புதன், 10 மார்ச், 2010

பெண்கள் அதிகாரத்துக்கு வந்தால் ஊழல் ஒழியும்



வேலூர், மார்ச் 8: லஞ்சம், ஊழல் ஒழிய பெண்கள் அதிகாரத்துக்கு வர வேண்டும் என விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் கூறினார்.உலக பெண்கள் தின விழாவையொட்டி, விஐடி பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியது:43 ஆண்டுகளுக்கு முன் நாடாளுமன்றத்தில் 5 சதவீத பெண்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். தற்போது இது 9 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலக மகளிர் தினம் கொண்டாடும் இத்தருணத்தில் மத்திய அரசு 33 சதவித இட ஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டுவர உள்ளது.வளர்ந்த நாடுகளில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படுகிறது. இதற்குக் காரணம் அங்கு பெண்கள் கல்வி கற்றவர்களாக உள்ளனர். நாட்டில் இன்று எந்தத் துறையாக இருந்தாலும் அதில் லஞ்சம், ஊழல் பெருகியுள்ளது. இதற்கு காரணம் பெண்கள் அதிகளவில் அதிகாரத்தில் இல்லாததே. லஞ்சம், ஊழல் ஒழிக்கப்பட வேண்டுமானால் பெண்கள் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்றார்.இக்கருத்தரங்கை தொடக்கி வைத்த, உலக கட்டமைப்பு வசதிகள் மற்றும் தீர்வுகள் நிறுவன தலைமை செயல் அலுவலர் டி.சபிதா பேசியது:உலக பெண்கள் தினம் கொண்டாடும் இத்தருணத்தில் பெண்கள் அனைத்துத் துறையிலும் அதிகாரம் பெற வேண்டும். எந்த பணியில் ஈடுபட்டாலும் அதில் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு இருந்தால் வெற்றி நிச்சயம். ஒரே நேரத்தில் பல துறைகளில் சாதிக்கும் திறமை படைத்தவர்கள் பெண்கள். பெண்களுக்கு தன்னம்பிக்கை உருவாகிவிட்டால் அவர்கள் எதிலும் வெற்றி பெறலாம் என்றார்.இணை வேந்தர் சேகர் விஸ்வநாதன், துணை வேந்தர் டி.பி.கோத்தாரி, சிபிஎஸ்டி இயக்குநர் எம்.ஏ.விஜயலட்சுமி, பேராசிரியர் ரஞ்ஜனிசுவாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

நகர்வாலா புகழ் இந்திராகாந்தி, மாயாவதி, செயலலிதா போன்ற முன் எடுத்துக் காட்டான அதிகாரப் பேயர்கள் ஊழல்களின் வேராகவும் விழுதாகவும் இருக்கையில் இவ்வாறு பொய்கூற எவ்வாறு மனம் வந்தது? பெண்களும் ஆண்களும் இணை என்ற நிலை என்றும் எங்கும் இருத்தல் வேண்டும் என்பது உண்மை. அதே நேரம் யாராயினும் ஊழலற்ற நேர்மையான தூய்மையான செம்மையான ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்பதே உண்மை. இவற்றிற்கும் ஆண் பெண் பாகுபாட்டிற்கும் எவ்வகைத் தொடர்புமில்லை. ஆனால், பெண்கள் நினைத்தால் ஊழலற்ற நிலையை உருவாக்க இயலும். ஆடம்பரத்தை எண்ணாமல் எளிமையான வாழ்வை விரும்பி அவ்வழியில் தத்தம் குடும்பத்தினரையும் திரு்ப்பினால் ஊழல் மறைந்து போகும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/10/2010 3:44:00 AM

Well said Mohan.

By gkh
3/10/2010 1:59:00 AM

Passport high official Sumathi Ravichandran, is crystal hand. ESI hospitaley medicinekku lakhs kannakkulay vangiyathu yar ? Jayalalitha is pure hand. Yove, pongayya, 100% yum koduthunkayya. Naadu nalla munnerum.,

By UNNAI POL ORUVAN
3/9/2010 9:15:00 PM

ஒவ்வொருத்தனோட பொண்டாட்டியும், தன் புருஷனை நேர்வழியில சம்பாதிக்க விட்டு, அந்த பணத்துல குடும்பம் பன்னங்கனாலே லஞ்சம் ஒழியும்... லஞ்சம் வாங்குறதே இவங்கலாலதானையா. 'தப்பான காசு வீட்டுக்குள்ள வரக்கூடாது'னு நினைக்கிற குடும்பதலைவிகள் யார் இங்கே? போங்கயா ஜோக் அடிக்காதிங்க.

By KUMAR
3/9/2010 8:40:00 PM

Are not Indra and Sonia Gandhis, Jayalalithaa, Mayavathi etc. proving this?

By mohan
3/9/2010 8:25:00 PM

yes they don't do the corruption directely,they do the corruption through their husband,brothers,and father

By suresh
3/9/2010 7:18:00 PM

வ‌டிவேலு ஒரு ப‌ட‌த்தில் சொல்லுவார் வெள்ளையா இருக்குர‌வ‌ன் பொய் சொல்ல‌ம‌ட்டான் என்று அதுபோல்தான் இந்த‌ ஜோக்கும். யார் சொன்னா பொம்ப‌ளைங்க‌ ல‌ஞ்ச‌ம் வாங்க‌மாட்டாங்க‌ என்று இந்த் வ‌ருட‌ம் ம‌ட்டும் எத்த‌னை ல‌ஞ்ச‌ம் வாங்கிய பென்க‌க‌ளை ல‌ஞ்ச‌ ஊழ‌ல் துறை கைது ப‌ன்னிய‌து என்று தெரியுமா ? அதிக‌மான‌ ஆன்க‌ள் ல‌ஞ்ச‌ம் வாங்க தொட‌ங்குவ‌தே பென்க‌ளால் (ம‌னைவி)தான் இது உல‌க‌த்துக்கே தெரியும். எப்ப‌டியோ ந‌ம்ம‌ பாராளும‌ன்ற‌ம் ந‌கை க‌டையாக‌வும் ஜ‌வுளிக‌டையாக‌வும் சும்மா மின்ன‌ போகுது. எம்.ஜே.அஜ்மீர் அலி

By M.J.AJMEERALI
3/9/2010 1:33:00 PM

power to women is very much necessary. It is an act of democratic society. But the corruption is part of human tendency. Either men or women it is common. We have many women leaders. we cant say they are uncorrupted.

By gopal
3/9/2010 10:11:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக