ஞாயிறு, 14 நவம்பர், 2010

அமைச்சர் ஆ.இராசா பதவி

அமைச்சர் ராசா பதவி விலக வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்


ஈரோடு, நவ. 12: இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழலில் தொடர்புடையவராகக் கருதப்படும் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார். "தினமணி' நிருபரிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:÷அமைச்சர் ஆ.ராசா பதவி விலக வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுத்தால், மத்திய அரசுக்கான ஆதரவை திமுக விலக்கிக் கொண்டாலும், அதிமுக ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்று ஜெயலலிதா சொல்லியிருப்பது அவருடைய கருத்து.÷ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும், காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை சுதந்திரம் பெற்று ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சில குற்றச்சாட்டுகள் மத்திய அரசு மீது வரும்போது, உண்மை இல்லை என்றாலும் கூட சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தார்மிகப் பொறுப்பேற்று பதவி விலகியுள்ளனர்.  அரியலூரில் ரயில் விபத்து நடைபெற்றபோது, சம்பந்தமே இல்லாத அப்போதைய அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி பதவி விலகினார்.   ÷இதேபோன்று பல நிகழ்வுகளைச் சொல்லமுடியுóம். தற்போது கூட, குற்றம் உண்மையா, பொய்யா என விசாரணை தொடங்கி முடியும் முன்பே, சவாண், கல்மாடி, சசிதரூர் ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.÷திமுகவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ.ராசா உடனடியாகப் பதவி விவகுவதுதான் சரியானதாக இருக்கும். கூட்டணியில் இருக்கிறோம் என்று சொல்பவர்கள் காங்கிரûஸ  பார்த்தாவது பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.  தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி எப்படி இருக்க வேண்டுóம் என்று கட்சி மேலிடத்திற்குத் தெரிவித்துவிட்டோம். மேலிடம் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்றார் இளங்கோவன்.
கருத்துகள்

ஊடகங்களால் குற்றமற்றவர்கள் குற்றவாளிகள் ஆக்கப்படுவதும் குற்றவாளிகள் நல்லவர்களாக ஆக்கப்படுவதும் எப்பொழுதும் உள்ளது. அமைச்சர் இராசாவின் அறிக்கையைப் படிக்கும் பொழுது அப்படி ஒரு பலிகடாவுக்கு அவர் ஆளாக்கப்படுகிறாரோ என்றே ஐயம் எழுகிறது. ஆனால் கோவன் சொல்வது எதுவும் உண்மையில்லை என்பதில் ஐயமில்லை. இலால்பகதூர் போன்ற சிலரின் தனிப்பட்ட பண்பாட்டைக் காங்.கின் பண்பாடாகக் கருத இயலாது. நாட்டின் முதல் குடியரசுத் தலைவரான இராசேந்திர பிரசாத் முதற் கொண்டு பல குடியரசுத் தலைவர்களை முறையாக அனுப்பி வைக்காமல் கொல்லைப்புறமாகத் துரத்திய பண்பிற்குரியவர்கள். பெரிய தலைகளைக் காப்பாற்றுவதற்காகச் சிறிய தலைகளைப் பலிகடா ஆக்கியுள்ள நேர்வுகளின் அடிப்படையில் குருதிக்கறை படிந்த அதனை உத்தமமாகக் கருதுவது அறியாமையிலும் அறியாமை. ஊழல் அரசியல். குடும்ப அரசியல், தேசிய இனங்களை ஒடுக்குதல் முதலான பலகேடுகளுக்கு உறைவிடமான காங்.ஐச் சேர்ந்த கோவன் கூறுவதால் கண்டிப்பாக அமைச்சர் ஆ.இராசா பதவி விலகக் கூடாது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2010 3:37:00 AM
அரசு அரசு நிறுவனங்களில் மாத்தூர் குறிப்பிட்டது போல் தான் மேலதிகாரிகள் தான் தோன்றி தனமாக நடந்து கொள்வதாக குறிப்பிடப்படுகிறது. ஒரு அதிகாரி ஒரு செயலை நியாயமாகவே எதிர்த்தால் அந்த அதிகாரியிடம் எந்த கோட்பையும் அணுப்பாமலே நடவடிக்கை இருக்குமாம்! அதாவது அவரை ”டம்மி”ஆக வைத்திருப்பதாகவும் அதனால் மேல்மட்டம் இஷ்டம் போல் புகுந்து விளையாடி விடுவதாகவும் கூறப்படுகிறது!! டெலிபோன் ஊழல் அதை மெய்பிக்கிறது!!!
By Unmai
11/13/2010 10:59:00 PM
Kalmadi, Chavan and Tharoor were asked to go. They did not leave on their own. Why is Elangovan trying to fool the public? L.B. Sastry had high integrity. He was an exception in the party. Was there any single politician in any party after the 50s and 60s who can touch his heart and declare, "I am clean"? The PM is responsible for the deeds and misdeeds of his cabinet colleagues (which ever party they belong to). PM by keeping mum is shielding Raja and condoning his sins. How can we say that Manmohan is clean? Corruption need not be concerned with money only. What about moral corruption exhibited by the PM?
By N. Sridharan
11/13/2010 9:13:00 PM
LATEST REPORT SAYS THAT MATHUR HIMSELF HAS SIGNED IN THAT PAPER!WHICH IS TRUE?
By SAVITHIRI AMMA,SRIRANGAM
11/13/2010 9:08:00 PM
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பிளவை ஏற்படுத்திக் காங்கிரஸ் ஆதரவுடன் தமிழகத்திலும் ஆட்சியைப் பிடிக்கலாம், மத்தியிலும் தமக்கு சாதகமான கூட்டணியை ஆட்சிப்பொறுப்பில் அமர்த்தி ஆனந்தமடையலாம் என்ற ஆவலுடன் களமிறங்கிய கட்சிகளும், அதன் ஆதரவான பத்திரிக்கைகளும் தங்களது முயற்சி வீண்போய்விட்டதை எண்ணி சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். எதிர்தாக்கத்தால் பழுத்டைந்த அனைவருக்கும் எந்து ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
By Indian
11/13/2010 8:30:00 PM
IT IS OUR MISFORTUNE THAT WE HAVE ALL CORRUPT FELLOWS AS LEADERS IN POWER. GROWTH IN ECONOMY MEANS MORE MONEY FOR LOOTERS. THOUGH TAMILNADU IS FULL OF GOOD PEOPLE , UNFORTUNATELY OUR LEADERS ARE THE WORST. BUT WE HAVE TO PUT UP WITH THEM AS THERE IS NO ALTERNATIVE SEEN. ALSO WE ARE DIVIDED ON CAST AND RELIGIOUS LINES AND THERE IS NO UNITY AMONGST US. OTHERWISE, HOW WE WOULD HAVE ALLOWED PERSONS LIKE SONIA, TOTALLY A FOREIGNER, BEREFT OF ANY PATRIOTISM, TO DECIDE OUR FATE? THIS THONGU BALU. IS HER JALRA. I RECALL CHURCHILL'S WORDS IN BRITISH PARLIAMENT, AT THE TIME OF INDIAN INDEPENDENCE. HE SAID' "IN A COUNTRY OF ILLITERATES ,MEN OF STRAW WILL COME TO POWER AND LOOT. PEOPLE WILL HAVE TO PAY FOR EVEN WATER AND AIR" HOW TRUE!!
By ROBERT SAMUEL
11/13/2010 7:25:00 PM
Mr.Abhi & Mr.Santhanaraman.,Everybody knows about the scam.,what to do? In india 63 years Congress,Janatha Party,Janathadal,BJP ruled.,so many guys involved in scam and so many commission headed by retired judges.,what happened to all that.,you know each of these commission expenditure., that varies from 1.5cr to 5 cr. Pray to GOD to punish these goons. India is a Economic Terrorist country,Among all Manmohansingh is top as Economic Terrorist.,ஈசன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
By ஈசன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
11/13/2010 7:03:00 PM
dear friends, PLEASE GO THRO THE VARIOUS SCAM BY JAYA AND SASI. THIS WILL HELP YOU FOR YOUR FUTURE.
By SANTHANA RAMAN,SURILIPATTY
11/13/2010 6:37:00 PM
DEAR FRIENDS, MINISTER RAJA IS REPEAT IS INVOLVED IN THE SCAM. PLS GO THRU THE INTERVIEW OF MR. D.S. MATHUR, EX TELECOM SECRETARY IN THIS CONNECTION. AFTER GOING THRU THIS INTERVIEW, EVERYBODY WILL COME TO KNOW WHAT IS WHAT.
By abhi
11/13/2010 5:15:00 PM
இந்த மெண்டலை காங்கிரஸிலிருந்து விரட்டப்போவது உறுதி. மேலும் இவன் விஜயகாந்த் பக்கம் போவதும் உறுதி. ஒரு குடிகாரனும், இந்த மெண்டலும் சேர்ந்தால் தேமுதிக ஒரு இலை விடுவதற்கு முன்பே கருகி அம்போதான். ஆனால் தமிழ்நாட்டுக்கு நல்லதுதான்.
By வச்சா குடுமி
11/13/2010 5:12:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக