செவ்வாய், 16 நவம்பர், 2010

வரதராசப் பெருமாளுக்கு இலங்கை அரசு வீடு ஒதுக்கீடு

வரதராஜப் பெருமாளுக்கு இலங்கை அரசு வீடு ஒதுக்கீடு


கொழும்பு, நவ.16- இலங்கை வடகிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜப் பெருமாளுக்கு கொழும்பு நகரில் வீடு ஒன்றை அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கொழும்பில் அரசு உயர் அதிகாரிகள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வரதராஜப் பெருமாளுக்கு ஆடம்பர வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு வசிக்கும் தமிழர்களிடையே இலங்கை அரசுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்து வருவதாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

காட்டிக் கொடுப்பதற்காகவும் இனப்பகையுடன் கூட்டணி கொள்வதற்காகவும் பெறும் பரிசுகளும் சலுகைகளும் வரலாற்றில் கறைகளாகப் படியும். இந்தியத்தின் ஏவலால் தாய்மண்ணிற்கு இரண்டகம் - வஞ்சகம் - துரோகம் -புரிந்தும் மன அமைதியின்றி வாழ்பவருக்கு இரங்கல். வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/16/2010 4:33:00 PM
It is good.He deserves to get an apartment from the government because he organizing the tamils from the optimistic way.
By Fernandoz
11/16/2010 4:25:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக