல்லாமல் எதற்கெடுத்தாலும் சோனியாஜி மீது பழியைப்போடுகிறார்.
By M.Natrayan
11/13/2010 8:50:00 PM
Who put Vaiko behind the bars under Pota? Was it not his present Guru Jaya Amma? He was rescued by Karuna. Yet again he double crossed Karuna and joined Amma. For what? If not for money what would have been the reason? Those who support Vaiko and his henchmen blindly must think and stop supporting Vaiko. Also please do not talk about LTTE. You all know the atrocities they committed in Jaffna and elsewhere in Sri Lanka. I know. I have been there when LTTE ruled the roost. - Naanum Thamilanthaan
By Naanum Thailanthaan
11/13/2010 8:35:00 PM
Aama Vaiko periya porlathara methai. Ivarai Finance Minister aaha appoint panniyirupparaam Vajpaye. Defence Minister portfolio vera tharath thayaraaka irunthaaram. Pathil solla aal illaina entha thirudanum ellam solluvan. Also Tamil maathiri Vaikovum Also Tamilthaan. Defence Ministry mattum thanthirunthal inneram India kaanamal poiirukkum. Oru thurohiyai oolatra nallavan enru ennamai vaai koosamal solkireenkappa Naanum Thamilanthan.
By Naanum Thamilanthan
11/13/2010 8:30:00 PM
Mr.Thangabalu is a political merchant. Replying to his comments is an utter waste. For the sake of power, money and post, he will go beyond any limit. The blood running in his life is a Ettappan's blood. Nothing more to comment.
By Patriotic Thamizhan
11/13/2010 8:23:00 PM
MR VAIKO WASTED HIS ENTIRE POLITICAL LIFE SUPPORTING LTTE. IT IS THE ONLY RESON HE IS NOT ACCEPTED BY TAMIL MAJORITY. HE IS STEADFAST IN HIS SUPPORT OF LTTE. KEEPING LTTE IN HIS HOME FOR TREATMENT CAN NOT BE CONSIDERED HUMANITARIAN. EVEN IT RAISES DOUBTS ABOUT LOYALTY TO ONE'S OWN COUNTRY ETC. BUT, MR VAIKO HAS GOOD LEADERSHIP QUALITIES.
By ROBERT SAMUEL
11/13/2010 7:14:00 PM
எந்த செயலையும் பணத்தைப் பெற்றுக்கொண்டு செய்து பழக்கப்பட்டுவிட்ட கருணா, ஜெயாவின் கூலிப் பட்டாளங்கள், இந்தியாவில் கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டி, ஈழத்தமிழர்களுக்கான ஆதரவை கடந்த 20 ஆண்டுகளில் எத்தனையோ சோதனைகளுக்கு மத்தியிலும் தங்கள் இடைவிடா இன உணர்வு செயல்பாடுகளால் பலமடங்கு பெருக்கிக் காட்டிய வைகோவையும் நெடுமாறனையும் தங்களைப் போன்ற மட்டரகமான கூலிப்படையாக எண்ணுவதில் விந்தையேதும் இல்லை! இளைய தலைமுறையினரின் மத்தியில் இன்று இன உணர்வு தழைத்திடக் காரணம் பிரபாகரனின் நேர்மையான செயல்பாடுகளும் அச்செயல்பாடுகளை திட்டமிட்டு இளைஞர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்திடும் நெடுமாறனும், வைகோவும் தான் என்பதை கருணா, ஜெயா, சோனியா போன்றோர் நன்கறிவர்.
By பொன்மலை ராஜா
11/13/2010 7:07:00 PM
ம.தி.மு.க.தலைவர்களில் ஒருவரான மாசிலாமணி அய்யா அவர்களே, காஞ்சி மாநாட்டில் ஒரு அற்புதமான தீர்மானம் போட்டீர்களே! அதனை நடைமுறைப்படுத்த எடுத்த நடவடிக்கைகளைப் பற்றி தயவு செய்து அறிக்கை வெளியிடுங்கள்! அதனை விடுத்து பத்திரிகை கோட்டா முறைகேட்டில் அரசியலை ஆரம்பித்துவிட்டு அவர்கள் கட்சியில் நேற்று இளைஞர் அணியில் பதவி பெற்றவரைக் கூட வழி நடத்தத் தெரியாத தப்பிலிக்காக நேரத்தை வீணாக்காதீர்கள். "இந்திய ஐக்கிய நாடுகள்" உதயமாகுமா! இது குறித்து தமிழ்நாட்டில் உள்ள எந்தெந்த இயக்கங்களை கலந்து ஆலோசித்தீர்கள்? இந்தியாவில் உள்ள எந்தெந்த இயக்கங்களை கலந்து ஆலோசித்தீர்கள்? மொழி அறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் நிபுணர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரை வைத்து குழு ஏதேனும் அமைத்துள்ளீர்களா! அற்புதமான தீர்மானம் நிறைவேற்றியுள்ள ம.தி.மு.க. அதனை நடைமுறைப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் இந்தியாவிலுள்ள அனைத்து மக்களுக்கும் மாபெரும் இழப்பு ஏற்படும்! இருநூறு வருடம் பின் தங்கிவிடுவோம்!
By பொன்மலை ராஜா
11/13/2010 6:55:00 PM
வைகோ ஒரு மிக சிறந்த, ஊழலற்ற, நேர்மையான அரசியல்வாதி. எனது மனத்திற்க்குபிடித்த நம்பிக்கையான அரசியல் தலைவர். தமிழகத்தை நம்பி அவர் கையில் ஆட்சி தரலாம். By Also Tamil
By Ka.Radha-Salalah
11/13/2010 6:47:00 PM
தங்க பாலு காங்கிரஸின் " செம காமெடி பீஸ்" . வழ வழ கொழ கொழ கோமாளி. உங்கள் அறிக்கைக்குப் பிறகு இந்தக் கோமாளி நாற வாயைத் திறக்க மாட்டான்
By thamizhan
11/13/2010 6:20:00 PM
நல்லா உரைக்கிர மாதிரி சொல்லுஙக இந்த தொன்கபாலுவுக்கு.
By ganesh
11/13/2010 6:08:00 PM
" வைகோ விரும்பியிருந்தால் வாஜ்பாய் அரசில் நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் என்று பெரிய பதவியையே வகித்திருப்பார்" அப்பிடியெனில் வாஜ்பாய் காலத்தில் ஈழப்பிரச்சினை இல்லாது இருந்த்தா?? ஒரு வாய்ப்பு வலிய வந்த போது தட்டிக் கழித்தது யார் தவறு. அதுவல்ல. புலிகள் யார் சொல்லியிருந்தாலும் கேடடிருக்க மாட்டார்கள். மேலும் புத்திமதி கூறியவறையும் கொலை செய்திருப்பார்கள். அந்த விழயமும் வைகோவுக்கு தெரியும். மற்றபடி, புலி பிரச்சினையை தவிர்த்து பார்த்தால் வைகோ ஒரு மிக சிறந்த, ஊழலற்ற, நேர்மையான அரசியல்வாதி. எனது மனத்திற்க்குபிடித்த நம்பிக்கையான அரசியல் தலைவர். தமிழகத்தை நம்பி அவர் கையில் ஆட்சி தரலாம்.
By Also Tamil
11/13/2010 5:30:00 PM
Thangabalu is a dummy slave. No need to worry too much about him. VaiKo is the real Tamil Leader. He is not like some one who uses 'Tamil' and betrays them to stay in power.
By Karthik
11/13/2010 5:30:00 PM
ஜனநாயக மீட்புக்காக மிசாவில் இலங்கைத் தமிழர் நலனுக்காக கருத்துரிமை காத்திட தடா, பொடா என்றும், தமிழகத்தின் வாழ்வு ஆதாரங்களை காக்கும் போராட்டங்கள் பலவற்றிலும் மக்கள் நலனுக்காக பலமுறை கைது செய்யப்பட்டு நீண்ட நாள் சிறைவாசம் செய்தவர் வைகோ. அது மட்டுமல்ல, சிங்கள் வெறியர்களால் தாக்கப்பட்டு கை, கால்கள் ஊனமாகி வந்த தமிழர்களுக்கு மருத்துவ சிகிச்சையளித்த மனிதநேய செயலுக்காக வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் தடாவில் இருந்ததும் நாட்டு மக்கள் அறிவார்கள். Very Good Mr.VAIKO & Mr.Ravi
By k.seenivasan
11/13/2010 2:06:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக