வெள்ளி, 12 மார்ச், 2010

ஓமந்​தூ​ரா​ருக்கு மணி மண்​ட​பம் கட்ட ​அதி​முக ஆட்​சி​யில் நிலம் கைய​கப்​ப​டுத்​தப்​பட்​டது​: ஜெயல​லிதா



சென்னை, ​​ மார்ச் 11:​ ஓமந்​தூர் ராம​சாமி ரெட்​டி​யா​ருக்கு மணி மண்​ட​பம் கட்ட அதி​முக ஆட்​சி​யில் நிலம் கைய​கப்​ப​டுத்​தப்​பட்​டது என்று அதி​முக பொதுச்​செ​ய​லா​ளர் ஜெயல​லிதா தெரி​வித்​துள்​ளார்.​மார்ச் 7-ம் தேதி விழுப்​பு​ரத்​தில் நடை​பெற்ற அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை தொடக்க விழா​வில் பேசிய முதல்​வர் கரு​ணா​நிதி,​​ ""ஓமந்​தூர் ராம​சாமி ரெட்​டி​யா​ருக்கு அவர் பிறந்த ஊரில் மணி மண்​ட​பம் கட்​டப்​ப​டும்'' என்று அறி​வித்​தார்.​÷அ​தற்கு பதி​ல​ளிக்​கும் வகை​யில் ஜெயல​லிதா வியா​ழக்​கி​ழமை வெளி​யிட்ட அறிக்கை:​÷""திமுக எம்.எல்.ஏ.​ சிவ​ரா​ஜின் கோரிக்​கையை ஏற்று ஓமந்​தூர் ராம​சாமி ரெட்​டி​யா​ருக்கு அவர் பிறந்த ஊரில் மணி மண்​ட​பம் கட்​டு​வ​தற்​கான அனைத்து நட​வ​டிக்​கை​க​ளும் எடுக்​கப்​ப​டும்'' என்று மார்ச் 7}ம் தேதி விழுப்​பு​ரத்​தில் நடை​பெற்ற அரசு விழா​வில் முதல்​வர் கரு​ணா​நிதி அறி​வித்​துள்​ளார்.​÷ஓ​மந்​தூர் ராம​சாமி ரெட்​டி​யா​ருக்கு மணி மண்​ட​பம் அமைப்​ப​தற்​காக 15}6}2004 அன்று விழுப்​பு​ரம் மாவட்​டம்,​​ திண்​டி​வ​னம் வட்​டம் ஓமந்​தூர் கிரா​மத்​தில் நிலம் கைய​கப்​ப​டுத்​தப்​பட்​டது.​ அதற்​காக ரூ.​ 75 லட்​சம் மதிப்​பீட்​டில் கருத்​துரு திட்​ட​மி​டப்​பட்​டது என்​ப​தைச் சுட்​டிக்​காட்ட விரும்​பு​கி​றேன்.​÷அ​தன் பிறகு திமுக ஆட்​சிக்கு வந்​த​தும் மணி மண்​ட​பம் கட்​டு​வது குறித்து பொதுப்​ப​ணித் துறை தலை​மைப் பொறி​யா​ளர் 23}6}2006 அன்று அர​சுக்கு அறிக்கை அனுப்​பி​னார்.​ ÷அ​தனை பரிசீ​லித்த திமுக அரசு,​​ ""ராம​சாமி ரெட்​டி​யா​ருக்கு மணி மண்​ட​பம் அமைப்​பது தொடர்​பாக அர​சின் ஒப்​பு​தல் வேண்டி கோரப்​பட்ட தங்​க​ளின் செயற்​கு​றிப்பு அர​சால் ஏற்​ப​தற்​கில்லை'' என்று தமிழ் வளர்ச்சி,​​ அற​நி​லை​யங்​கள் மற்​றும் செய்தி ​(நினை​வ​கங்​கள்)​ துறை இணைச் செய​லா​ளர் 9}8}2007 அன்று விழுப்​பு​ரம் மாவட்ட ஆட்​சி​ய​ருக்கு கடி​தம் எழு​தி​யுள்​ளார்.​÷இதி​லி​ருந்து ஓமந்​தூர் ராம​சாமி ரெட்​டி​யா​ருக்கு மணி மண்​ட​பத்தை நிரா​க​ரித்​த​வர் கரு​ணா​நிதி என்​பதை மக்​கள் எளி​தில் புரிந்து கொள்​ள​லாம்.​ ஓமந்​தூர் ராம​சாமி ரெட்​டி​யார் உயர்​நி​லைப் பள்ளி அதி​முக ஆட்​சிக் காலத்​தில் மேல்​நி​லைப் பள்​ளி​யாக தரம் உயர்த்​தப்​பட்​டது.​சு​தந்​தி​ரப் போராட்ட தியா​கி​க​ளுக்கு திமுக ஆட்​சி​யில் மட்​டுமே நினைவு மண்​ட​பங்​கள் எழுப்​பப்​பட்​டது என்​பது தவ​றா​னது.​ அதி​முக ஆட்​சி​யி​லும் நினைவு மண்​ட​பங்​கள் எழுப்​பப்​பட்​டன.​வ.உ.​ சிதம்​ப​ர​னா​ருக்கு திரு​நெல்​வே​லி​யில் ரூ.​ 75 லட்​சம் செல​வில் மணி மண்​ட​பம்,​​ கிருஷ்​ண​கிரி மாவட்​டம் தொரப்​பள்​ளிக்கு அரு​கில் மோர்​னப்​பள்​ளி​யில் ராஜா​ஜிக்கு மணி மண்​ட​பம் கட்ட ஒரு ஏக்​கர் நிலம் தேர்வு,​​ ஈரோடு மாவட்​டம் அரச்​ச​லூர் கிரா​மத்​தில் தீரன்​சின்​ன​ம​லைக்கு மணி மண்​ட​பம் கட்ட 3 ஹெக்​டேர் நிலம் கைய​கப்​ப​டுத்​தப்​பட்​டது,​​ சென்னை திரு​வல்​லிக்​கே​ணி​யில் பார​தி​யா​ருக்கு நினைவு இல்​லம்,​​ விரு​து​ந​க​ரில் காம​ரா​ஜர் நூற்​றாண்டு நிறைவு விழா நினை​வுத் தூண் அமைக்க ரூ.​ 14 லட்​சம் ஒதுக்​கீடு,​​ மருது சகோ​த​ரர்​க​ளுக்கு திருப்​பத்​தூ​ரில் நினை​வ​கம்,​​ ஸ்ரீபெ​ரும்​பூ​தூ​ரில் ராஜீவ் காந்​திக்கு நினை​வ​கம்,​​ பெரி​யா​ருக்கு வைக்​கத்​தில் நினை​வ​கம்,​​ சென்​னை​யில் அம்​பேத்​கர் மணி மண்​ட​பம் கட்ட நிலம் ஒதுக்​கீடு,​​ முத்​து​ராம​லிங்​கத் தேவர்,​​ பெரும்​பி​டுகு முத்​த​ரை​யர்,​​ வீரன் அழ​கு​முத்​துக்​கோன் ஆகி​யோ​ருக்கு சிலை​கள் என அதி​முக ஆட்​சி​யில் பல்​வேறு நினை​வுச் சின்​னங்​கள் எழுப்​பப்​பட்​டன என்று ஜெயல​லிதா கூறி​யுள்​ளார்.
கருத்துக்கள்

தி.மு.க. ஆட்சியின் வழிகாட்டுதலில் அதிமுக ஆட்சியிலும் நினைவு போற்றும் பணிகள் நடைபெற்றுள்ளன என்பது உண்மைதான். இதனைக் கூட உடனுக்குடன் மறுக்காததைதப்பாரக்கும் பொழுது இவருக்கும் அறிக்கை உருவாக்குநருக்கும் உள்ள இடை வெளி தெரிகிறது. மேலும் இரண்டு ஆட்சியிலும் சீர்காழித் தமிழிசை மூவர் மணிமண்டபம் போன்ற சில தி்ட்டங்கள் இழுத்தடிக்கப்படுவதும் நிகழ்ந்துள்ளன என்ற உண்மையை இரு தரப்பாரும் ஒத்துக் கொள்ள வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
3/12/2010 3:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக