செவ்வாய், 11 மே, 2010

தமி​ழ​கத்​தில் சிகிச்சை பெற பிர​பா​க​ரன் தாயா​ருக்கு அனு​மதி

சென்னை, ​​ மே 10: தமி​ழ​கத்​தில் சிகிச்சை பெற பிர​பா​க​ர​னின் தாயார் பார்​வ​தி​யம்​மா​ளுக்கு மத்​திய அரசு அனு​மதி அளித்​தி​ருப்​ப​தாக முதல்​வர் கரு​ணா​நிதி தெரி​வித்​தார்.​​ ​ சட்​டப் பேர​வை​யில் திங்​கள்​கி​ழமை கேள்வி நேரம் முடிந்​த​தும் ​ விதி 110-ன் கீழ் அவர் படித்த அறிக்கை:​​ ​ "கடந்த ஏப்​ரல் 16-ம் தேதி மலே​சி​யா​வில் இருந்து சிகிச்​சைக்​காக சென்னை வந்த பிர​பா​க​ர​னின் தாயார் பார்​வ​தி​யம்​மாள்,​​ சென்னை விமான நிலை​யத்​தில் குடி​யு​ரிமை அதி​கா​ரி​க​ளால் திருப்பி அனுப்​பப்​பட்​ட​தாக ஏப்​ரல் 17-ம் தேதி ஊட​கங்​க​ளில் செய்தி வெளி​யா​னது.​​ ​ இது பற்றி ஏப்​ரல் 19-ம் தேதி சட்​டப் பேர​வை​யில் விவா​திக்​கப்​பட்​டது.​ ​ தமி​ழ​கம் வரு​வது குறித்து பார்​வ​தி​யம்​மா​ளி​ட​மி​ருந்தோ,​​ அவ​ருக்கு துணை​பு​ரிய விரும்​பு​வ​பர்​க​ளி​ட​மி​ருந்தோ தமி​ழக அர​சுக்கு கடி​தமோ,​​ தக​வலோ வர​வில்லை.​ இந்​தப் பய​ணம் குறித்து மத்​திய அர​சுக்​கும்,​​ அவ​ருக்​கும் இடை​யே​தான் செய்​தித் தொடர்பு ​உள்​ளது.​​ ​ தமி​ழக அர​சுக்கு இதில் எந்​த​வி​த​மான தொடர்​பும் கிடை​யாது.​ பார்​வ​தி​யம்​மாள் தமி​ழ​கத்​தில் சிகிச்சை பெற விரும்​பி​னால் அதனை பரி​சீ​லனை செய்து மத்​திய அர​சுக்கு எழுத மாநில அரசு தயா​ராக உள்​ளது என்று சட்​டப் பேர​வை​யில் நான் தெரி​வித்​தேன்.​​ ​ சிகிச்​சைக்​காக கோலா​லம்​பூ​ரில் இருந்து திருச்​சிக்கு விமா​னத்​தில் வர,​​ மலே​சி​யா​வில் ​உள்ள இந்​தி​யத் தூத​ர​கம் மூலம் ஏற்​பாடு செய்​யு​மாறு பார்​வ​தி​யம்​மாள் தமி​ழக அர​சுக்கு அனுப்​பிய கடி​தம் ஏப்​ரல் 30-ம் தேதி மின்​னஞ்​சல் மூலம் பெறப்​பட்​டது.​​ ​ அதன்​படி,​​ சிகிச்​சைக்​காக பார்​வ​தி​யம்​மாள் தமி​ழ​கம் வந்து செல்ல சில நிபந்​த​னை​க​ளுக்கு உட்​பட்டு மத்​திய அரசு அனு​ம​திக்​க​லாம் என்று மத்​திய உள்​து​றைச் செய​லா​ள​ருக்கு ​மே 1-ம் தேதி தமி​ழக அரசு கடி​தம் அனுப்​பி​யது.​​ ​ இந்த விவ​ரங்​களை துணை முதல்​வர் மு.க.​ ஸ்டா​லின் மே 3-ம் தேதி பேர​வை​யில் அறி​வித்​தார்.​ மே 3,​ 4 தேதி​க​ளில் தில்​லி​யில் பிர​த​மர் மன்​மோ​கன் சிங்,​​ ​ காங்​கி​ரஸ் தலை​வர் சோனியா காந்தி,​​ மத்​திய உள்​துறை அமைச்​சர் ப.​ சிதம்​ப​ரம் ஆகி​யோ​ரி​டம் இது குறித்து தெரி​வித்து அவர்​க​ளின் உத​வியை நாடி​னேன்.​ தின​மும் மத்​திய அரசு அதி​கா​ரி​க​ளு​டன் தொடர்பு கொண்டு நல்ல பதில் கிடைப்​ப​தற்​கான முயற்​சி​யில் ஈடு​பட்​டோம்.​​ அத​னைத் தொடர்ந்து சில நிபந்​த​னை​க​ளு​டன் சிகிச்​சைக்​காக தமி​ழ​கத்​துக்கு வர அனு​ம​திக்​க​லாம் என்று மலே​சி​யா​வில் உள்ள இந்​தி​யத் தூத​ர​கத்​துக்கு மத்​திய அரசு ​மே 7-ம் தேதி கடி​தம் எழு​தி​யுள்​ளது.​ அதன் நகல் தமி​ழக அர​சுக்​கும் வந்​துள்​ளது.​ ​ சிகிச்​சைக்​காக மட்​டுமே அவர் தமி​ழ​கம் வர வேண்​டும்.​ ​ மருத்​து​வ​ம​னை​யைத் தவிர வேறெங்​கும் தங்​கக் கூடாது.​ அரசு மருத்​து​வ​ம​னை​யில் ​ சிகிச்சை பெற விரும்​பி​னால் அதற்​கான உத​வி​களை தமி​ழக அரசு செய்ய வேண்​டும்.​ ​அர ​சி​யல் கட்​சி​யி​னர்,​​ குறிப்​பாக தடை செய்​யப்​பட்ட இயக்​கங்​க​ளோடு நண்​பர்​க​ளாக இருப்​ப​வர்​க​ளு​டன் எந்​தத் தொடர்​பும் வைத்​துக் கொள்​ளக்​கூ​டாது.​ பெயர் குறிப்​பி​டப்​பட்ட அவ​ரு​டைய உற​வி​னர்​க​ளோடு மட்​டுமே தொடர்பு வைத்​துக் கொள்​ள​லாம் என்று மத்​திய அர​சின் கடி​தத்​தில் எழு​தப்​பட்​டுள்​ளது.​​ மலே​சி​யா​வில் உள்ள இந்​தி​யத் தூத​ர​கம் பார்​வ​தி​யம்​மா​ளைத் தொடர்பு கொண்டு 6 மாத காலத்​துக்கு விசா வழங்​க​லாம் என்​றும்,​​ சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள வழக்​குக்கு எந்​த​வி​த​மான குந்​த​க​மும் இல்​லா​மல் மத்​திய அர​சி​னால் இந்த ஆணை ​பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.​சாதா​ர​ண​மாக இது​போன்ற நிகழ்​வு​க​ளில் முடிவு எடுப்​ப​தற்கு சில காலம் பிடிக்​கும் ​என் ​றா​லும்,​​ அந்த அம்​மை​யா​ரின் உடல்​நிலை கருதி மத்​திய,​​ மாநில அர​சு​கள் மேற்​கொண்ட முயற்​சி​க​ளின் கார​ண​மாக இந்த நட​வ​டிக்​கை​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.​​ ​ இதற்​கு​மேல் மலே​சி​யா​வில் உள்ள அந்த அம்​மை​யா​ரின் முடி​வுக்கு இணங்க தொடர் ​நட​வ​டிக்​கை​கள் மேற்​கொள்​ளப்​ப​டும்' என்​றார் முதல்​வர் கரு​ணா​நிதி.​ ​முசி​றி​யில் சிகிச்சை?​​​ விடு​த​லைப் புலி​கள் இயக்​கத்​தின் தலை​வர் பிர​பா​க​ர​னின் தாய் பார்​வதி அம்​மா​ளுக்கு திருச்சி மாவட்​டம்,​​ முசி​றி​யில் உள்ள அவ​ரது உற​வி​னர் மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்சை அளிக்​கப்​ப​டும் எனத் தெரி​கி​றது.
கருத்துக்கள்

மிகப் பெரிய சாதனை! வீரத்தாயைப் பாதுகாப்புக் கைதியாக அடைத்து வைப்பதற்கு விரைவில் மத்திய அரசின் ஆணையைப் பெற்றது மிகப் பெரிய சாதனை! மருத்துவ உதவி பெற அழைப்பும் விடுத்து, வந்தால் தடுப்புக் காவல் கைதியாக்க ஏற்பாடும் செய்து இரட்டைவேடமிட்டு வெற்றி பெற்ற மிகப் பெரும் சாதனை! மந்திரிப் பதவிகளுக்காக அல்லாமல் (சத்தியாமாக நம்புங்கள்) மத்திய அமைச்சர்களைச் சநதித்தும் நாள்தோறும் தொடர்பு கொண்டும் விரைவில் சிறைவைப்பு ஆணையைப் பெற்றது மிகப் பெரும் சாதனை! உடனே பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யுங்கள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/11/2010 3:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக