புதன், 11 நவம்பர், 2009

கூடுதல் மறுவாழ்வு மையங்கள்: இலங்கை அரசு அமைக்கிறது



கொழும்பு, நவ.10: விடுதலைப் புலிகள் அமைப்பில் முன்பு வீரர்களாக இருந்ததாகக் கூறப்படும் 11,000 சிறுவர்களுக்கு விரைந்து மறுவாழ்வு ஏற்படுத்தும் முயற்சியாக மேலும் 7 மறுவாழ்வு மையங்களை அமைக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.தற்போது 14 மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இலங்கை ராணுவத்திடம் சரணடைந்து தற்போது அரசின் பாதுகாப்புக் காவலில் உள்ள சிறுவர்களுக்காக புதிதாக 7 மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக இலங்கை அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.இந்நிலையில் புதிய மறுவாழ்வு மையங்கள் அமையவுள்ள வளாகங்களை நீதித்துறை அமைச்சர் மிலிண்டா மோரகொடா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.
கருத்துக்கள்

இந்தியா வாய் திறக்காது என்பதெல்லாம் தவறான எண்ணம். தனது ஆணைகள் சரியாகத திட்டமிட்டுச் செயல்படுத்தப்படுகின்றனவா என்று கண்டு கேட்டு மகிழும். தன் கட்சிக்காரரான சங்கரலிங்கம் அவர்கள் தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு உண்ணா நோன்பு இருந்தபொழுது தன் கட்சிக்காரர் என்று பார்க்காமல் தமிழன்தானே! மடியட்டும் என்று வேடிக்கை பார்த்து உயிரிழக்கச் செய்த காங்கிரசு அடுத்த நாட்டுத்தமிழர்கள்வாழ உதவுமா? தமிழர்களை வாழ விடாமல் ஏதேதோ பெயர்களில வதை முகாம்களைப் பெருகு்கவதில் கவனம் செலுத்துகின்றது. காங்கிரசு ஆட்சியை ஓட ஓட விரட்டினால்தான் நாமும் உருப்படுவோம்! நாடும் உருப்படும்! உலகத் தமிழர்களும் வாழ்வு பெறுவர். காஙகிரசின கைகால்களைக் கட்டிப்போட்டால் இராசபக்சேக்களின் செயல்பாடுகளும் கட்டிப் போடப்படும். முதுபெரும் தலைவரே காங்கிரசிற்குத துணைநிற்கும் பொழுது அதனை யார் என்ன செய்ய முடியும்? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/11/2009 3:15:00 AM

மூளைச்சலவை செய்யப்பட்ட, சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய அப்பாவிச் சிறுவர்களிற்கு இலங்கை அரசு மனிதாபமான முறையில் அமைக்கும் மறுவாழ்வு மையங்கள் வரவேற்கத்தக்கதே. இவை வெறும் கண்துடைப்பாக இல்லாமல் இனப்பிரச்சனையை தீர்க்கும் முயற்சியாக இருக்கவேண்டும். தமிழக மக்களும், தமிழக அரசும், இந்தியாவும் இம்முயற்சிகளிற்கு ஆதரவளிப்பதன் மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தத்தைக் கொடுத்து மேலும் பல முயற்சிகளைச் செய்யத் தூண்ட முடியும். இனப்பிரச்சனைக்கு இலங்கை அரசு சரியான தீர்வை கொடுத்தே ஆகவேண்டும்.

By Ravi
11/10/2009 11:10:00 PM

தமிழின துரொஹி ரத்த வெரி பிடித்த வெரி நாய் ராஜபக்ஷேவை முதலில் ஒலிக்க வேண்டும் என்பதே தமிழர்களின் எண்ணம்.

By usanthan
11/10/2009 10:36:00 PM

ஜெயில் என்ற சொல்லுக்கு புதுப்புது வார்த்தைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது சிங்கள அரசு. ஹிட்லர் கூட இந்த அளவுக்கு யோசிக்கவில்லை. புதிய பெரிய சிறைகள் கட்டுவதை விட திறந்தவெளி முள்வேலி சிறைகள். செலவும் குறைவு. சித்திரவதை வேலையில் பாதியை இயற்கை பார்த்துக்கொள்ளும். இந்தியா கண்களை மூடிக்கொள்ளும். காதுகளையும் போத்திகொள்ளும். வாயையும் திறக்காது. இந்தியாவுக்கு வந்தால் பட்டுக்கம்பளம் விரித்துக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். வேறு என்ன வேண்டும் ராஜபட்சேக்கு. .

By மதுரைக்காரன்
11/10/2009 10:02:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக