திங்கள், 17 மே, 2010

தில்லி ரயில் நிலை​யத்​தில் கூட்ட நெரிச​லில் சிக்கி 2 பேர் சாவு



புது தில்லி,​​ மே 16: ​ தில்லி ரயில் நிலை​யத்​தில் ஞாயிற்​றுக்​கி​ழமை கூட்ட நெரிச​லில் சிக்கி பெண்​ணும்,​​ சிறு​வ​னும் உயி​ரி​ழந்​த​னர்;​ 8 பேர் காய​ம​டைந்​த​னர்.​க​டைசி நிமி​ஷத்​தில்,​​ 2 ரயில்​கள் புறப்​ப​டும் பிளாட்​பார்ம்​கள் மாற்​றப்​பட்​ட​தால்,​​ ரயி​லைப் பிடிப்​ப​தற்​காக பய​ணி​கள் முண்​டி​ய​டித்​துக் கொண்டு ஓடி​னர்.​ இத​னால் இந்த துய​ரச் சம்​ப​வம் நிகழ்ந்​துள்​ளது.​ப​லி​யான பெண் பகல்​பூ​ரைச் சேர்ந்த சோனி ​(35) என்று கண்​ட​றி​யப்​பட்​டுள்​ளது.​ இறந்​து​போன சிறு​வ​னுக்கு சுமார் 10 வயது இருக்​கும்,​​ அவன் யார் என்​பது அடை​யா​ளம் காணப்​ப​ட​வில்லை.​இந்த சம்​ப​வம் குறித்து விசா​ரணை நடத்தி,​​ இதற்​குக் கார​ண​மா​ன​வர்​கள் மீது கடும் நட​வ​டிக்கை எடுக்​கு​மாறு ரயில்வே உய​ர​தி​கா​ரி​க​ளுக்கு அத்​துறை அமைச்​சர் மம்தா பானர்ஜி உத்​த​ர​விட்​டுள்​ளார்.​எப்​போ​துமே கூட்​டம் அதி​கம் காணப்​ப​டும் தில்லி ரயில் நிலை​யத்​தில்,​​ கோடை விடு​முறை காலம் என்​ப​தால் ஞாயிற்​றுக்​கி​ழமை பய​ணி​கள் கூட்​டம் சற்று அதி​கம் காணப்​பட்​டது.​பிற்​ப​கல் 2.45 மணி​ய​ள​வில்,​​ தில்​லி​யில் இருந்து முஸô​பர்​பூர் செல்​லும் சம்​பூ​ரண கிராந்தி ​(முழுப் புரட்சி)​ எக்ஸ்​பி​ரஸ்,​​ தில்​லி​யில் இருந்து பகல்​பூர் செல்​லும் விக்​ர​ம​சீலா எக்ஸ்​பி​ரஸ் ஆகி​யவை வரும் பிளாட்​பா​ரம்​கள் மாறு​வ​தாக அறி​விப்பு வெளி​யா​னது.​அந்த ரயில்​கள் கிளம்ப சில நிமி​ஷங்​களே இருந்​த​தால்,​​ பய​ணி​கள் அனை​வ​ரும் தங்​கள் பொருள்​க​ளு​டன் முண்​டி​ய​டித்​துக் கொண்டு ஓடி​னர்.​ இத​னால் 12 மற்​றும் 13-வது பிளாட்​பார்ம்​க​ளில் கடும் கூட்ட நெரி​சல் ஏற்​பட்​டது.​÷இ​தில் பலர் கீழே விழுந்து மிதி​பட்​ட​னர்,​​ நெரி​ச​லால் சிலர் மூச்​சுத்​தி​ண​றல் ஏற்​பட்டு மயக்​க​ம​டைந்​த​னர்.​ இதில் பகல்​பூ​ரைச் சேர்ந்த சோனி என்ற பெண்​ணும்,​​ ஒரு சிறு​வ​னும் உயி​ரி​ழந்​த​னர்.​ மேலும் மூன்று பெண்​கள் உள்​பட 8 பேர் காய​ம​டைந்​த​னர்.​ர​யில்வே துறை​யின் அலட்​சி​ய​மான போக்​கால்​தான் 2 பேர் உயி​ரி​ழந்​த​தாக பய​ணி​கள் பலர் குற்​றம்​சாட்​டி​னர்.​இது குறித்து ரயில்வே கோட்ட மேலா​ளர் அஸ்​வின் லுகானி கூறி​யது:​13-வது பிளாட்​பார்​மில் வர​வேண்​டிய சம்​பூ​ரண கிராந்தி எக்ஸ்​பி​ரஸ் 12-வது பிளாட்​பார்​மி​லும்,​​ 12-வதில் வர​வேண்​டிய விக்​ர​ம​சீலா எக்ஸ்​பி​ரஸ் 13-வது பிளாட்​பார்​மி​லும் மாறி வந்​து​விட்​டது.​இந்த இரு ரயில்​க​ளுமே சுமார் 2.45 மணி​ய​ள​வில் கிளம்ப வேண்​டும் என்​ப​தால் கடைசி நேரத்​தில் பிளாட்​பார்ம் மாற்ற அறி​விப்பை வெளி​யிட வேண்​டி​ய​தா​யிற்று என்​றார் அவர்.​"பிளாட்​பார்ம் மாற்ற அறி​விப்பு வந்து உடன் பய​ணி​க​ளில் ஒரு​வரை ஒரு​வர் தள்ளி விட்டு அடுத்த பிளாட்​பார்​முக்கு மாற முயன்​ற​னர்.​ பலர் பெரிய சூட்​கேஸ்​கள்,​​ பேக்​கு​களை வைத்​தி​ருந்​த​தால் அது மற்​ற​வர்​கள் மீது இடித்து கீழே தள்​ளி​யது.​ பய​ணி​கள் செல்​வ​தற்​காக அமைக்​கப்​பட்ட பாலத்​தில் கூட்ட நெரி​சல் ஏற்​பட்​ட​தில் அதில் இருந்து ஒரு​வர் கீழே விழுந்​து​விட்​டார்.​ காய​ம​டைந்​த​வர்​கள் மருத்​து​வ​ம​னை​க​ளில் சேர்க்​கப்​பட்​டுள்​ள​னர்' என்று மற்​றொரு ரயில்வே அதி​காரி தெரி​வித்​தார்.​கடும் நட​வ​டிக்கை இந்த சம்​ப​வத்​துக்கு கார​ண​மா​ன​வர்​கள் மீது கடும் நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என்று ரயில்வே அமைச்​சர் மம்தா பானர்ஜி கூறி​யுள்​ளார்.​இது தொடர்​பாக விசா​ரணை நடத்த 3 நபர்​குழு ஒன்​றை​யும் அவர் அமைத்​துள்​ளார்.​உ ​யி​ரி​ழந்​த​வர்​க​ளின் குடும்​பத்​துக்கு தலா ரூ.​ 2 லட்​ச​மும்,​​ காய​ம​டைந்து மருத்​து​வ​ம​னை​யில் உள்ள 8 பேருக்கு தலா ரூ.​ 50 ஆயி​ர​மும்,​​ லேசாக காய​ம​டைந்​த​வர்​க​ளுக்கு ரூ.​ 15 ஆயி​ர​மும் ரயில்வே துறை​யால் வழங்​கப்​ப​டும் என்​றும் மம்தா அறி​வித்​துள்​ளார்.​
கருத்துக்கள்

இவ்வாறு நடைமேடை மாறுவதை அறிவிப்பதுமுதல் முறை யல்ல. எனக்கும் நான்கைந்து முறை இந்தஅவதி ஏற்பட்டுள்ளது. ஒரு முறை மதுரையில் மாறி மாறி 5 முறை நடைமேடை மாறுவதாக அறிவித்து அங்கும் இங்கும் அலைய விட்டார்கள். அதுபோல் கும்பகோணத்தில இருந்து சென்னை வருகையில் திருச்சிராப்பள்ளியில் மலைக்கோட்டை உடனே வேறு நடைமேடையில் இருந்து புறப்படுவதாக அறிவித்து அனைவரையும் அல்லல் படுத்தினர். ஆனால், கூட்ட நெரிசலில் சாவு ஏற்பட்ட முதல் துன்ப நிகழ்வாக இஃது இருக்கலாம். எனவே, இந்நிகழ்விற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பொதுவாக நாடு முழுமையும் இவ்வாறு அவ்வப்பொழுது நடைமேடை மாற்றம் முன்கூட்டி முடிவெடு்க்காமல் பயணிகளையும் வரவேற்கவும் வழியனுப்பவும வந்திருப்பவர்களையும் தொல்லைக்கு ஆளாக்கும் கெடுபிடி இடர்களைக் களைய தொடர்வண்டித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/17/2010 2:33:00 AM

இதெல்லாம் படிக்கிறபோதே நமக்கு பரிதாபமாக இருக்கிறதென்றால்,பாவம் அந்த இரண்டு ஜீவன்களும் குறிப்பாக அந்த சிறுவன் என்ன பாடுபட்டிருப்பான் ,உண்மையில் அந்த அதிகாரியை டிஸ்மிஸ் செய்யவேண்டும்,இல்லாவிட்டால் இதுமாதிரியான அலட்சிய அறிவிப்பை செய்யமுடியாது

By புண்ணாக்கு
5/17/2010 2:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக