செவ்வாய், 20 நவம்பர், 2012

கொலைகாரனை உயிர் இழந்தோர் பிள்ளைகள் கொண்டாட வேண்டுமாம்!

இலங்கை  அதிபரின் பிறந்தநாள் கொண்டாட்டம்: தேர்வுகள் நிறுத்தம்

First Published : 20 November 2012 12:36 PM IST
இலங்கை ஜனாதிபதியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெறுவதால், முல்லைத்தீவு மாவட்டப் பள்ளிகளில் நடக்கவிருந்த மாகாண அளவிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
ஜனாதிபதியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மாணவர்களைப் பங்கு பெறச் செய்வதற்காகவே இவ்வாறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
நேற்று முல்லைத்தீவு மாவட்ட பள்ளிகளில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிகளுக்கு வருகை தந்த அரசு அதிகாரிகள், ஜனாதிபதியின் பிறந்த நாளைக் கொண்டாடுமாறு உத்தரவிட்டனராம்.
இதை அடுத்து, அனைத்து பள்ளிகளிலும் தேர்வுகள் நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக