வியாழன், 8 ஏப்ரல், 2010

பி.இ.​ படிக்கும் முதல் தொட்டில் குழந்தை: பேரவையில் அரசு தகவல்



சென்னை, ​​ ஏப்.7:​ ""தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் முதன்முதலாக சேர்க்கப்பட்ட குழந்தை இப்போது பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறது'' என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் வி.பி.​ கலைராஜன்,​​ ""1992-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கப்பட்டது.​ அதனை உலகமே வரவேற்றது.​ இத்திட்டத்தின் கீழ் 1992-96-ம் ஆண்டு வரை 136 குழந்தைகளும்,​​ 2001-06-ஆம் ஆண்டு வரை 2,659 குழந்தைகளும் பெறப்பட்டன.​ ஆனால் இந்த திட்டம் இப்போது சரிவர செயல்படுத்தப்படவில்லை'' என்று குற்றம்சாட்டினார்.அதற்கு பதிலளித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசியது:தொட்டில் குழந்தைகள் திட்டம் திமுக ஆட்சியில் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது.​ இதன் மூலம் கிடைக்கும் குழந்தைகள் தொண்டு நிறுவனங்கள் மூலம் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தத்து கொடுக்கப்படுகின்றன.​ மீதமுள்ள குழந்தைகள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு காப்பகங்களில் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது ​(1992) முதன் முதலாக தொட்டிலில் பெறப்பட்ட குழந்தை இப்போது பொறியியல் கல்லூரியில் பி.இ. ​(எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்)​ படித்து வருகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கருத்துக்கள்

பாராட்டுகள்! திட்டத்தை அறிமுகப்படுத்திய ஆட்சியினருக்கும் தொடர்ந்து நிறைவேற்றும்ஆட்சியினருக்கும் பாராட்டுகள்! இனிமேல் தொட்டில் குழந்தை என்னும் நிலை வராத நன்னிலை உருவாட்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/8/2010 3:08:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக