சனி, 20 பிப்ரவரி, 2010

முல்லைப் பெரியாறு தமிழகம் விட்டுக் கொடுக்கவில்லை: முதல்வர் கருணாநிதி



சென்னை, பிப்.19: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழக அரசு ஏமாந்து விட்டதாகக் கூறுவது அரசியல் பிரசாரம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுகுறித்து, கேள்வி}பதில் வடிவில் வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை குறித்து ஐந்து பேர் கொண்ட குழுவை, உச்ச நீதிமன்றம் அமைத்திருக்கிறது. அணைப் பிரச்னை தொடர்பான வழக்கில், குறிப்பாக கேரள அரசு நிறைவேற்றிய கேரள நீர்ப்பாசனம் மற்றும் நீர் சேமிப்புச் சட்டம் (திருத்த மசோதா) 2006 செல்லத் தக்கதல்ல என்று தக்க ஆதாரங்களுடன் வாதிட்டோம்.அதற்கு நேர் மாறாக கேரள அரசு தனக்கு அத்தகைய சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு என்றும், உரிமை உண்டு எனவும் வாதிட்டது.வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, இதற்கொரு நடுவர் மன்றம் அமைக்கலாமா என்ற ஆலோசனையை தெரிவித்தது. அதை தமிழகம் ஏற்க மறுத்தது. ஆனால், கேரளம் அதனை வரவேற்றது.இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் முடிவெடுப்பதற்கு வசதியாக, அரசியல் சாசனம் 131-வது பிரிவின் கீழ் ஐந்து பேர் கொண்ட குழுவை நீதிபதி ஆனந்த் தலைமையில் அமைத்துள்ளது.இந்தக் குழு, அணை பாதுகாப்பு மற்றும் நீர் மட்ட உயரம் முதலியவற்றை பரிசீலனை செய்து அதன் அறிக்கையை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு ஆறு மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றம் தான் தெரிவித்து இருக்கிறது.இந்த நிலையில், தமிழக அரசு எதையும் விட்டுக் கொடுத்து விடவில்லை. கேரள அரசுக்குச் சாதகமாக எந்தவிதமான முடிவும் வந்து விடவில்லை. அதற்குள் சிலர் ஏதோ தமிழக அரசு ஏமாந்து விட்டது; விட்டுக் கொடுத்து விட்டது என்றெல்லாம் கூறுவது அரசியல் பிரசாரம் தவிர வேறல்ல.தேசிய ஆதி திராவிடர் ஆணையத்தின் துணைத் தலைவர், திமுக அரசு மீது திடீர் பாய்ச்சல் நடத்தியிருப்பது ஏன்?புறம் கூறுவது ஒன்றையே வேலையாக வைத்துக் கொண்டு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர், அருந்ததியர் முன்னேற்றத்துக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஓரிருவர் ஒழுங்கு முறையோடு செயல்படவில்லை என்பதற்காக நடவடிக்கைக்கு ஆளாகக் கூடும் என்ற நடுக்கத்தில் பிதற்றியதை நம்பி பேசியிருக்கிறார்'' என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருத்துக்கள்

ஆதி திராவிடர் நலன் குறித்து முதல்வர் அவர்கள் உண்மையிலேயே கருத்து செலுத்தி நல்ல ஆணைகள் பலவற்றைப் போட்டுள்ளார். ஆனால் அவரது அதிகாரிகள் அவற்றை மீறி எதிராகச் செயல்படுகின்றனர். அவரது கட்டுப்பாட்டில் உள்ள கலை பண்பாட்டுத் துறையில் ஆதி திராவிடர்க்கான ஒதுக்கீடு ஒன்று கூட இல்லை என்பதை உணர்ந்து இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற கடுமையான ஆணையைப் போட்டார். ஆனால் , ஊழலில் திளைத்த ஒழுக்கக் கேடானவர் ஒருவர் குறுக்கு வழியில் அப்பதவிக்கு வந்தமையால் இதை அப்படியே புறக்கணித்துவிட்டு ஆதி திராவிடர்க்குரிய பணியிடங்களில் பணங்களைக் கொட்டிக் கொடுத்தவர்கள் தகுதிகள் இல்லாத பொழுதே நியமித்து விட்டார். உண்மையிலேயே நல்ல எண்ணத்துடன் ஆதி திராவிடர் நலனுக்கான ஆணைகளைப் பிறப்பித்த முதல்வர் அவர்கள் இம் முறைகேடான அனைத்து நியமனங்களையும் நீக்கம் செய்து உரிய ஒதுக்கீட்டு அடிப்படையில் மறு நியமனங்கள் மேற்கொள்ள வேண்டும். ஊழல்பேர் வழிகளின் பணங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்.

நம்பிக்கையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/20/2010 3:20:00 AM

வவுனியா சித்திரவதை முட்கம்பி தடுப்பு முகாங்களிலிருந்து 1049 பெண்கள் கொழும்பு பூசா சித்திரவதை தடுப்பு முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். செட்டிக்குளம் மெனிக்பாம் முட்கம்பி தடுப்பு முகாம், பம்பைமடு சித்திரவதை பெண்கள் தடுப்பு முகாம்களிலிருந்தே பெண்கள் பூசா சித்திரவதை தடுப்பு முகாமிற்கு சிறீலங்காப் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இன்று 19.02.10 கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தமிழ்பெண்கள் சிங்கள இராணுவத்தின் பாலியல் தேவைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய கோத்தபாய இராயபக்ச கூறியுள்ளார், இது இந்தியாவின் ஆலோசனையின் படிநடக்கின்றதா என்று எண்ணத்தோன்றுகிறது

By eelavan
2/20/2010 3:20:00 AM

Tamils're a laughable group of people indeed. Rajapaksha said,"On excellent ties with India That's right. Because I'm very clear. When I say something, I stick to it. When I say ‘yes,' yes. When I say ‘no,' no. With India, I think I have been very clear in my policy. Consistent, never changed. They were a little worried about my connection with China. For development, China, Japan and all these [Asian] countries will come and invest. That is a different question. India is our close neighbour. I always say, ‘India is my relation. Others are my friend" India always help Rajapaksha to haras Tamils who want freedom. Indian Indian Tamils has back bone to help other Tamil nation becuase karunanithi and his family bend knee to Delhi.

By Thamilsangam
2/20/2010 3:15:00 AM

நாங்கள் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்களுக்கு எதுவும் விடுபடாதவகையில்தான் கொடுப்போம்.ஈழத் தமிழர்கள் பல்லாயிரவர் உயிர்களை விட்டுக் கொடுத்த எங்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா? கேரள அரசு காலங் கடத்துவதில் வெற்றி பெற்றது என்றால் அவர்களது கோரிக்கையும் காலங்கடத்தப்படுகின்றது என்பதுதானே பொருள்? எனவே நமக்கு இது வெற்றிதானே!. நல்ல முடிவு வரும் என்று நம்பிய மக்கள் ஏமாந்தால் என்ன முடிவு வரும் என அறியும் அரசு எப்படி ஏமாந்ததாகச் சொல்ல முடியும்?-இப்படியும் நாளை அறிக்கை விடலாமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/20/2010 3:12:00 AM

Modern Goebels

By Ibrahim
2/20/2010 2:44:00 AM

2001ஆம் ஆண்டில் உச்சநீதி மன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டபோது அணையின் பலத்தைக் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தரு மாறு டாக்டர் டி.கே. மிட்டல் தலை மையில் 15 நிபுணர்கள் கொண்ட குழுவையும், டாக்டர் எஸ்.எஸ்.பிரார் தலைமையில் 20 நிபுணர்கள் கொண்ட குழுவையும் நியமித்தது.ஆய்வுகளை நடத்தி அணை பலமாக உள்ளது என்றும் 142 அடிக்கு தண்ணீர் மட்டத்தை உயர்த்தலாம் என்றும் பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் ஆய்வறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் 2001ஆம் ஆண்டில் தாக்கல் செய்தனர்.

By செம்படை
2/20/2010 2:22:00 AM

2006 பிப்ரவரி 27ஆம் நாளில் தலைமை நீதிபதி சபர்வால், நீதியரசர்கள் தக்கர், பாலசுப்பிரமணியம் ஆகிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற ஆயம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அணை பலவீனமாக இருக்கிறது என கேரளம் கூறும் புகாருக்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும் அணையின் நீர் மட்டத்தை 142அடிக்கு உயர்த்தலாம் என்றும் கூறியது.16-09-09 அன்று மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெயராம் ரமேசு புதிய அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்துவதற்கு கேரளத்திற்கு அனுமதி கொடுத்து விட்டார். ஆனால் உடனடியாக இப்பிரச்சினையை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று இதை தடுத்து நிறுத்த வேண்டிய வேலையை தமிழக அரசு செய்யவில்லை. தில்லியில் செய்ய வேண்டியதை செய்யாமல் மதுரையில் 1-11-09 அன்று மத்திய இணையமைச்சரைக் கண்டிக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தப் போவதாக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

By செம்படை
2/20/2010 2:18:00 AM

ஆனால் 21-10-09 அன்று தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில் இணனயமைச்சரைக் கண்டித்து கூட்டம் என்பது மாற்றப்பட்டு பெரியாறு புதிய அணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டம் என மாற்றப்பட்டது.பிறகு அந்தக் கூட்டத்தையும் நடத்தும் துணிவும் தி.மு.க.வுக்கு இல்லை. காங்கிரசோடு மத்திய அரசில் தி.மு.க.வும் அங்கம் வகிக்கிறது. ஆனால் காங்கிரசுக்கு எதிர்க்கட்சியான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் அச்சுதானநதன் தில்லியில் சாதிக்க முடிந்ததை கருணாநிதியால் தடுக்க முடியவில்லை. தில்லி அமைச்சருக்கு எதிராக கண்டனக் கூட்டத்தைக் கூட நடத்தும் துணிவு தி.மு.க.வுக்கு இல்லை. இது கேரளத்திற்கு வெற்றியாகும்.

By செம்படை
2/20/2010 2:17:00 AM

..he..he..he no kaveri water..no mullai water..he..he what else INDIAN TAMIL SLAVES GET ....except..free meal.free tv..free liquor..free wife....support this walking corpse...in next election he will give you double buriyani..double 500-rupees notes....may be double wives..to follow him

By KOOPU
2/20/2010 2:09:00 AM

இலங்கைக்கான ஐ.நா வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வெய்ஸ். இலங்கை அரசை சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என் றும் அவர் கோரியுள்ளார்.ஆஸ்திரேலியாவின் ஏ.பி.சி. செய்திச் சேவைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை அரசினால் கடந்த வருடம் நாட்டை விட்டு வெளியேறுமாறு பணிக் கப்பட்ட வெய்ஸ், தற்போது ஐக்கிய நாடு கள் \பைக்கான தனது 14 வருட சேவையில் இருந்தும் இராஜிநாமாச் செய்துள்ளார்.தற்போது ஆஸ்திரேலியாவில் தங்கி யுள்ள கோர்டன் வெய்ஸ் இலங்கை மோதல் குறித்து புத்தகமொன்றை எழுதி வருகி றார்.இலங்கை அரசு சர்வதேச சமூகத்தை ஏமாற்றியது எனத் தனது பேட்டியில் குறிப் பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள் ளவை வருமாறு:சுமார் 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான பொதுமக்கள் ஜனவரிக்கும் மே மாதத்திற்கும் இடையில் பலியாகினர் என நான் கேள்விப்பட்டேன்.பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த நம் பகத்தன்மை மிக்க வட்டாரங்களே இத னைத் தெரிவித்தன.பொதுமக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத் திற்கு இலங்கை அரசு தொடர்ச்சியாக இக் காலப் பகுதியில் உறுதியளித்து வந்தது

By mugelan
2/20/2010 1:44:00 AM

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிடிபட்டால் அவரைக் கெளரவமாக நடத்த வேண்டும்'' கருணாநிதி விடுத்திருக்கும் வேண்டுகோள் விஷமத்தனமானது. தீய உள்நோக்கம் கொண்டது இந்திய, சீன, பாகிஸ்தான் நாடுகள் வாரி வழங்கியுள்ள நவீன ஆயுதங்களை ஏந்திப் போராடும் சிங்கள இராணுவத்தை எதிர்த்து வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை பிரபாகரன் நமது மக்களைக் காப்பாற்றப் போராடும் புலிகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூறவோ அல்லது ஈழத்தமிழர்கள் மீது நச்சு வாயுக் குண்டுகளை வீசி கொடூரமாகக் கொலை செய்யும் சிங்கள வெறியர்களைக் கண்டிப்பதற்கோ இதுவரை முன்வராத கருணாநிதி அவர்களின் முதுகில் குத்துவதைப் போன்று பேசியிருப்பதைத் தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.கருணாநிதியின் விஷமத்தனமான விருப்பம் தமிழர்கள் முதுகில் குத்துவது

By thinees
2/20/2010 1:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திரு அன்வர்சா! நீங்கள் சொல்வது ஒருவகையில் உண்மைதான். ஆனால், அதே நேரம் வேலைவாங்கவும் தெரிந்துள்ளார். அப்படியானால் கோளாறு எங்கே? தகுதியற்றவர்களை நம்பி அவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பதுதான் அனைத்துத் தவறுகளுக்கும் காரணம்.அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தான்என்றுஏவற்பாற்று அன்று (குறள் 515)என்னும் குறளைக் கடைப்பிடிக்காமைதான். மேலும் ஆதிதிராவிடர் இட ஒதுக்கீடு தொடர்பாக நடந்துள்ள மோசடி குறித்துச் சில முறை நான் எழுதியுள்ளேன். உங்களைத்தவிர யாரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. நீங்களும் மூலச் செய்தி குறித்துக் கேட்கவில்லை. ஆனால், இம்மோசடி முதல்வர் அவர்களுக்கே தெரியாமல் நடந்தது என்பதுதான் உண்மை. இருப்பினும் பதவி வழிப் பொறுப்பு அவரையும் சாரும். ஆகவே, தேசிய ஆதிதிராவிட ஆணயத்தின் துணைத் தலைவர் பாய்ந்ததில் தவறில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
2/20/2010 10:10:00 AM

தமிழகம் கெட்டு சீர் குலைந்து நிற்பதற்கு இந்த வயதான சீப் மினிஸ்டரும் அவர் குடும்பத்தின் தென் மாநில வியாபாரமுமே ஆகும். அன்று சர்க்காரியா கமிஷனுக்காக கட்ச தீவை கொடுத்தொழிந்தார். இன்று இவரின் குடும்ப தொழிலுக்காக ஆந்திரா பாலாற்று தண்ணீரையும், செல்வி சுகமாக இருக்க கர்நாடக காவிரியையும் மாறன் குடும்ப தொலை காட்சியும் மற்ற பல இத்யாதி தொழிலுக்கும் முல்லை பெரியாரை கேரளத்துக்கும் தாரை வார்த்து விட்டு, கமுக்கமாக ஒண்ணுமே தெரியாத வடிவேலு போல இந்த பெரியவர் பேந்த பேந்த முழிக்கிறார். இன்னும் பல பல தில்லு முல்லுகள் செய்து தமிழக சரித்திரத்தில் "இப்படி நடக்க கூடாத தலைவராக" உருவெடுத்து விட்டார் கருணாநிதி. இவரின் தொடர்ச்சி தமிழகத்தின் வீழ்ச்சி AND VICE VERSA.

By pannadai pandian
2/20/2010 10:01:00 AM

திருமாவளவன் தலைமையில் கலைஞருக்கு பாராட்டு விழா. திருமாவளவன் இந்த நாய் இப்ப தெலுங்கு நாய் கருணாநிதி க்கு குடுத்துகிட்டு இருக்கு இவன் எல்லாம் தப்பாம தப்பா பொறந்தவன்கிறதா நிருபிசிட்டன் தமிழன் தமிழன்னு சொல்லி தமிழன் கழுத்த் அறுத்தவன் இத்தாலி கழுதையும் சப்பானி தெலுங்கு கழுதையும் கழுத்தை அறுத்தது தெரிந்த விடயம். இந்த திருமாவளன் கொடிய பாம்பு கூட இருந்தே குழி பறிச்சவன் காலம் மாறும் போது இத்தகைய கயவர்களுக்கு காலம் பாடம் புகட்டும்

By abdul
2/20/2010 9:29:00 AM

tamil natil valuvathu 20 percent tamilan 20 percent malayali (kerala) 10 percent karnatakakaran 50 percent other states kaaran, sathiiyama solluran innum kongan kalam ponaal tamilan kanamal poi veduvan polirukku. idil namakku sare samamaai iruppathu indha malayali than ithun kooda kerala goverment dukku thereum therenthum antha kerala goverment dukku yenna problem, idai yaan politics aakuranga, manidanai manidana nenaikavendum. ada stupid people this can be shortout very easily this is not ROCKET SCIENCE but both government will not going to shortout this issue, in between the peoples gets struggles. pls all the reader try to give your good ideas abou this issue.

By mohammed
2/20/2010 8:23:00 AM

SOME SRILANKAN TAMILS ARE CONTINUOUSLY INTERFERING IN THE COMMENT SECTION WITHOUT ANY CONNECTION WITH THE ARTICLE TO BE COMMENTED.FOR EXAMPLE THE COMMENTS BY THINEES,MUGELAN,THAMIZH SANGAM AND EELAVAN.I REQUEST TO DINAMANI,PLEASE I REQUEST DINAMANI DO NOT ALLOW THIS.THIS IS DILUTING THE FEELINGS AND CONCERNS OF THE PEOPLE REGARDING TO THE SERIOUS ISSUES POSED BY THE ARTICLE.THE SRILANKAN TAMILIANS THEY DO NOT HAVE ANY INTEREST ON TAMINADU'S PROBLEMS.PLEASE FILTER THEM OUT.

By TAMILNADU
2/20/2010 7:54:00 AM

தன் பிள்ளை தன் சோறு தன் குடும்பமம் என என்பது தாண்டி நூ றை எட்டப்பிடிக்கும் தலைவன் புத்தியில் புரை ஏறி போனதால் தமிழகம் அநாதை ஆனது . குடும்ம விசுவாசிகளின் வீட்டு விளக்குமாதிலும் வெள்ளி குஞ்சங்கள் பன்னீர் குளியல் முற்றத்தில் இருக்கும் காவல் நாய்க்கு கூட முத்துமாலை என அடம்பரத்தின் உச்சக்கட்டம் முல்லை பெரியாறு பற்றி பேச போராட களம் அமைக்க வந்த தமிழ் மக்களின் நம்மிக்கை நாயகன் வைகோவே வாழ்க . .

By மு. சந்திரசேகரன்
2/20/2010 7:37:00 AM

அய்யா கருணாநிதி. ஏற்கனவே அணையை ஆராய நிபுணர் குழு அமைத்து, அந்தக் குழுவும் அணையின் நீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம், எந்த பாதிப்பும் வராது என்று அறிக்கை கொடுத்ததே. அது என்ன ஆயிற்று? திரும்பத் திரும்ப எத்தனை குழுக்கள் அமைத்து காலம் கடத்துவது? காவேரி பிரச்சனை முதல் கச்சத் தீவு பிரச்சனை வரை கடிதம் எழுதி காலம் கடத்தி தன் பதவிக்கு எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக்கொள்வது தானே உங்கள் பாணி. குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் ஓட்டுப் போடும் தமிழன் இருக்கும்வரை உங்களை யாரும் அசைக்க முடியாது.

By TruthMustBeTold
2/20/2010 6:45:00 AM

how long this karunanithi (lier) is ruling tamil nadu, this type of cheating for tamil nadu continue.

By bparani
2/20/2010 6:41:00 AM

கருணாநிதி வாயில் தலையை விட்டாலும் கடிக்காத கிழட்டு சிங்கம் என்பதை பக்கத்து மாநிலத்துக் காரர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பக்கத்து மாநிலத்தை பகைத்துக் கொண்டால் தனது குடும்ப தொல்லைக் காட்சியின் வியாபாரம் பாதிக்கப்படும் அல்லவா.

By கழகபசு
2/20/2010 6:31:00 AM

இந்திய இறையாண்மைக்கு எதிராக கேரளா மற்றும் தாக்கரே குடும்பம் செயல்படுவது யாருக்கும் தெரிவதில்லை

By VKM
2/20/2010 4:25:00 AM

ஐயா கே கே, நிறுத்து உன் காமெடி வசனத்தை, தமிழினம் இருண்டது உன்னால். உன்னால்தானையா காவிரி, கட்ச தீவு, மீனவர்களின் வாழ்வு இழந்தோம். தனக்கு சிலைகளையும், தன் பேரில் tv, இலவச tv, கவர்ச்சி கடிதங்களே உன் சாதனைகள்.

By Murugan
2/20/2010 3:58:00 AM

தமிழகம் எதையும் விட்டுக் கொடுக்கவில்லை : முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முதல்வர்
Front page news and headlines today

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக