வியாழன், 14 அக்டோபர், 2010

ராஜபட்ச அழைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: சென்னையில் ம.தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்


சென்னை, அக். 13: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து ம.தி.மு.க. சார்பில் சென்னையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்ததற்காக சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியவர் ராஜபட்ச.  ஆனால், அவரை தில்லியில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவுக்கு அழைத்து கெüரவப்படுத்துவது, தமிழர்களுக்கு எதிரான செயல் ஆகும்.  எனவே, ராஜபட்சவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவும் ம.தி.மு.க. சார்பில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் வியாழக்கிழமை (அக். 14) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

தமிழின அழிப்பில் தனக்குரிய பங்கை வெளிப்படுத்துவதில் வெட்க உணர்வோ அவமான உணர்வோ குற்ற உணர்வோ சிறிதும் இல்லாத இந்திய ஆட்சியாளர்களை அப்புறப்படுத்தி உரிய தண்டனை வாங்கித்தர அனைத்து மனித நேயர்களையும் ஒன்றுபடுத்திப் போராட வேண்டும். சிறு சிறு போராட்டங்கள் எங்கோ நடைபெறுவது கண்டு கொலைகாரக் குற்றவாளிகள் யாரும் கவலைப்படுவது கிடையாது. அவர்கள் திட்டமிட்டுக் காய்களை நகர்த்தித் தம் அழிப்பு வேலைகளைச் சரியாகச் செய்துவிடுகிறார்கள். எனவே நாம்தான் விழிப்பாக இருந்து அனைத்துப் போர்க்குற்றவாளிகளுக்கும் இனப்படுகொலைகாரர்களுக்கும் தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும். 
மனித நேயத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/14/2010 3:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக