சனி, 16 மார்ச், 2013

முதல்வர் புலிக்குட்டிகளுக்கு த் தமிழ்ப் பெயர் சூட்டாமை


முதல்வர் புலிக்குட்டிகளுக்கு த் தமிழ்ப் பெயர் சூட்டாமை



கருத்துகள்(7)

தமிழ்நாட்டின் முதல்வராக இருப்பதாலும் தமிழ் மக்களின் கட்சித் தலைவராக இருப்பதாலும் தமிழ்ப் பெயர்களை சூட்டுவதே தமக்கு அழகு என்பதை முதல்வர் உணர வேண்டும். அணுக்கத்தில் இருப்போர் அதை உணர்த்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
நன்றி, திரு.இலக்குவனார் திருவள்ளுவன் நான் மனம் நொந்து போனேன்-புலிக்குட்டிகளின் பேர்களை பார்த்ததும்! ஜெநிவாவிலே (Geneva)ஈழதமிழர்கள் "அம்மா உங்களால் முடியும்" ( Ammaa You Can) என்று எழுதப்பட்டஅட்டைகளை தூக்கி சென்றார்களாம். பாவம்,.ஈழ உணர்வு இருந்தால், ஒரு புலி குட்டிக்காவது பாலச்சந்திரன் என்று பெயரிட்டிருக்கலாம் ! மேலும் நீங்கள் "அணுக்கத்தில் இருப்போர் அதை உணர்த்த வேண்டும்." என்று சொல்லியுள்ளீர்கள்.. எல்லாமே தெரிந்தா கலைஞர் தமிழை கை கழுவி விட்டார்.முதல்வர் செல்வி. ஜெயலலிதாவா தம்ழை வளர்க்க போகிறார்? எனினும் தங்களை பாராட்டும் வகையிலும் தங்களுக்கு ஊக்கம் தரும் வகையிலும் நானும் தங்களின் முழக்கங்களை பதிவு செய்கிறேன்சிறு மாறுதலுடன்: "தமிழே வாழ்க! தமிழே வளர்க! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/: " வெல்க தமிழினம் . வளர்க அவரின விழிப்புணர்வும் எழுச்சியும்!
நன்றி உங்களுக்கும் தமிழில் பெயர் சூட்ட  வலியுறுத்தும்   பிறருக்கும்.  தமிழே விழி! தமிழா விழி! என்பதில் முதலில் தமிழை நம் கண்விழியாக நினைவுபடுத்தி இரண்டாவது , கண்விழியைக் காப்பாற்றுவதில் தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரிப்பதாக அமைந்துள்ளது.
 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


தமிழக முதல்வர் தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமா? பெயர் அடுத்த மொழியில் இருப்பதனால் ஒன்றும் "தமிழ் பற்று" குறைந்துவிடாது. பெயரில் என்ன இருக்கிறது?...
திரு."கௌஷிக் சாஸ்த்ரி: "தமிழக முதல்வர் தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமா?"- தேவையில்லை. ஆயினும் மொழி தாழ்வுற்று வரும் சூழ்நிலைகளில் ஒரு சிறு செயலும் நம்பிக்கையை ஊட்டும். . இன உணர்வை , பற்றை வளர்க்கும். "பெயர் அடுத்த மொழியில் இருப்பதனால் ஒன்றும் "தமிழ் பற்று" குறைந்துவிடாது." -பொது வாழ்வில் முன்நிற்பவர்கள் அனைவராலும் கவனிக்கபடுகிறார்கள். தமிழில் பெயர் வைத்து முன்னுதாரணமாக இருக்கலாமே.? " பெயரில் என்ன இருக்கிறது ?"- அது இனபற்றை, மொழி பற்றை வெளிக்காட்டும் ஒருவழி.. தமிழ் நாட்டு முதல்வர் தமிழ் நாட்டில் உள்ள மிருக காட்சி சாலையில் சிறு புலி குட்டிகளுக்கும் கூட நல்ல தமிழ் பெயர்களை சூட்டீருந்தால் அவர் தற்போது அமர்ந்துள்ள தமிழ் நாடு முதல்வர் என்ற பதவிக்கு மிகவும் மதிப்புகூடியிருக்கும் . .
அனைத்து மொழிகளையும் அரவணைத்து செல்வதே தமிழ் மக்களின் அழகு. "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன பிள்ளை தானே வளரும்" என்ற பழமொழியை தன் செயல்பாடு மூலம் உறுதி செய்து வரும் முதல்வர் ஒரு மஹா நிர்வாகி. இராசாராமன் வெ இராமன் ஹைதராபாத்
"அனைத்து மொழிகளையும் அரவணைத்து செல்வதே தமிழ் மக்களின் அழகு."- இருக்கட்டும். ஆனால் பிற மொழிகளின் ஆதிக்கத்தால் நம் தொன்மை மொழி அடிமைபட்டுவிட கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து இறுதியில் வழக்கொழிந்து விட கூடாது! தமிழ் நாட்டில் தனித்தமிழ்இயக்கம் தோன்றி இருக்காவிடில்- திருமண அழைப்பு கூட "விவாக சுப முகூர்த்த பத்திர்க்கை -யாகத்தான் இருந்திருக்கும். சிரஞ்சீவி, சவுபாகியவாதி, கண்சிஹ்ட குமாரன் கனிஷ்ட குமாரத்தியே புழகத்திலிருந்தது வந்திருக்கும்,.
பாலச்சந்திரன் என்பதும் சமஸ்க்ரித சொல்லே. மொழியில் ஒன்றும் இல்லை. தமிழன் தன்னுடைய கடின உழைப்பிலும் , மனித நேயத்திற்கும், கடவுள் பக்திக்கும், தேசப்பற்றிர்க்கும், வீரத்திற்கும் யாருக்கும் சளைத்தவன் அல்ல.
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக