திங்கள், 17 மே, 2010

இந்​தி​யா​வில் 100 தீவி​ர​வா​த குழுக்​க​ளுக்கு தடை



புது தில்லி,​​ மே 16: இந்​தி​யா​வில் 100 தீவி​ர​வா​தக் குழுக்​க​ளுக்கு தடை​வி​தித்து உத்​த​ர​விட்​டுள்​ளது மத்​திய அரசு.​இந் ​தி​யா​வில் தடை செய்​யப்​பட்ட தீவி​ர​வா​தக் குழுக்​க​ளின் பட்​டி​யலை மத்​திய உள்​துறை அமைச்​சம் தயா​ரித்​துள்​ளது.​ இதில் 100 தீவி​ர​வா​தக் குழுக்​கள் இடம்​பெற்​றுள்​ளன.​இதில் பஞ்​சாபை பிரித்து தனி காலிஸ்​தான் மாநி​லத்தை உரு​வாக்க வலி​யு​றுத்தி போராடி வரும் பப்​பர் கல்சா இன்​டர்​நே​ஷ​னல் ​(பிகேஐ)​,​​ காலிஸ்​தான் கமாண்டோ படை ​(கேசி​எப்)​,​​ சர்​வ​தேச சீக்​கிய இளை​ஞர்​கள் சங்​கம் ​(ஐஎஸ்​ஒய்​எப்)​ ஆகிய 3 தீவி​ர​வா​தக் குழுக்​கள் முக்​கி​ய​மா​னவை.​தவிர,​​ லஷ்​கர் இ-​தொய்பா,​​ ஜெய்ஷ்-​இ-​முக​மது,​​ தெஹ்​ரிக்-​இ-​பர்​கான்,​​ ஜமி​யாத்-​உல்-​முஜா​கி​தீன்,​​ அல்-​காய்தா,​​ ஹர்​கத்-​உல்-​முஜா​கி​தீன்,​​ ஹர்​கத்-​உல்-​அன்​சர்,​​ ஹர்​கத்-​உல்-​ஜிகாத்-​இ-​இஸ்​லாமி,​​ ஹிஸ்​புல் முஜா​கி​தீன்,​​ அல்-​உமர்-​முஜா​கி​தீன்,​​ ஜம்மு-​காஷ்​மீர் இஸ்​லா​மிய முன்​னணி,​​ உல்பா,​​ என்​டி​எப்பி,​​ விடு​த​லைப் புலி​கள் அமைப்பு ​(எல்​டி​டிஈ)​,​​ சிமி உள்​ளிட்​ட​வை​யும் அந்த பட்​டிய​லில் இடம்​பெற்​றுள்​ளன.​தீவி ​ர​வாத நட​வ​டிக்​கை​யில் ஈடு​ப​டு​வோ​ருக்கு எதி​ராக கடும் நட​வ​டிக்கை எடுக்​கும் விதத்​தில் சட்​ட​வி​ரோத செயல்​களை தடுக்​கும் சட்​டத்தை மத்​திய அரசு சமீ​பத்​தில் திருத்தி அமைத்​தது.​ இந்த சட்​டத்​தின் கீழ் இந்​தத் தீவி​ர​வா​தக் குழுக்​க​ளுக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.​மத் ​திய அர​சின் இந்த நட​வ​டிக்கை,​​ தீவி​ர​வா​தி​க​ளுக்கு எதி​ரான வழக்கை பாது​காப்பு அமைப்​பு​கள் திறன்​பட நடத்த உத​வி​யாக இருக்​கும் என்று பாது​காப்​புத் துறை​யி​னர் தெரி​வித்​துள்​ள​னர்.​தடை செய்​யப்​பட்ட தீவி​ர​வா​தக் குழுக்​கள் பற்றி பொது​மக்​கள் தெரிந்து கொள்​வது அவ​சி​யம்.​ இத​னால் பொது​மக்​கள் அறிந்து கொள்​ளும் விதத்​தில் தடை செய்​யப்​பட்ட தீவி​ர​வா​தக் குழுக்​கள் பட்​டி​யல் மத்​திய உள்​துறை அமைச்​ச​கத்​தின் அதி​கா​ரப்​பூர்வ இணை​ய​த​ளத்​தில் விரை​வில் வெளி​யி​டப்​ப​டும் என்று அந்த அமைச்​ச​கம் தெரி​வித்​துள்​ளது.​
கருத்துக்கள்

100 தீவிரவாதக் குழுக்கள் உள்ளன எனில் நாட்டில் ஆட்சி மிகவும் புரையோடிப் போய் உள்ளது என்பது தெரிகிறது. தடை செய்வதையே சாதனையாக எண்ணாமல் நாட்டு மக்களின் வறுமை, வேலையின்மை முதலியவற்றைப் போக்கவும் ஊழலை அடியோடு ஒழிக்கவும் சமநிலைக் கூட்டரசாக இந்தியக் கண்டத்தை மாற்றவும் முன்வரவேண்டும். மேலும் தீவிர வாதம் என்பது வேறு; வன்முறைச் செயல்பாடு என்பது வேறு; மக்கள் உரிமைக்காகப் போராடுவது என்பது முற்றிலும் வேறு; அயல்நாட்டுக் கைக்கூலிகளாகச் செயல்பட்டு நாட்டைச் சிதைப்பது என்பது அனைத்திலும் வேறுபட்டது. எனவே, எல்லாவற்றையும் ஒத்த அளவில் மதிப்பிடாமல் வேறுபாடுகளை அறிந்து வெவ்வேறு முறைகளில் சிக்கல்களைக் கையாண்டால் பாழ்செய்யும் உட்பகையை நீக்கலாம். எல்லாவற்றிற்கும் மூலமாக அமைவது அரசே பயங்கரவாத வன்முறைக் குழுவாகச் செயல்படும் கொடுமை என்பதை உணர்ந்து அதை நிறுத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/17/2010 2:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக