திங்கள், 15 பிப்ரவரி, 2010

திபெத்தியர்கள் புத்தாண்டை கொண்டாட வேண்டாம்: தலாய் லாமா



தர்மசாலா, பிப்.14- திபெத்தியர்கள் புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என்று திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தர்மசாலாவில் உள்ள புத்தர் கோயிலில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் தரிசிக்க வந்தனர். அவர்களிடையே பேசுகையில் தலாய் லாமா இவ்வாறு தெரிவித்தார்.

''திபெத்தில் வாழும் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்ப்பதாக அறிவித்துள்ளனர். அவர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பு கொடுத்து திபெத்தியர்கள் அனைவரும் புத்தாண்டு கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும். திபெத்தில் வாழும் மக்களைவிட வெளிநாடுகளில் வாழும் திபெத்தியர்ளுக்கு அதிக சுதந்திரம் உள்ளது.'' என்றார் தலாய் லாமா.

கருத்துக்கள்

திபேத்தில் வாழும் திபேத்தியர்கள் விருப்பத்தைப் பிற நாடடிலுள்ள திபேத்தியர்கள் நிறைவேற்றுகின்றனர். தமிழ் ஈழத்தில் வாழும் தமிழர்கள் விருப்பத்தைத் தமிழ் நாட்டிலுள்ள தமிழர்கள் நிறைவேற்றுவரா?

வினாவுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/15/2010 2:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக