வெள்ளி, 23 நவம்பர், 2012

கூடங்குளம் அணுக்கழிவுகள் கோலார் தங்கவயலில் சேமிப்பு?: கடும் எதிர்ப்பு

கூடங்குளம் அணுக்கழிவுகள் கோலார் தங்கவயலில் சேமிப்பு?: கருநாடகத்தில் கடும் எதிர்ப்பு

First Published : 22 November 2012 03:18 PM IST
கர்நாடக மாநிலத்தில் உள்ள மூடப்பட்டுள்ள கோலார் தங்க வயலில் கூடங்குளம் அணுவுலைக் கழிவுகளைச் சேமிக்கவுள்ளதாகக் கூறப்பட்டதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலார் பகுதியில் நாளை பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் நரிமன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவர், கோலார் தங்கவயலில் உள்ள தங்கச் சுரங்கங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே மூடப்பட்டு விட்டன. அவற்றில் கூடங்குளம் அணுக் கழிவுகளை சேமித்து வைக்க அரசு முடிவு செய்துள்ளது என்று பதிலளித்தார்.
இந்த பதிலால் அச்சமடைந்த மக்கள், தமிழகத்தில் இருந்து அணுக் கழிவுகளை கர்நாடகம் கொண்டு வர அனுமதிக்கக் கூடாது என்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். மேலும், கோலார் தங்கவயலில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு அங்குள்ள வர்த்தக நிறுவனங்கள், சுரங்கத் தொழிலாளர்கள், அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக