வியாழன், 11 மார்ச், 2010

தலையங்கம்:மூன்றில் ஒன்​றல்ல,​​ சரி​பாதி!



மக ​ளிர் இட​ஒ​துக்​கீடு மசோதா மாநி​லங்​க​ள​வை​யில் நிறை​வே​றி​ய​தற்கு சோனியா காந்​தி​யும்,​​ காங்​கி​ரஸ் கட்​சி​யும்,​​ ஐக்​கிய முற்​போக்​குக் கூட்​ட​ணி​யும்​தான் கார​ணம் என்​ப​து​போல ஒரு பிர​மை​யைக் கிளப்ப முற்​பட்​டி​ருப்​பது விசித்​தி​ர​மாக இருக்​கி​றது.​ கடந்த தேசிய ஜன​நா​ய​கக் கூட்​டணி ஆட்​சி​யில் இதே மசோ​தா​வைத் தாக்​கல் செய்ய முற்​பட்​ட​போது,​​ வெளி​யு​ல​குக்கு ஆத​ரவு தரு​வ​தாக அறிக்​கை​கள் விடுத்து,​​ சமா​ஜ​வாதி மற்​றும் ராஷ்ட்​ரீய ஜனதா தளத்தை மறை​மு​க​மா​கத் தூண்​டி​விட்டு மசோ​தா​வைத் தாக்​கல் செய்ய விடா​மல் தடுத்​த​தும் காங்​கி​ரஸ் கட்​சி​தான் என்​பது புத்​தி​சா​லித்​த​ன​மாக மறைக்​கப்​ப​டு​கி​றது.​பார​திய ஜன​தாக் கட்​சி​யும்,​​ இட​து​சா​ரிக் கட்​சி​க​ளும்,​​ இன்​ன​பிற மாநி​லக் கட்​சி​க​ளும் ஆத​ர​வுக்​க​ரம் நீட்டி இருக்​கா​விட்​டால் இந்த மசோதா மாநி​லங்​க​ள​வை​யில் நிறை​வேற்​றப்​பட்​டி​ருக்​காது என்​பது உல​க​றிந்த உண்மை.​ ஒரு​பு​றம்,​​ பிர​த​மர் மன்​மோ​கன் சிங் எதிர்க்​கட்​சி​க​ளுக்கு நன்றி தெரி​விக்​கி​றார்.​ இன்​னொ​ரு​பு​றம்,​​ இது ஏதோ சோனியா காந்​தி​யின் தனிப்​பட்ட வெற்றி என்​ப​து​போல காங்​கி​ரஸ் கட்​சி​யி​னர் சித்​தி​ரிக்​கி​றார்​கள்.​ இந்த மோச​டித்​த​னத்தை நாமும் வேடிக்கை பார்த்​துக் கொண்​டி​ருக்​கி​றோம்.​மக​ளி​ருக்​குச் சம உரிமை வேண்​டும் என்​ப​தில் யாருக்​கும் மாறு​பட்ட கருத்து இருக்க முடி​யாது.​ அதற்​காக மக​ளி​ரின் பெய​ரால் அரங்​கேற்​றப்​ப​டும் அர​சி​யல் அபத்​தங்​களை வேடிக்கை பார்த்​துக் கொண்​டி​ருக்க வேண்​டும் என்று நினைப்​ப​தும்,​​ இந்த மசோ​தாவை எதிர்ப்​ப​வர்​கள் ஏதோ ஆணா​திக்​க​வா​தி​கள் என்​றும்,​​ மக​ளிர் நலத்​தில் அக்​க​றை​யில்​லாத பிற்​போக்​கு​வா​தி​கள் என்று கரு​து​வ​து​போல முட்​டாள்​த​னம் வேறு எது​வும் இருக்க முடி​யாது.​மக​ளிர் இட​ஒ​துக்​கீடு மசோதா பற்​றிய ஊடக விவா​தங்​க​ளும் சரி,​​ அர​சி​யல் மற்​றும் சமூக ஆர்​வ​லர்​கள் வெளிப்​ப​டுத்​தும் கருத்​து​க​ளும் சரி,​​ நகைப்​பை​யும் வியப்​பை​யும் ஏற்​ப​டுத்​து​கின்​றன.​ பிர​த​ம​ரில் தொடங்​கிப் பல​ரும்,​​ முத​லில் மசோதா நிறை​வே​றட்​டும்,​​ பிறகு அதி​லுள்ள குறை​க​ளை​யும்,​​ தவ​று​க​ளை​யும் திருத்​திக் கொள்​ள​லாம் என்று கூறு​வது பகுத்​த​றி​வுக்கு ஒவ்​வாத வாத​மா​கத் தெரி​கி​றது.​ ​இந்த மசோதா முதன்​முத​லில் ஐக்​கிய முன்​னணி அர​சால் 1996-ல் முன்​வைக்​கப்​பட்டு 14 ஆண்​டு​கள் கடந்​து​விட்​டன.​ இந்த 14 ஆண்​டு​க​ளில் முழு​மை​யான விவா​தம் நடை​பெற வழி​வ​குத்து,​​ குறை​கள் களை​யப்​பட்​டி​ருக்​கி​றதா என்​றால் இல்லை.​ 14 ஆண்​டு​க​ளில் செய்​யா​ததை,​​ செய்​யத் தவ​றி​யதை மசோ​தா​வைச் சட்​ட​மாக்​கிய பிறகு செய்​கி​றோம் என்று கூறு​வது நம்​பும்​ப​டி​யாக இல்லை.​மக​ளிர் இட​ஒ​துக்​கீடு மசோதா சட்​ட​மாக்​கப்​பட்​டால் ஏற்​ப​டும் சில நடை​மு​றைச் சிக்​கல்​கள் பற்றி நேற்​றைய தலை​யங்​கத்​தி​லேயே குறிப்​பிட்​டி​ருந்​தோம்.​ வாக்​கா​ள​ருக்கு அர​சி​யல் சட்​டம் தரும் அடிப்​படை உரி​மை​யான தங்​க​ளுக்கு விருப்​ப​மான பிர​தி​நி​தி​யைத் தேர்ந்​தெ​டுக்​கும் உரிமை இந்​தச் சட்​டத்​தால் பாதிக்​கப்​ப​டு​கி​றது என்​ப​தை​யும் தெளி​வு​ப​டுத்தி இருந்​தோம்.​ இந்​தச் சட்​டம் நடை​மு​றைப்​ப​டுத்​தப்​ப​டு​மா​னால்,​​ நமது மக்​க​ளவை மற்​றும் சட்​டப் பேரவை உறுப்​பி​னர்​க​ளின் செயல்​பா​டு​கள்​கூ​டப் பெரிய அள​வில் முடக்​கப்​ப​டும் என்​ப​து​தான் உண்மை.​அவை​யில் மூன்​றில் ஒரு பங்கு இடங்​கள் சுழற்சி முறை​யில் மக​ளி​ருக்​காக ஒதுக்க வகை செய்​வ​து​தான் இந்​தச் சட்​டம்.​ 300 பேர் கொண்ட அவை​யாக இருந்​தால்,​​ தேர்​த​லுக்​குத் தேர்​தல் 100 இடங்​கள் மக​ளி​ருக்கு ஒதுக்​கப்​ப​டும்.​ சுழற்சி முறை​யில் மூன்று தேர்​தல்​கள் நடந்து முடி​யும்​போது 300 தொகு​தி​க​ளி​லும் ஒரு மக​ளிர் பிர​தி​நிதி தேர்ந்​தெ​டுக்​கப்​பட்​டி​ருப்​பார்.​ இது​தான் இந்​தச் சட்​டத்​தின் மூலம் ஏற்​பட இருக்​கும் பயன்.​அவை​யில் மூன்​றில் ஒரு பங்கு பெண் உறுப்​பி​னர்​கள்,​​ அடுத்த தேர்த​லில் ஒதுக்​கீடு அகற்​றப்​பட்டு விடு​வ​தால் மீண்​டும் போட்​டி​யி​டக் கட்​சி​யால் தேர்ந்​தெ​டுக்​கப்​ப​டு​வார்​களா என்​ப​தும்,​​ அப்​ப​டியே கட்சி அவர்​களை வேட்​பா​ளர்​க​ளாக்​கி​னால் வெற்றி பெறு​வார்​களா என்​ப​தும் சந்​தே​கமே.​ இன்​றைய நிலை​யி​லேயே,​​ பல தேர்ந்​தெ​டுக்​கப்​பட்ட உறுப்​பி​னர்​க​ளின் செயல்​பா​டு​கள் மெச்​சத் தகுந்​த​தாக இல்லை.​ மீண்​டும் உறுப்​பி​ன​ரா​கப் போவ​தில்லை என்​பதை உணர்ந்த பிறகு,​​ அந்​தப் பிர​தி​நிதி தனது நல்​வாழ்வை உறுதி செய்து கொள்​வாரா இல்லை தொகு​தி​யின் நல​னுக்​குப் பாடு​ப​டு​வாரா?​இன்​னொரு மூன்​றில் ஒரு பங்கு உறுப்​பி​னர்​கள்,​​ அடுத்த தேர்த​லில் தங்​க​ளது தொகுதி பெண் வேட்​பா​ள​ருக்​கான தொகு​தி​யா​கப் போவதை எதிர்​கொள்ள இருப்​ப​வர்​கள்.​ அடுத்​த​முறை தான் போட்​டி​யி​டவே போவ​தில்லை என்று உறு​தி​யா​கத் தெரிந்த பிறகு எந்த உறுப்​பி​ன​ரா​வது தனது தொகு​தி​யின் நன்​மை​யைக் கரு​திச் செயல்​ப​டு​வாரா?​ கிடைத்த வாய்ப்​பைப் பயன்​ப​டுத்​திக் கொண்டு தன்னை வளப்​ப​டுத்​திக் கொள்ள முயற்​சிக்க மாட்​டாரா?​எல்லா உறுப்​பி​னர்​க​ளும் அப்​படி இருப்​பார்​கள் என்று சொல்​லி​விட முடி​யா​து​தான்.​ நமது பெரு​வா​ரி​யான சட்​டப்​பே​ரவை மற்​றும் மக்​க​ளவை உறுப்​பி​னர்​கள் காந்​திய வழி​யில் மக்​கள் தொண்​டாற்​று​வ​தற்​கா​கவே தங்​க​ளது வாழ்க்​கையை அர்ப்​ப​ணித்த தியா​க​சீ​லர்​கள் என்​ப​தில் சந்​தே​கமே இல்லை.​ ஆனால்,​​ வரப்​போ​கும் காலங்​க​ளில் தேர்ந்​தெ​டுக்​கப்​பட இருக்​கும் சட்​டப்​பே​ரவை மற்​றும் மக்​க​ள​வை​க​ளில் மூன்​றில் இரண்டு பகு​தி​யி​ன​ரில் பெரும்​பான்​மை​யி​னர் இந்த மக​ளிர் இட​ஒ​துக்​கீடு மசோதா நிறை​வேற்​றப்​பட்ட பிறகு அடுத்த தேர்த​லில் போட்​டி​யி​டப் போவ​தில்லை.​ தொகு​தி​யைப் பற்றி கவ​லைப்​ப​டப் போவ​தில்லை.​ அப்​ப​டிப்​பட்ட சூழ்​நி​லை​யில் ஒரு நல்​லாட்சி நடை​பெ​றும் என்று நாம் கரு​த​வில்லை.​இன் ​னொரு பேரா​பத்​துக்​கும் இது இட​ம​ளிக்க வாய்ப்​புண்டு.​ அடுத்த தேர்த​லில் தாங்​கள் போட்​டி​யிட முடி​யாது என்​பது தீர்​மா​ன​மா​கத் தெரிந்த மூன்​றில் இரண்டு பங்கு உறுப்​பி​னர்​கள்,​​ அந்த அர​சும் ஆட்​சி​யும் எத்​த​கைய மக்​கள் விரோத நட​வ​டிக்​கை​யில் ஈடு​பட்​டா​லும் ஆட்சி கவி​ழா​ம​லும் மீண்​டும் தேர்​தல் வரா​ம​லும் பார்த்​துக் கொள்​வார்​கள்.​ ஒரு மக்​கள் விரோத அரசு 5 ஆண்​டு​கள் முழு​மை​யா​கத் தொட​ரும்.​ ஆனால்,​​ ஜன​நா​ய​கம் காப்​பாற்​றப்​ப​டுமா?​அப்​ப​டி​யா ​னால் மக​ளி​ருக்கு ஆட்​சி​யி​லும் அதி​கா​ரத்​தி​லும் பங்கு கிடைக்க என்​ன​தான் வழி?​ இருக்​கி​றது.​ மக​ளிர் இட​ஒ​துக்​கீடு மசோ​தா​வுக்​கா​கச் சட்​டம் இயற்​று​வதை விட்​டு​விட்டு,​​ மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டத்​தில் மாற்​றம் கொண்​டு​வர வேண்​டும்.​ அங்​கீ​க​ரிக்​கப்​பட்ட கட்​சி​கள் எது​வாக இருந்​தா​லும்,​​ பூத் கமிட்​டியி​லி​ருந்து கட்​சி​யின் செயற்​குழு வளர மக​ளி​ருக்கு சரி​பாதி இடங்​களை ஒதுக்​கியே தீர வேண்​டும் என்​ப​து​டன் வேட்​பா​ளர் பட்​டிய​லி​லும் மக​ளிர் சம உரிமை பெற்று சரி​பாதி இடங்​க​ளில் இடம் பெற வேண்​டும்.​இது​தான் மக​ளி​ரின் நியா​ய​மான உரி​மை​யும்,​​ மக்​க​ளாட்​சித் தத்​து​வத்​தின் உணர்​வை​யும் உறுதி செய்​யுமே தவிர,​​ இப்​போது நிறை​வேற்​றப்​பட இருக்​கும் மக​ளிர் இட​ஒ​துக்​கீடு மசோதா ஊழலை அதி​க​ரிக்​க​வும்,​​ மக்​க​ளாட்​சித் தத்​து​வத்​தைத் தடம் புர​ளச் செய்​ய​வும்,​​ மக​ளிரை அர​சி​யல் கட்​சித் தலை​வர்​க​ளின் கைப்​பா​வை​யாக மாற்​ற​வும்​தான் வழி​கோ​லும்.​​ இத​னால் பய​ன​டை​யப் போவது மக​ளி​ரும்,​​ மக்​க​ளு​மல்ல.​ ஆண் அர​சி​யல்​வா​தி​க​ளும் ஆட்​சி​யா​ளர்​க​ளும் என்று எச்​ச​ரிக்க நாம் கட​மைப்​பட்​டி​ருக்​கி​றோம்!
கருத்துக்கள்

ஆழமாகச் சிந்தித்து எழுதியுள்ளீர்கள். ஆனால் இவையெல்லாம் இப்பொழுது செவிடன் காதில் ஊதிய சங்குதானே! என்ன பயன்?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/11/2010 2:28:00 AM

Well thought article. If any women representative, can not able to re-contest and/or re-elect from same constituency (because of the rotation), then why the hell they will take care of their constituents? They will try to make good money in 5 years and will settle for ever. It is one of the stupidest, anti democratic, discriminating bill. Instead, they should have passed a bill that makes all the recognized political parties must give compulsory tickets to 33% women; if not the party recognization should be cancelled by election commission.

By Babu, USA
3/11/2010 2:24:00 AM

இலங்கையின் நிர்மாணத்துறை மற்றும் அபிவிருத்தித்துறைகளுடன் தொடர்புடைய மொத்தக் கடன் தொகையில் அரைவாசிக்கும் அதிகமான அளவு சீனாவிடமிருந்தே கிடைத்து வருவதாக கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் கூறியிருந்தது. நாட்டின் தென் பிராந்தியத்தில் அமைக்கப்படும் இந்த விமான நிலையம் சர்வதேச விமானங்களுக்கான இரண்டாவது தளமாக திகழவுள்ளது. அதிகரித்துவரும் இவ்வாறான பல்வேறு வேலைத்திட்டங்களுக்கும் சீனாவிடமிருந்து இருநூறு மில்லியன் டொலர்கள் வரையான நிதி கிடைக்கின்றது. விமான நிலையத்தின் நிர்மாண வேலைகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. இதற்கு சற்று அயலிலேயே ஹம்பாந்தோட்டையில் பெருந்துறைமுகமொன்றுக்கான நிர்மாணப்பணிகளும் பெருமெடுப்பில் நடந்துவருகின்றன. இதற்கான நிதியும் சீனாவின் பாரிய கடனுதவி வழங்கும் நிறுவனமான ஏற்றுமதி இறக்குமதி வங்கியினால் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வேலைத்திட்டங்களின் கட்டுமானப் பணிகளும் சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்றினாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனாவின் இந்த நிதியுதவிகள் மூலம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்குப் பிராந்தியத்திற்கான வீதி அபிவிருத்தி, தலைநகரில் பிரம்மாண்டமான அரங்கமொன்று

By nelaa
3/11/2010 2:15:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக