வியாழன், 8 ஏப்ரல், 2010

ஆயிஷாவை விவாகரத்து செய்தார் ஷோயிப்



ஹைதராபாத், ஏப்.7- பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக் தனது முதல் மனைவி ஆயிஷாவை விவாகரத்து செய்வதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

இத்தகவலை ஆயிஷாவின் குடும்ப நண்பரான ஷாம்ஸ் பாபர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா - கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக் இடையே திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா என்பவர் தனக்கும் ஷோயிப்புக்கும் இடையே ஜூன் 2002ல் திருமணம் நடைபெற்றதாக தெரிவித்தார். இதையடுத்து ஷோயிப்பின் பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டது.

ஆனால், இத்திருமணத்தை ஷோயிப் மறுத்து வந்த நிலையில், ஆயிஷாவை விவாகரத்து செய்வதற்கான ஆவணத்தில் அவர் இன்று கையெழுத்திட்டுள்ளார். மேலும், விவாகரத்து செய்ய சம்மதித்து ஆயிஷாவும் கையெழுத்திட்டுள்ளார்.

ஏப்ரல் 15ம் தேதி சானியா-ஷோயிப் திருமணம் நடைபெறுகிறது.

கருத்துக்கள்

விளையாட்டு வீரர்-வீராங்கனை வாழ்க்கை நல்லதாக அமைய வாழ்த்துவதை விட்டு விட்டு எதற்கு ஏதோ ஏதோ தொடர்பற்ற மோதல்கள்? வாழ்க மணமக்கள்! விலகியவரும் நல்ல வாழ்க்கைத் துணை அமைந்து நலமாய் வாழட்டும்! தவறான சொற்களைக் கையாளுபவர்கள் திருந்தியபின் நலமாய் வாழட்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/8/2010 2:33:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக