ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

Latest indian and world political news information

சென்னை:மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களை, ஆதிதிராவிடர்கள் பட்டியலில் சேர்க்குமாறு, பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார்.பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதம்:கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களை, எஸ்.சி.,க்கள் பட்டியலில் சேர்ப்பதன் மூலம், ஆதிதிராவிடர்களுக்கான இட ஒதுக்கீடு சலுகைகளை அவர்களும் அனுபவிக்க வகை செய்யும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்னையை தங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இந்த பரிந்துரைகளை பரிசீலிக்குமாறு, ஏற்கனவே மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.


அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தப்பட்ட உத்தரவுப்படி, எந்த நபரும் இந்து, சீக்கிய, புத்த மதங்களைத் தவிர வேறு எந்த மதத்தை தழுவியிருந்தாலும், அவர்கள் ஆதிதிராவிடர்களாக கருதப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.முதலில், 1950ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தில், இந்து மதம் தவிர வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் ஆதிதிராவிடர்களாக கருதப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதைத் தொடர்ந்து 1956ல் செய்த திருத்தத்தில் சீக்கிய மதமும், 1990ல் செய்த திருத்தத்தில் புத்த மதமும், ஆதிதிராவிடர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.ஆதிதிராவிடர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அவர்கள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாகுபாடு காண்பிக்கப்படுகின்றனர் என தமிழக அரசு கருதுகிறது.


மேலும், மற்ற மதங்களை பின்பற்றும் ஆதிதிராவிடர்களுக்கும், அதற்கான சலுகைகள் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென தமிழக அரசு உறுதியளித்து வந்துள்ளது.எனவே, ஆதிதிராவிடர்களை மத ரீதியாக வேறுபடுத்தும் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பாராவை நீக்குவது தான் சரி என, தமிழக அரசு கருதுகிறது. இதனால், இவ்விஷயத்தில் தாங்கள் நேரடியாக தலையிட்டு, மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்களையும், ஆதிதிராவிடர்கள் பட்டியலில் சேர்க்க பார்லிமென்ட்டில் தேவையான திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.


நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |
மின்னஞ்சல் | RSS | Bookmark and Share


வாசகர் கருத்து
நமது முதல்வர் போன்றோர் இருக்கும்வரை தமிழனும் தமிழும் உருப்படாது !!! மத சண்டை முடியாது !!! இந்து மதம் வேண்டாமாம் ஆனால் இந்து மத சலுகை மட்டும் வேண்டுமாம் !! என்ன கொடும சார் இது வெரிகுட்
by KA SENGU,tRICHY,India 03-04-2010 12:55:36 IST
Why they should be considering as SC.There are no cast system in Islam and Christianity. The politicians are only creating this type of problems’ and MK always wanted Dalit people stays back and vote for his party. He will give 30 kg rice to dalit woman and Quarter to Dalit man. Please stop this. Let dalit should live their life with self respect even though they are poor. Please try for the equality
by T venkatesan,chennai,India 03-04-2010 12:11:45 IST
இதில் இருந்து என்ன தெரிகிறது அரசியலில் எந்த மதத்தை சேர்த்தவர்கள் அதிகாரத்தில் இருகிறார்களோ அவைர்கள் வெற்றி அடைகின்றார். வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக வழங்க படுகின்ற சலுகை அவர்கள் மதம் மாறியதினால் பறிக்கபடுகிறது என்றால் நாட்டின் மதசார்பின்மை என்பது போலி என்று நிருபனம் ஆகின்றது.
by AA ஹாஜா மைதீன் ,BruneiDarussalam,Brunei 03-04-2010 06:13:58 IST
if the so called forward community is once and for all destroyed, then no question reservation for this and that religion\caste arises. may be then India may flourish or our politician may have good sleep
by mohan kumar,chennai,India 03-04-2010 06:06:54 IST
இவர்கள் தான் அம்பேத்கரின் கொள்கைகளை காப்பாற்றுபவர்கள் மதம் மாற ஜாதி ஒரு காரணம் என்று கண்டுபிடித்தவர்கள் ஏன் இந்த சலுகைகளை எதிற்பார்க்க வேண்டும். அவர்களுக்கு தான் ஏகப்பட்ட கல்வி நிறுவனகள் மிஸ்ஸினரீஸ் முலம் நடத்த படுகிறதே
by s ராம்,chennai,India 03-04-2010 05:33:13 IST
நமது முதல்வர் போன்றோர் இருக்கும்வரை தமிழனும் தமிழும் உருப்படாது !!! மத சண்டை முடியாது !!! இந்து மதம் வேண்டாமாம் ஆனால் இந்து மத சலுகை மட்டும் வேண்டுமாம் !! என்ன கொடும சார் இது !!!
by கிருஷ்ணன் ,coimbatore,India 03-04-2010 04:26:05 IST
இவ்வாறான கோரிக்கையும் செயல்பாடும் தாய்மண் பண்பாட்டிற்கான சாவுமணி என்பதை யாரும் உணருவதில்லை. நேற்று வரை தமிழராக இருந்தவர் கிறித்துவராக மாறியதும், தமிழர் திருநாளாம் பொங்கல் நாளில் கடவுளுக்குப்படைக்கவில்லை எனக் கூறிப் பொங்கல அளித்தாலும் ஏற்பதில்லை. கிருத்துவ ஆண்டைத்தான் பின்பற்றுவோம் எனத் திருவள்ளுவர் ஆண்டைக் குறிப்பதில்லை. ஐரோப்பிய கிருத்துவ அறிஞர்கள் தமிழ் இலக்கியச் சிறப்பால் கவரப்பட்டு சமய இலக்கியங்களைப்படித்தாலும் மொழி பெயர்த்தாலும் சமயம் மாறவில்லை. அதுபோல் ஒருவர் எச்சமயக் கருத்தையும் போற்றத் தடையில்லை. ஆனால், சமய மாற்றம் என்பது பத்தாயிரத்துக்கு ஒன்று என்ற அளவில் மிகக் குறைவாகத்தான் இருக்க வேண்டும். வேறு சமயத்திற்குச் சென்றால் உயர்ந்த நிலை அடைவோம் எனக் கருதி அல்லது கற்பிக்கப்பட்டு அச் சமயத்தைப் பின்பற்றி மாறுபவர்கள் தாம் சார்ந்திருந்த சமயச் சலுகைகளை இழக்க வேண்டியதே முறையாகும். பிற சமயம் மாறுபவர்கள் அந்தப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதால் காலம் காலமாகப்பின்பற்றி வந்த மண்ணின் பண்பாட்டை உதறுகிறார்கள். (ஈழத்தில் இசுலாமியச் சமயத்தைப்பின்பற்றியதாலேயே தமிழர்களும் இசுலாமியர்களும் என வேறுபடுத்திக் காட்டி நடந்து கொள்வதை மறக்க வேண்டா.) சமய, சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்க உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. அதே நேரம் சமயம் மாறுபவர்களுக்குச் சலுகைகள் நீடிப்பது மடமை என உணர வேண்டும்.
by I. Thiruvalluvan,chennai,India 03-04-2010 03:26:16 IST

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக