புதன், 13 மார்ச், 2013

இ.ஆ.ப., புதிய தேர்வு முறை : கலைஞர் மடலில் தவறுகள்



இச்செய்தியில் தகவல்கள் தவறான முறையில்  புரிந்து கொண்டு தெரிவிக்கப்பட்டுள்ளன. (அறிக்கை தவறா?  செய்தியாக எழுதியதில் தவறா?)
1. <பிராந்திய மொழி இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே, அந்த மொழியில் தேர்வு எழுதலாம் > அப்படி அல்ல. எந்த மொழியில் பட்டம் பெற்று உள்ளார்களோ அந்த மொழியில்தான் எழுத வேண்டும். இல்லாவிடில் இந்தி அலலது ஆங்கிலத்தில் எழுதலாம்.
2.<தேர்ச்சி பெற்ற, 25 மாணவர்கள் மட்டுமே அந்த பிராந்திய மொழிகளில் விடை எழுத முடியும்> முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் குறைந்தது 25  பேர்கள் குறிப்பிட்ட மொழியில் விருப்பம் தெரிவித்து இருந்தால்தான் அந்த மொழியில் தேர்வு நடத்தப்படும். இல்லாவிடில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டும்.
3.< தமிழ் இலக்கியத்தை விருப்ப பாடமாக தேர்ந்தெடுத்து இருந்தாலும், தமிழ் இலக்கிய பட்டதாரிகள் மட்டுமே, தமிழ் வழியில் தேர்வு எழுத முடியும்>  தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே தமிழ் இலக்கியத்தாள் தேர்வை எழுத முடியும். என்றாலும் அவர்கள்  பிற பாடங்களை இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் எழுத முடியும். அதுபோல் தமிழ்ப்பட்டதாரிகள் அல்லாதவர்கள் தமிழ் இலக்கியத்தாள் எழுத முடியாது.
இவ்வாறு மறைமுகமாக அனைவரையும் இநதியில் எழுத வற்புறுத்துகிறது.  வெற்றி என்னும்  வாசகர் கருத்து தெரிவித்துள்ளது போன்று மத்திய அரசில் பங்கு வகிக்கும் தி.மு.க. மடல் எழுதி நாடகமாடாமல், உடனே உரிய நடவடிக்கை எடுத்து  இப்புதிய விதிமுறைகளை  நீக்கி  அரசமைப்பு மொழிப்பட்டியலில் உள்ள மொழிகளுள் ஒன்றில் யார் வேண்டுமானாலும் எழுதவும்  வினாத்தாள்களை இந்தியிலும் ஆங்கிலத்திலு்ம் மட்டும் தரும் இப்போதைய முறையை நீக்கி அனைத்து மொழிகளிலும்அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்துடன் தமிழில் மழலைக்கல்வி முதல் உயர்கல்வி வரை அளிப்பதற்குத் தமிழ்ப்பயிற்சி மொழியைக் கட்டாயமாக்க வேண்டும். தி.மு.க.வினர் நடத்தும் கல்வி நிலையங்கள் அனைத்தும் தமிழ் வழியி்ல்தான் நடக்கும் எனக் கலைஞர் அறிவித்து உரிய நடவடிக்கை எடுப்பின் பிறரும் பின்பற்றுவர். அரசை வலியுறுத்துவதும் எளிதாகும். அரசும் உடனே தமிழ்வழிக்கல்வியை எல்லா நிலைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறாயின், தமிழில் பட்டம் பெறுபவர்கள் தமிழில் எழுத் தடை விதிக்க முடியாது அல்லவா? இளைஞர்கள் தங்கள் எதிர்காலம் பாதிக்கப்படுவதை உணர்நது விழிப்படைந்து போர்க்குரல் எழுப்பித் தமிழுக்கு வாழ்வளிக்கச் செய்து தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இ.ஆ.ப., புதிய தேர்வு முறையைத் திரும்பப் பெற வேண்டும்: தலைமையருக்குக் கருணாநிதி மடல்




சென்னை:"ஐ.ஏ.எஸ்., புதிய தேர்வு முறையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பிரதமருக்கு, கருணாநிதி எழுதிய கடித விவரம்:மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில், சில மாற்றங்களை அறிவித்துள்ளது. பிராந்திய மொழி இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே, அந்த மொழியில் தேர்வு எழுதலாம் என்ற இந்த மாற்றம், கிராமப்புற மாணவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.இதனால், தேர்ச்சி பெற்ற, 25 மாணவர்கள் மட்டுமே அந்த பிராந்திய மொழிகளில் விடை எழுத முடியும். இதன் மூலம் தேர்வு எழுதுபவர்கள் கட்டுப்படுத்தப் படுகின்றனர். அதே நேரத்தில், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கு, இது போன்ற கட்டுப்பாடுகள் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இலக்கியத்தை விருப்ப பாடமாக தேர்ந்தெடுத்து இருந்தாலும், தமிழ் இலக்கிய பட்டதாரிகள் மட்டுமே, தமிழ் வழியில் தேர்வு எழுத முடியும்.இதுபோன்ற கட்டுப்பாடுகள், சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களுக்கு. ஒரு தடையாக உள்ளது. அவர்கள் இந்தி அல்லது ஆங்கில வழியில் கல்வி பயில வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தேர்வு முறை மாற்றம், இந்தியை மறைமுகமாக திணிப்பது போல உள்ளது. நேருவின் வாக்குறுதியை மீறுவதாக உள்ளது.மேலும் இது, கிராமப்புற மற்றும் நகர்புற மாணவர்களிடையே ஆரோக்கியமற்ற, சமநிலையற்ற சூழலை உருவாக்குவதாக உள்ளது. எனவே, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தேர்வு முறையை, உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட, ஏதாவது ஒரு மொழியில் மத்திய அரசு பணியாளர் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். அகில இந்திய சர்வீசஸ் தேர்வுகளை, அனைத்து பிராந்திய மொழியிலும் நடத்த வேண்டும் என்பது, தி.மு.க., வின் நீண்ட நாள் கோரிக்கை.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 வாசகர் கருத்துகள்
13-மார்-201301:30:55 IST e
vivek அண்ணா நல்லது.முதல்ல பிரதமரை விட்டுக்கு அனுப்பனும்.


Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
13-மார்-201301:29:56 IST 
Sekar Sekaran அடடடடடா..என்னே கடிதம்..பந்த் நடுவே கூட அசராத உழைப்புதான். இவருக்கே அங்கே மதிப்பில்லாதபோது...இவரது கடிதம் செல்லுமிடம் நமக்கே தெரியும்..அது வீழ்ந்த இடம் பற்றி. இதெல்லாம் ஓர் விளம்பரம்..தினமலரை பயன்படுத்தி புகழ் தேட முயற்சிக்கின்றார். ஆனால் தினமலர் வாசகர்களுக்கு இவர் பற்றி எல்லாமே" தெரியுமே..பேப்பர் வேஸ்ட்.இங்க் வேஸ்ட்..நோ யூஸ்..

swaminathan - london,யுனைடெட் கிங்டம்
13-மார்-201301:19:48 IST 
swaminathan கலைஞரின் கோரிக்கை சரியானதே.


Vettri - Coimbatore,இந்தியா
13-மார்-201300:37:54 IST 
Vettri ரொம்ப நாளாக ஒன்று புரியவில்லை தலைவரே. இதற்கு எதுக்கு கடிதம் எழுதணும்.உங்களுடைய கட்சியினர் மற்றும் தங்கள் அன்பு மகன் பங்கு பெற்று இருக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த பிரச்சினைகளை எழுப்பலாமே?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக