திங்கள், 17 மே, 2010

வேலைக்கு மொழி முக்​கி​ய​மில்லை; இடத்​துக்கு தகுந்​த​படி மொழியை தேர்ந்​தெ​டுங்​கள்: இரா.​ பாவா​ணன்



விழுப் ​பு​ரம்,​​ மே 16: ​ ஒரு குறிப்​பிட்ட மொழியை படித்​தால்​தான் வேலை கிடைக்​கும் என்று கருத்து நில​வு​கி​றது.​ ஒரு​வர் வேலை செய்ய வேண்​டிய இடத்தை முடிவு செய்​த​பி​றகு அதற்கு தகுந்​த​படி மொழியை தேர்ந்​தெ​டுத்​துக் கொள்​ள​லாம் என்று தமி​ழர் எழுச்​சிப் பெரு​நாள் பொதுக்​கூட்​டத்​தில் புதுக்​கோட்டை இரா.​ பாவா​ணன் தெரி​வித்​தார்.​இ ​லங்கை முள்​ளி​வாய்க்​கால் நினைவு தினத்தை தமி​ழர் எழுச்​சிப் பெரு​நாள் விழா​வாக விழுப்​பு​ரத்​தில்,​​ பெரி​யார் சிலை அரு​கில் ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற்​றது.​ முள்​ளி​வாய்க்​கால் மண் வைக்​கப்​பட்​டி​ருந்த கண்​ணாடி பேழைக்கு அஞ்சலி செலுத்​தி​னார் பாவா​ணன்.​பின் ​னர் அவர் பேசி​யது:​ இந்தி படித்​தால் வேலை​கி​டைக்​கும் என்​றால்,​​ ரூ.​ 100 கூலிக்கு பிகாரி​லி​ருந்து நூற்​றுக்​க​ணக்​கா​ன​வர்​கள் தமி​ழ​கம் வந்து வேலை செய்ய வேண்​டிய அவ​சி​யம் இல்லை.​தற்​போது கொரியா படித்​தால் வேலை,​​ அரபு படித்​தால் வேலை என்று விளம்​ப​ரங்​கள் வரு​கின்​றன.​ யார் எந்த நாட்​டுக்கு போக விரும்​பு​கி​றார்​களோ அவர்​கள் அந்த மொழியை படிக்​கட்​டும்.​நம் முன்​னோர்​கள் யவ​னத்​துக்​கும்,​​ கிரேக்​கத்​துக்​கும் சென்று வெற்​றி​க​ர​மாக வணி​கம் செய்து வந்​தார்​களே அவர்​கள் என்ன அந்த மொழி​யையா படித்​தார்​கள்.​தி ​ரு​வண்​ணா​மலை மாவட்​டத்​தில் சாத்​த​னூர் அணை​யில் திரைப்​ப​டங்​கள் அதி​கம் எடுப்​பார்​கள்.​ இத​னால் அங்கு சுற்​று​லாப் பய​ணி​கள் அதி​கம் வந்​த​னர்.​ அவர்​கள் கொண்டு வந்த உண​வின் மிச்​சங்​களை சாப்​பிட அங்கு நாய்​கள் அதி​கம் குவிந்​தன.​ அவை பல்​கிப் பெரு​கி​விட்​டன.​இ​த​ னால் சுற்​று​லாப் பய​ணி​க​ளுக்கு பெரும் தொல்​லை​யாக இருந்​த​தால்,​​ அவற்றை சுட்​டுக் கொல்ல,​​ மாவட்ட நிர்​வா​கம் முடி​வெ​டுத்து,​​ 40 நாய்​களை சுட்​டுக் கொன்​றது.​அப்​போது பெங்​க​ளூரி​லி​ருந்து வந்​தி​ருந்த பயணி ஒரு​வர் புளு​கி​ராஸ் உறுப்​பி​னர்,​​ அவர் அந்த காட்​சியை படம்​பி​டித்து நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்து விட்​டார்.​ இப்​போது மாவட்ட நிர்​வா​கம் அச்​சத்​தில் உள்​ளது.​நாய்​க​ளுக்​ குக் கூட குரல் கொடுக்க ஒரு​வர் உள்​ளார்,​​ ஒரு அமைப்பு உள்​ளது,​​ ஆனால் லட்​சக்​க​ணக்​கான தமி​ழர்​கள் இலங்​கை​யில் கொல்​லப்​பட்​டதை கேட்க நாதி​யில்​லா​மல் போனதே என்​றார்.​முன்​ன​தாக தமி​ழி​ளை​ஞர் கூட்​ட​மைப்பு பா.​ ஜோதி​ந​ர​சிம்​மன்,​​ குமார் ஆகி​யோ​ரின் குறு​நா​ட​கங்​கள் நடை​பெற்​றன.​ எழில்.​ இளங்கோ வர​வேற்​றார்.
கருத்துக்கள்

சாலியன் வாலாபாக் படுகொலை பற்றி இன்றைக்கும் அழுது கண்டித்துக் கொ்ணடிருக்கும் இந்தியா தன் முழு வல்லாண்மைஒத்துழைப்புடன் எரி குண்டுகள், கொத்துக் குண்டுகள், வேதியல் குண்டுகள், ஏவுகணைகள், படைத்தலைவர்கள், படைக்கலன்கள் அளித்து நாட்டு விடுதலைக்காகப் போரிட்ட மண்ணின் மைந்தர்களையும் நூறாயிரம் அப்பாவிப் பொதுமக்களையும் கொன்றொழித்து இனப்படுகொலை செய்த பெருந்துயர நாள் இன்று. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்! வாழ்விழந்தவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என உறுதி யளிப்போம்! உலகின் முதல் இனம் தன் தாய்நிலத்தில் அழிக்கப்படும் கொடுமைக்கு முடிவுகட்டுவோம்!

துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/17/2010 2:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக